Monday, December 31, 2007

2007 என் பதிவுகளில் சில - தொகுப்பு

பதிவர் சந்திப்புகள், பதிவர் பட்டறைகள் , சக பதிவர்கள் நட்பு ஆலோசனை அரட்டைகள் என ஊக்கப்படுத்தப்பட்டதன் பயனாக இந்த வருடத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியாகிவிட்டது. அவற்றில் பெரும்பான்மையானவை சுமாரான சிறுகதைகளாக இருப்பினும் பின்னூட்டம் அளித்து ஊக்கம் கொடுத்த பதிவர் வட்ட வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்த வருடத்தில் நான் எழுதி , என்னாலும் பிறராலும் ரசிக்கப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு இது.

நல்ல நாள் என்ற குட்டிகதை” வருடத்தின் முதற்பதிவாக இருப்பினும், அது முன்னமே எழுதி மீள்பதிவு செய்யப்பட்டதால் குரு பட விமர்சனமே ஜனவரியின் முதற்பதிவாக அமைந்தது.

பேயும் காதலும் இல்லாமல் உங்களால் கதை எழுத முடியாதா என ஜெனி கடிந்து கொண்ட போது பெரும் உத்வேகத்துடன் எழுதப்பட்ட நேர்மறைக் கதைதான் “நானும் கடவுள்களும் - சிறுகதை”
இந்தக் கதை பூங்காவில் வெளிவரும் என மிகவும் எதிர்பார்த்தேன். இதைவிட சிறந்த படைப்புகள் அவ்வாரம் வந்திருந்ததால் இதற்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பிடத்தக்க விசயம் இந்தக் கதையை ஜெனி படித்துவிட்டு பாராட்டி சில மணி நேரம் தொலை பேசி உரையாடல் கொடுத்தது தான்..

அதிகம் பார்வையிடப்படாத ஆனால் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தால் பாராட்டப்பட்ட திகில் கதை “லால்குடி Days - சிறுகதை "

கல்லூரி் ஜூனியர் சொன்ன உண்மை சம்பவத்தை அப்படியே கதையாக்கியது தான் “ஆர்குட்ல தேடு - சிறுகதை

தமிழ்மண பூங்காவில் வெளிவந்த முதல் கதை ஒரு ஞாயிற்றுக்கிழமை

பதிவுலக நண்பர்களுடன் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கித் தந்தது கோவை பதிவர் பட்டறை. அதனைப் பற்றிய ஒரு வரைவு கோவை வலைப்பதிவர் பட்டறை

நான் எழுதின திகில் கதைகளிலேயே அதிகம் கிலியூட்டகூடிய கதை என இதைச் சொல்லலாம்
”கதையில் வந்த பெண்- சிறுகதை”


வலையுலகக் கூட்டுத்தொடரான “பார்த்த ஞாபகம் இல்லியோ என்ற தொடரை முடித்து வைத்தப் பெருமை என்னையேச் சாரும்.

இதே பெயரில் ஆங்கிலப் படத்தை தழுவி எழுதப்பட்டக் கதை ”Pay it forward"
இப்படி மனசாட்சி இல்லாமல் காப்பி அடிக்கிறியே என்று ஒரு பின்னூட்டம் வந்த போது ஒரு வேளை சாப்பாடு செல்லவில்லை.

சென்னை வலைப்பதிவர் பட்டறையைப் பற்றிய என் பார்வை ”கற்றதும் கற்றுக் கொடுத்ததும்

நெடுநாட்களுக்குப் பிறகு மீண்டும் ஜெனியின் கடிந்துரைகளால் எழுதப்பட்ட பாசிடிவ் கதை “கற்கை நன்றே

கடைசியாக இந்த மாதத்தில் எழுதிய புதுவை வலைப்பதிவர் பட்டறைப் பற்றிய ஒரு கட்டுரை. புதுவைவலைப் பதிவர் பட்டறை ஒரு மைல்கல்


ஆயிற்று இந்த “Best of 2007 - Vinaiooki" பதிவுடன் 143 பதிவுகள் இந்த வருடத்தில் பதிந்தாயிற்று. மேலும் தரமான பதிவுகளை வரும் வருடத்தில் தருவேன் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வளமும் நலமும் அனைவரின் வாழ்வினில் செழிக்கட்டும்.

தமிழ் சசிக்கு நன்றி , சில மணி நேரத்தில் அடிப்படைத் திரட்டி உருவானது

கடந்த வாரம் பதிவான தமிழ் சசி அவர்களின் “ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி” என்ற இடுகையின் துணைக் கொண்டு ஒரு அடிப்படைத் திரட்டியை வினையூக்கி.கோம் தளத்தில் ஒரு துணைத் தளமாக நிறுவியாகிவிட்டது. வருட இறுதியில் ஒரு சுவாரசியமான மென்பொருளை தளத்தில் நிறுவி சின்ன சின்ன விசயங்களை கற்றுக் கொண்டது பேருவகையாக இருந்தது.

திரட்டியைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.

Saturday, December 29, 2007

கோபக்கார சுனில் கவாஸ்கரின் நடத்தையும் 1981 ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டமும்

1981 ஆம் ஆண்டு, இடம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0 - 1 என இந்தியா பின் தங்கி இருந்த நிலையில் கடைசி ஆட்டத்தின் நான்காவது நாள், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி பந்து வீச வேகமாக ஓடி வருகிறார். கவாஸ்கர் தடுத்தாட முயற்சிக்கிறார். விக்கெட் முன் கால் என்ற வகையில் முறையில் நடுவரிடம் முறையிடப் படுகிறது. நடுவர் ரெக்ஸ் வொயிட்ஹெட் கவாஸ்கர் ஆட்டமிழந்தார் என கைத்தூக்க , பந்து மட்டையில் பட்டது என புலம்பிக் கொண்டே மைதானத்தில் வெளியேறிக் கொண்டு இருக்கையில் திடிரென திரும்பி மறுமுனையில் நின்ற மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சேத்தன் சௌகானையும் அழைத்துககொண்டு மைதானத்தில் இருந்து வெளியேற எத்தனிக்கையில் அப்போதிய அணி மேலாளர் விங் கமாண்டர் துரானி மைதானத்தின் எல்லைக்கு வந்து கவாஸ்கரை சமாதனப் சமாதனப் படுத்தி சேதன் சௌகானை திரும்ப அனுப்பி ஆட்டத்தை தொடரச் செய்தார்.



இந்த ஆட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக இது அமைந்தது எனக் கூறலாம். 324 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அன்றிரவு நடந்த ஒரு விருந்தில் இந்தியக் கிரிக்கெட்டைப் பற்றி ஏளனமாக ஆட்டக்காரர்களின் முன்னிலையிலேயே பேசப்பட்டதாம். காயம் காரணமாக பந்து வீச முடியுமா என்று சூழலில் இருந்த கபில்தேவ் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு பந்து வீச ஆரம்பித்தார். Cricket is a glorious game of uncertainities என்பது மற்றொரு முறை நிருபணமானது. ஆம் கபில்தேவி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 1- 1 என்று தொடரையும் சமன் செய்தது.




இந்த ஆட்டத்தின் விபரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

Friday, December 28, 2007

நாலாவது தெருவில் நான் சந்தித்த மனிதர் - சிறுகதை

நகரங்கள் விரிவடைகின்றன, கிராமங்கள் சுருங்குகின்றன.. சில வருடங்களுக்கு முன்னர் வரை கிராமமாகக் கருதப்பட்ட எங்க ஊர் அதற்கான அடையாளங்களைத் தொலைத்து, வயல்வரப்புகள் எல்லாம் குட்டிசாலைகளாக மாறி, விவசாய நிலமெல்லாம் வீடுகளாய் மாறித்தொலைத்திருந்தது.இப்போ எங்க ஊர் நகரமும் இல்லாம கிராமமாகவும் இல்லாமல் ஒரு கலவையா இருக்கு... விலைவாசி நகரங்கள் அளவுக்கு, அடிப்படை வசதிகள் கிராம அளவுக்கு.. இரண்டாவது ஷிப்டு முடிந்து வீடு திரும்பும் ஒவ்வொரு இரவிலும் என் மனதில் ஓடும் எண்ணம் இது. இன்னும் 10 நிமிடமாவது ஆகும் என் வீடு போய் சேர, வழக்கம்போல கையில் ஒரு தடியை எடுத்துக் கொண்டேன்.. நாலாவது தெருவில நாய்கள் அதிகம்.. நாலாவது தெருவில் திரும்பியதும் என்னைப் பார்த்து குலைத்துப் பழக்கப்பட்ட நாய்கள் இன்றைக்கும் அமைதியாக இருந்தன. ஒரு வேளை நான் அவைகளுக்குப் பழக்கமாகிவிட்டேனோ!!

இந்த நாலாவது தெருதான் எங்க ஊரின் பணக்காரத் தெரு.எல்லாம் வீடும் கிட்டத்தட்ட குட்டி மாளிகைகள். நான் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் நாலாவது தெருவில் முருகேசனை மட்டும் தான் தெரியும். மற்ற வீடு எல்லாம் கடைசி நாலைந்து வருடங்களில் பக்கத்து நகரத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். முருகேசன் அப்பாதான் அந்த இடங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்றவர்.

அமைதியாக இருந்த நாய்களை ஒரு எச்சரிக்கை உணர்வுடன் பார்த்துக் கொண்டே, சிறிது தூரம் கடந்த போது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ஒருவர் எனக்கு எதிர் திசையில் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன்..2 அடித்து 10 நிமிடங்கள் ஆகி இருந்தன. அருகில் வந்த ஆள் சிரித்தபடி,

“என்ன தம்பி, கையில தடி எல்லாம்!!?”

“இந்த தெருவில நாய்ங்க ஜாஸ்தி, ஒரு சேஃப்டிக்கு, நீங்க யாரு சார், இந்த நேரத்தில” கேட்கும்போதே எனக்கு மனதில் லேசாக ஒரு உதறல்.. இந்த நேரத்தில் இதற்கு முன்னர் இங்கே யாரையும் பார்த்ததில்லை... கழுத்தை தடவி சாமிப் படம் போட்ட டாலர் இருக்கான்னு ஒரு முறை பார்த்துக்கிட்டேன். இனி பயமில்லை.இருந்தாலும் அவரை தலையில் இருந்து பாதம் வரை நோட்டம் பார்த்தேன்... கால் இருக்கா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவருடைய வேட்டி தரை வரை இருந்தது.
அவரது குரலிலும் பார்வையிலும் ஏதோ ஒரு அமானுஷ்யம் இருப்பது போல உணர்வு..
தூக்கக்கலக்கத்தில் நேரங்கெட்ட நேரத்தில இப்படி ஒருத்தரை பார்க்கிறதுனால ஏற்பட்ட பிரமையாக் கூட இருக்கலாம்.

”சும்மா காத்தாட நடக்கலாம்னு தான்” அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் கிட்டத்தட்ட அந்த தெருவின் பாதி தூரம் கடந்திருந்தேன்.

நான் எங்கே வேலை பார்க்கிறேன், என்னோட வீடு எங்கே எல்லாம் கேட்டுக் கொண்டே வந்த அந்த வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி மனிதர் நாலாவது தெரு முடிவடையும் இடம் வந்ததும் “தம்பி என் எல்லை முடிஞ்சது.. நீங்க புறப்படுங்க?” அவர் திரும்ப நாலாவது தெருவின் அடுத்த முனையை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தார். கால்கள் தெரிகிறதா எனப் பார்த்தேன்.. ம்ஹூம் ம்ஹூம் வேட்டி மறைத்திருந்தது.

ஐந்தாவது தெருவின் ஆரம்பத்தில் இருந்த மாரியம்மன் கோவிலில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேகவேகமாக வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் மாலை வேலைக்குப் போகும்பொழுது முந்தைய இரவு பார்த்த நபர் கண்ணில் படுகிறாரா என பார்த்தபடி நாலாவது தெருவைக் கடந்தேன். கலகலப்பாக இருந்த தெருவில் நிறைய ஆட்கள் தென்பட்டாலும் அந்த மனிதரைக் காணவில்லை.

அன்றிரவு நாலாவது தெரு வழியாக வீடு திரும்பும்பொழுது, ஒரு வீட்டின் படிக்கட்டில் அந்த நபர் உட்கார்ந்திருந்ததைக் கண்டும் காணாமலும் போக எத்தனித்தபோது, அவரேக் கூப்பிட்டார். “என்ன தம்பி கண்டுக்காம போறீங்க... உங்களுக்காகத் தான் காத்திக்கிட்டு இருந்தேன்.. “


“இல்லை , சார் கவனிக்கல.. சாரி”

வர்றப்போற கோடைக்காலம் எப்படி இருக்கும் என்று பேச்சை ஆரம்பித்தார். என் நினைப்பெல்லாம் எப்படியாவது சீக்கிரம் இந்த தெருவைக் கடக்க வேண்டும் என்பது தான். நாலாவது தெரு முடிந்ததும் விடைபெற்றார். ஆர்வக் கோளாறில் ”வாங்க சார் அடுத்த தெருவரைக்கும் பேசிக்கிட்டே நடப்போம்” நான் சொல்ல

“அவரவர் எல்லைகளில் இருப்பதுதான் எல்லோருக்கும் நலம்.. எல்லை மீறும்பொழுது தான் பிரச்சினையே “ என்று சொல்லி சிரித்தார்.

மறுநாள் காலை அந்த ஆளை ஒரு முறையாவது பகலில் பார்த்துவிடலாம் என்று சீக்கிரமாகவே எழுந்து நாலாவது தெருப் பக்கம் போனேன். இரண்டு மணி நேரம் அப்படி இப்படி வெயிலில் நடந்து தலைவலி வந்தது தான் மிச்சம்.

அடுத்தடுத்த நாட் இரவுகளில் சரியாக அந்த தெருவில் நான் வரும்பொழுது நிற்பார்.நான் அந்த தெரு கடக்கும் வரையில் எதாவது பேசிக்கொண்டே வருவார். அரசியல் ஆன்மீகம் , கடவுள் , அமானுஷ்யம் இப்படி பேச்சு பலவிதங்களில் ஆரம்பிப்பார். நான் பதில் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டு மட்டும் வருவேன். தினமும் பேசிக்கொள்வதால் அவர் மேல் இருந்த அந்த அமானுஷ்ய பயம் போய் இருந்தது. பேய்களிடம் கூட தொடர்ந்து பேசினால் பழக்கமாகிவிடும் போல... ஆமாம் அந்த ஆள் என் மனதில் பேய் என்றே பதிந்து விட்டார்.
எனக்கும் பேய்களை விட நாய்களின் மேல் அதிக பயம் இருந்ததால் அந்த ஆள் இருப்பது எனக்கு வசதியாகவே பட்டது.

ஒரு இரண்டு வாரம் போய் இருக்கும். அவரைக் காணவில்லை. மறு நாள், அதற்கடுத்த நாள்... மூன்றாவது நாள் இரவு கொஞ்ச நேரம் காத்திருந்துக் கூடப் பார்த்தேன். அவர் வரவில்லை.பத்து நாட்கள் ஓடிப்போனது. அவர் நினைவில் இருந்து மறைந்து போனார்.
பொங்கலுக்கு கான்பூரில் இருந்து முருகேசன் வந்திருந்தான். அவனைப் பார்க்க அவன் வீட்டிற்குப் போய் இருந்தேன். அவனிடமும் அவன் குடும்பத்தினருடனும் நலம் விசாரிப்புகளுக்குப் பின்,

“முருகேசா, இந்த தெருவில் பளீர்னு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுகிட்டு இருக்கிற ஆள் யாராவது உனக்குத் தெரியுமா?”

“ஓ தெரியுமே... வேதநாயகம்.. தமிழ் வாத்தியார்.. ராமசாமி வீட்டுல திருடு போன பிறகு எங்கத் தெருவுக்கு அவர் தான் இரவுக்காவல்... இந்த வயசிலேயும் மனுசனுக்கு எவ்வளவு சுறுசுறுப்பு தெரியுமா.. இரண்டு வாரம் முன்ன அவரோட பையன் வீட்டுக்குப் போனவர் கொஞ்சம் ஹெல்த் கண்டிசன் சீரியஸ் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்காரு..நல்லபடியாயிடுவாருன்னு நினைக்கிறேன்.. நாளைக்கு நானும் அப்பாவும் அவரைப் பார்க்க போறோம்.. நீ வர்றீயா”

“இல்லைடா ..நீ போயிட்டு வாடா?”

நான் வேதநாயகத்தை பேய்னு நினைத்தது ஞாபகம் வந்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
என்னோட புது கைத்தொலைபேசி எண்ணை முருகேசனுக்கு கொடுத்துவிட்டு அவன் வீட்டில் இருந்து விடைபெற்றேன்.

அடுத்த வாரம் எனக்கு ஷிப்டு மாறியிருந்ததால் இரவு 10 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அட .. வேதநாயகம் அவர் வீட்டு வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார்.

“ஹல்லோ சார், எப்படி இருக்கீங்க சுகமா... “

“ம்ம்ம் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன்..”

அவரிடம் அவரை பேய் என்று நினைத்ததை அசடு வழிய சொன்னேன்.

வாய்விட்டு சிரித்துவிட்டு “ஆமாம் , இந்த நேரத்துல உஜாலா டிரஸ் போட்டுக்கிட்டு நடந்து கிட்டு இருந்தா யாருக்குத் தான் பயம் வராது?”

அவருடைய மருத்துவமனை அனுபவங்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டே வந்தார். நாலாவது தெரு முடிவு வந்ததும் “சார், உங்க எல்லை முடிந்து விட்டது, நாளைக்குப் பார்க்கலாம்.. “ சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“சில விதிவிலக்குகள் உண்டு, சில சமயங்களில் எல்லை மீறலாம்!!” என்று அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே மாரியம்மன் கோவில் வாசலில் நின்றேன். சாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பேச்சைத் தொடர்ந்தேன். பேசிக்கொண்டே எனது வீடு வரை வந்து விட்டுவிட்டு வேதநாயகம் திரும்பினார்.
என்றைக்குமல்லாமல் அன்றிரவு நான் நல்லாத் தூங்கினேன். கைத்தொலைபேசியின் குறுந்தகவல் சத்தம் கேட்டு எழுந்து வந்திருந்த தகவலைப் பார்த்தேன்..

“வேதநாயகம் காலமானார், இறுதிச் சடங்குகள் அவர் ஊரில் இன்று நடைபெறும்”.. அய்யோ எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனதில் இருந்த நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போனேன். இரவு வரும்பொழுது இந்தப் பக்கம் வரவேண்டாம், பகல் தானே என்று நாலாவது தெருவழியாகவே போனேன். தெரு வெறிச்சோடி இருந்தது, எல்லோரும் வேதநாயகத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப் போய் இருப்பார்களோ!!!
வேதநாயகத்தின் வீட்டை நெருங்குகையில் இதயம் வேகம் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.வேதநாயகத்தின் வீட்டின் வாசற்படியில் ...ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை...அது ...அய்யோ!!! வேதநாயகமே தான்.

எனக்காகவே காத்திருந்தது போல் இருந்த வேதநாயகம் புன்னகையுடன்
“தம்பி, இப்போ உங்க வேலைக்கு நேரமாச்சு, நீங்க நைட்டு ஷிப்டு முடிஞ்சு வர்றப்ப பேசலாம்...”
-----------

Wednesday, December 26, 2007

இவன் அவனில்லை - ஒரு நிமிடக்கதை

ஜெனிக்கு இரண்டு நாட்களாக குழப்பமாய் இருந்தது. அலுவலகத்தில் தன்னிடம் சகஜமாகப் பேசும் கார்த்தி, காலையில் கடற்கரையில் தூரத்தில் இருந்து வைத்தக் கண் வாங்காமல் பார்த்துவிட்டு ஒரு சின்னப் புன்னகைக் கூட செய்யாமல் போய்விட்டான்.இன்று மட்டுமல்ல அதற்கு முந்தைய நாள் கூட ராகத் பிளஸாவில் பார்த்தும் இதேபோல் போய்விட்டான்.

கார்த்தி அந்த அலுவலகத்திற்குப் புதிதாய் வந்து சேர்ந்திருந்தாலும், வந்த சில நாட்களிலேயே தனது கலகலப்பான குணாதியசத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டான். போன வாரம் மோகன் சாரின் வழியனுப்பு விழாவை அருமையாக ஒருங்கிணைத்து அலுவலக மேலிடத்திலும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டான்.

எப்படி இவனால் இரண்டு விதமாக நடந்து கொள்ள முடிகிறது ,ஒரு வேளை பொதுவிடம் என்பதால் தெரிந்தவள் என்றுக் காட்டிக்கொள்ளாமல் போய்விட்டானோ!!! என்ற நினைப்பைக் கலைக்கும் வகையில் அங்கே கார்த்தி வர,

“ஹல்லோ கார்த்தி,”


“ஜெனி, உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும் ..” என அவளைக்கூட்டிக் கொண்டு அலுவலகத் தோட்டத்திற்கு வந்து அவனே பேச ஆரம்பித்தான்.

“ஜெனி, எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் உங்களை நேசிக்கிறானாம்... கிட்டத்தட்ட அவனை 27 வருஷமா தெரியும், “


“.....”


“இன்னும் சொல்லப்போனால் நாங்க பிறக்கிறதுக்கு முன்னமே எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும்...”


ஜெனி மேலும் குழப்பமானாள்.


“நேத்து மோகன் சார் பங்சன் போட்டொக்களை அவன்கிட்ட காட்டினப்போ , அதுல உங்களைப் பார்த்துட்டு தன் விருப்பத்தை சொன்னான், அவன் என்னை மாதிரி இல்லை, நேர் ஆப்போசிட் ..ரொம்ப ரிசர்வ்ட், இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் அங்கே பாருங்க, உட்கார்ந்திருக்கான் ”

அங்கே அலுவலக வரவேற்பறையில் அச்சு அசலாய் கார்த்தியை உரித்து வைத்தது போல அவனோட இரட்டை சகோதரன் உட்கார்ந்திருந்தான்.

Friday, December 21, 2007

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற - கோங்குர தோட்ட காடா - மெட்டு ஒன்று பாடற்கள் இரண்டு- வீடியோ

2004 ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், பாடலைப் பாடியிருப்பவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் மாலதி.
அமர்க்களமான இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பவர்கள் ரவிதேஜா மற்றும் புன்னகை இளவரசி சினேகா.



இதே மெட்டில் அமைந்த பாடல், தமிழிலும் அதே இசைக்கூட்டணியில் மாயாவி படத்தில் வெளி வந்தது. தமிழில் இந்த மெட்டுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பவர்கள் சூர்யா, ஜோதிகா.




நன்றி : www.youtube.com

Thursday, December 20, 2007

ஃபாதர் என் குழந்தை பிரெஞ்சு பேசுறாள் - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை

சுற்றுலாவாக கடற்கரை நகரமான இந்த ஊருக்கு வந்த நாளில் இருந்து சுணக்கமாக இருந்த அஞ்சலி பாப்பா இன்றைக்குத்தான் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தாள். அதனால் அப்படியே கடற்கரை மணலில் நடைபோய்விட்டு வருவோம் என கார்த்தி ,ஜெனி தங்களது குழந்தை அஞ்சலி பாப்பாவுடன் அந்த அழகிய மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

குழந்தை அஞ்சலி மணலை தனது பிஞ்சுக்காலால் மணலை அள்ளித் தெரித்தபடியே உதறி உதறி நடந்து வந்து கொண்டிருந்தது. மூவரின் கால் தடங்களும் அழகாக மணலில் பதிந்து இருந்தன. தூரத்தில் ஒரு வெள்ளைக்காரர் நடந்து வர, அஞ்சலிபாப்பா அந்த வெள்ளைக்காரரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தது. குழந்தையை இருவரும் வேகமாக பின் தொடர, அந்த வெள்ளைக்காரரும் இவர்களின் மிக அருகில் வந்து சேர்ந்தார்.

ஜெனியும் கார்த்தியும் அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஆங்கிலத்தில் உரையாடலை தொடர, சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரர் குட்டிக்குழந்தையைப் பார்த்து

"கோமோன் வ த்யூ?"(Comment vas-tu) என கேட்க

அஞ்சலிபாப்பா "ஜ வே திரேபியான் ?" (Je vais très bien)என மழலையாகச் சொல்ல ஜெனி மற்றும் கார்த்தியின் முகம் மாறியது.

அந்த வெள்ளைக்காரர் மேலும் சிலக் கேள்விகளை பிரெஞ்சில் கேட்க குழந்தை உடனுக்குடன் பதில் சொல்ல இவர்களின் முகம் வெளிற ஆரம்பித்தது. ஜெனி சடாரென அஞ்சலிபாப்பாவை கையில் தூக்கிக் கொண்டாள். அந்த வெள்ளைக்காரர் "ஓவர்"(Au voir) என்று குழந்தைக்கும் "சி யூ லேட்டர் " என ஜெனிக்கும் சொல்லிவிட்டு கார்த்தியின் கண்களைப் பார்த்து "யூ ஆர் சோ லக்கி ஜென்டில்மேன்" என அழுத்தமாகக் கைக்கொடுத்துவிட்டு விடைபெற்று சென்ற போது மாலை மறைந்து இரவாகிப் போய் இருந்தது.


வெளிறிய முகத்துடன் அஞ்சலிபாப்பாவை தூக்கிக் கொண்டு, ஜெனி் அந்த தேவாலயத்திற்குள் வேகமாக ஓடிவந்தாள்.அவளின் பின்னால் கார்த்தி பொறுமையாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவளின் கண்கள் பாதிரியார் பிலிப்பை தேடிக்கண்டுபிடித்தன.

"ஃபாதர்,அஞ்சலிக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க, இன்னக்கி ஈவ்னிங் பீச்ல, ஒரு ஃபாரினரோட வேற ஒரு ஈரோப்பியன் லாங்குவேஜ் ல பேசினாள்,ஐ திங்க் அது பிரெஞ்சு.. த்ரேபியான், ஓவர் னு சில வார்த்தைகள் புரிந்தது. அவளுக்கு இந்த லாங்குவேஜ் தெரிய வாய்ப்பே இல்லை, எங்களுக்கு பயமாயிருக்கு ஃபாதர், பிளீஸ் பிலெஸ் பண்ணுங்க"

இதைக் கேட்ட பின்னர் ஃபாதர் பிலிப்பின் முகம் இறுக ஆரம்பித்தது. அவரின் முகத்தில் சிறிது தயக்கத்திற்குப் பின் பேச ஆரம்பித்தார்.

"கூட யாரவது பார்த்திங்களா, ஃபாரின் லேடி, சின்னகுழந்தை,"

"நோ ஃபாதர்"

"ஜெனி, நீங்க சீக்கிரம் இந்த ஊரை விட்டு கிளம்புவதுதான் நல்லது, மூனு வருஷம் முன்னாடி ஒரு பிரெஞ்சுக்கார் அவரோட மனைவி மற்றும் குழந்தையுடன் வாக்கிங் போறப்ப சுனாமி அலையில போயிட்டாங்க, அதுக்குப் பின்ன அடிக்கடி கடற்கரையிலே ஒரு அவங்க உருவங்களை பார்த்ததாக அடிக்கடி சர்ச்சுக்கு வர்றவங்க சொல்லுவாங்க, பட் நான் இதுவரை பார்த்ததில்லை. அனேகமா நீங்க சந்திச்சுப் பேசினது அவராக இருக்கலாம், " என சொல்லிவிட்டு "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே ஆமென், ஆண்டவர் எப்போதும் உங்களுடன் துணை இருப்பாராக" என மூவரையும் ஆசிர்வதித்து அனுப்பினார்.கார்த்தி எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.

தேவாலய வாசல் வரை அவர்களை வழியனுப்பிட்டு வந்த பாதிரியார், ஜெனியும், கார்த்தியும் சத்தமாக பிரெஞ்சில் பேசிக்கொண்டுப் போவதைக் கேட்டதும் அவரின் முகத்தில் அதிர்ச்சி அலைகள் பரவியது. அதிர்ச்சி அலைகளுக்கு காரணம் அவர்கள் பிரெஞ்சுப் பேசிக்கொண்டு போவதில் அல்ல.. அவர்களின் குரல் அலையில் அடித்து செல்லப்பட்ட அந்த பிரெஞ்சு தம்பதியினரின் குரலாக இருந்தது தான். திரும்பிப்பார்த்த பாதிரியாரை நோக்கி மின்னொளி வெளிச்சத்தில் அழகாக அஞ்சலி சிரித்தாள். அது இந்தியக் குழந்தையின் சிரிப்பில்லை என பாதிரியாருக்குப் புரிந்தது.

Tuesday, December 18, 2007

நீங்காத நினைவுகள் - சிறுகதை

அந்த பிரபலமான வார இதழில் கார்த்தி எழுதி இருந்த சிறுகதையை மோகன் திரும்ப ஒருமுறைப் படித்து முடித்துவிட்டு மேசையின் மேல் வைப்பதற்கும் கார்த்தி கையில் ஒரு கோப்புடன் அவரின் அறையினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"மோகன்,பைனல் இண்டர்வியுல 4 பேர் ஷார்ட் லிஸ்ட் ஆயிருக்காங்க, நாம எடுக்கப் போறது மூணு பேர்தான்,ஒருத்தரை ரிஜக்ட் பண்ணனும்? நீங்க ஒரு முறை இந்த ரிப்போர்ட்டை ரிவ்யூ பண்ணி ரிசல்ட் சொல்லிடுங்க "

"அது இருக்கட்டும் கார்த்தி, நீ முதல்ல உட்காரு உன் கதை படிச்சேன்.. ம்ம்ம்ம் நல்லா வந்து இருக்குன்னுசொல்றதுக்கு முன்ன ஒரு விசயம் .. சொன்னால் கோச்சுக்ககூடாது"

"சொல்லுங்க மோகன், நீங்க எப்போதும் என்னோட நலம் விரும்பின்னு எனக்குத் தெரியும்"

"பேரைக்கூட மாற்றாமல் எதுக்கு ஜெனிப் பத்தி எழுதி இருக்க? அதுவும் எதிர்மறைக் கதாபாத்திரமாய்? சொந்தவாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தவிர்த்துக் கதை எழுத முடியாதா? "

"ம்ம்ம்ம் ஜெனி மேல ஏற்பட்ட வெறுப்பை தீர்த்துக் கொள்வதற்காக போன வருடம் எழுதிவைத்தக் கதை, சும்மாஅனுப்பி வைக்கலாமேன்னு அனுப்பி வச்சா அதை பிரசுரமே பண்ணிட்டாங்க .. நானே எதிர்பார்க்கல மோகன்"

"நாம நேசிக்கிறவங்க மேல, எந்தக்காலத்திலும் எந்தக் காரணத்தை சொல்லியும் வெறுக்க முடியாது ..நீ அவளை நேசிச்சது உண்மைன்னா உன்னால இவ்வளவு வெறுப்பைக்காட்டி இருக்க முடியாது... வார்த்தைகளிலும்வசனங்களிலும் இவ்வளவு வெறுப்புன்னா உன் மனசில்ல எவ்வளவு காட்டம் இருந்திருக்கும்.. "

"இருக்கு மோகன், இன்னும் கூட கொஞ்சம் இருக்கு, அவ டிப்லோமெடிக்கா பிரிஞ்சு போயிருந்தா பரவாயில்லை,அவ பண்ணது பச்சைத் துரோகம்.. அவள் துரோகி.. அந்த நினைப்பு போக இன்னும் கொஞ்ச நாளாகும்... எனக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் இருந்திருந்தால் அவளை அப்போவே கொலை பண்ணி இருப்பேன்.. நல்ல வேளை
அப்படி எதுவும் ஆகல..நான் கோழையா இருந்ததும் நல்லதா போச்சு, " கண்கள் சிவக்க பேசிய கார்த்தியை தண்ணீர் கொடுத்து மோகன் ஆசுவாசப்படுத்தினார். தண்ணீரைக் குடித்துவிட்டு கார்த்தி தொடர்ந்தான்

"இதில் எந்த தப்பும் இருக்கிறதா நான் நினைக்கல மோகன், ஆல்பிரட் நோபல் உருவாக்கின நோபல் பரிசை கணக்குக்கு மட்டும் தரமாட்டாங்க, காரணம் உங்களுக்குத் தெரியும்தானே!! அவரோட காதலி அவரை விட்டுட்டு ஒரு பெரிய கணிதமேதையோட போயிட்டாங்கன்னு,.. உயில் கூட எழுதி வச்சிருக்காராம்.. எக்காலத்திலும் கணக்குக்கு நோபல் பரிசு தரக்கூடாதுன்னு, எப்பேற்பட்ட விஞ்ஞானி அவருக்கே, அவரோட காதல் எந்த அளவுக்கு பாதிப்பைக் கொடுத்திருக்குன்னா, நான் எல்லாம் சாதரணம் மோகன்"

"கார்த்தி, நீ சொல்ற இந்த நோபல் பரிசு உதாரணம் தப்பு, நீ குறிப்பிடுற அந்த மேத்தமேடிசியனுக்கும் நோபலுக்கும் நேரிடையா எந்த தொடர்பும் கிடையாது, அது அந்தக் காலத்தில மேத்ஸுக்கு நோபல் பரிசு ஏன் கொடுக்கலேன்னு கதைகள் பாணியில சொல்லப்பட்ட பல கிசுகிசுக்களில் ஒன்னு.. விசயத்துக்கு வருவோம், உன் எழுத்து நடை நல்லா இருக்கு, இந்த மாதிரி சுய புலம்பல்களை கதையா மாற்றாமல் நல்ல பாசிடிவ் கதைகள் எழுது.. உன் கதை படிக்கிறவங்களில் யாராவது ஒருத்தருக்கு லேசான மனமாற்றம் வந்தாலே போதும், நீ எழுத்தாளானாய் ஜெயிச்சுடுவே!!! "

கார்த்திக்கு லேசாய் உறைக்க ஆரம்பித்தது.

"கார்த்தி, நமக்கு சங்கடங்களைக் கொடுத்தவங்களை மன்னிக்கிறது தான் அவங்களுக்கு நாமக் கொடுக்கிற பெரிய தண்டனை.. அது மாதிரி ஒரு சந்தோசமான பழிவாங்கல் எதுவுமே இல்லை தெரியுமா!! " மோகன் தொடர்ந்து பேச பேச கார்த்தி தனக்கு ஒரு தெளிவு பிறப்பதாய் உணர்ந்தான்.

சில வினாடிகள் அமைதிக்குப் பின்னர்

"கார்த்தி, அந்த லிஸ்ட்டை ரேங்கிங் படி வாசிங்க, "

"இமானுவேல் ஞானசேகரன், பாண்டித்துரை, அஜீஸ் அகமது அண்ட் லாஸ்ட்டா ரம்யா திருவேங்கடம்,"

"ரம்யா" இந்தப் பெயரை மெல்ல மனதுக்குள் மோகன் முணுமுணுத்துக் கொண்டார். எத்தனை வருடம் ஆனாலும் இந்தப் பெயரை மறக்க முடியுமா அல்லது அவளைத்தான் மறக்க முடியுமா...எங்கிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியாது..அதனால் என்ன? மலர்கள் சருகாக மாறிப்போயிருந்து இருக்கலாம்.. அதன் மனம் மனதில் எப்போதும் அப்படியேத்தானே இருக்கும். மோகனின் மனதில் ஏற்பட்ட உற்சாகம் மெல்லிய புன்னகையாய் மாறி

"கார்த்தி, யாரையும் ரிஜெக்ட் பண்ண வேண்டாம், நாலு பேரையும் செலக்ட் பண்ணிடுங்க, எல்லோருக்கும் நாளைக்கே ஆஃபர் லெட்டர் அனுப்பிச்சுடுங்க"

மோகன் சொல்வதைக் கேட்ட கார்த்தி அதற்கான காரணம் தெரியாமலேயே தலையை ஆட்டினான்.

Monday, December 17, 2007

மூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை

காட்சி 1 :

"ஏன் தங்கினால் என்ன?" இது தான் இன்றைக்கு காலை ஜெனி என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

<< எவ்வளவு திமிர் இருந்தால், ஜெனி வெளியூர் போறப்ப மோகன் கூட ஒரே ரூமில் தங்கி இருப்பாள், அதை வெட்கமே இல்லாமல் என்னிடமே சொல்றாள், சே, எவ்வளவு கேவலமானவளா இருப்பாள் >> என் மனதுக்குள் ஜெனியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மேல் இது நாள் வைத்திருந்த அன்பெல்லாம் வெறுப்பின் வடிவில் எரிமலையாய் சீறியது. மதியம் ஒரு லோக்கல் ரவுடியிடம் சொல்லி கள்ளத்துப்பாக்கி வாங்கினேன். நேராக ஜெனி ரம்யாவுடன் தங்கி இருந்த அபார்ட்மெண்ட்ஸை நோக்கி என் காரை ஓட்டினேன்.


காட்சி 2 :

"சாரி, ஜெனி, நான் தான் அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கோ"

"இல்லை கார்த்தி, ஐ சுட் நாட் ஹாவ் டன் தட், நான் அப்படி தங்கி இருக்கக்கூடாது, பட் மோகன் பர்பெக்ட் ஜெண்டில்மேன் தெரியுமா?"

"சாரி, நான் மோகனையும் தப்பா நினைச்சுட்டேன், எனி வே இப்போவாது நாம புரிஞ்சுக்கிட்டோமே!!"

"ஆமாண்டா கார்த்தி, நீ இப்படி பண்ணலேன்னா, நாம எப்போவுமே சேர்ந்து இருக்க முடியாது, மார்னிங் நீ பேசுன பேச்சுக்கு உன் முகத்திலேயே முழிக்கக் கூடாதுன்னு இருந்தேன்"

இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்தோம். மோகன் பரபரப்போடு படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

காட்சி 3:

படிகளில் மோகனைப் பார்த்த ரம்யா அழுதபடியே அவனிடம் ஓடி வந்தாள்.

"எல்லாம் கண்ணிமைக்கிற நேரத்துக்குள் நடந்துடுச்சு மோகன், கார்த்தி வந்தான், ரிவால்வரை எடுத்து ஜெனியை சுட்டுட்டு , தன்னையும் சுட்டுக்கிட்டான்"

ரத்த வெள்ளத்தில் எங்களது உருவங்களை பத்திரிக்கைகாரர்கள் போட்டோ பிளாஷ் தெரிக்க எடுத்துக் கொண்டிருக்க மெதுவாக வான் மேகங்களைத் தாண்டி வானில் நானும் ஜெனியும் பறக்கலானோம்.

Wednesday, December 12, 2007

கிரிக்கெட்டும் டேவிஸ் கோப்பை டென்னிசும் - தகவல்

கோட்டார் ராமசாமி, சர்வதேச அளவில் இரண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர் என்ற பெருமை உடையவர். 1920களில் இந்தியாவின் சார்பாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்ற இவர் பிற்பாடு 1936 ஆம் ஆண்டில் இரண்டு கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். 40 வயதில் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை இங்கிலாந்து ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் ஆடிய இவர் இரண்டு இன்னிங்ஸுகளிலும் முறையே 40 மற்றும் 60 அடித்து அந்த ஆட்டத்தை டிரா செய்ய உதவியாக இருந்தார்.

1985யில் தனது குடும்பத்தினருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறிய இவரை அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இவரது மரணம் உறுதிப்படுத்தபடாததால் "காணவில்லை" என கிரிக்கெட் குறிப்பு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரைப் பற்றிய கிரிகின்போ இணையதளக் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


கோட்டார் ராமசாமியைப் போலவே மேற்கிந்தியதீவு அணிகளின் முன்னாள் விக்கெட்கீப்பர் "ரால்ப் லீகலும்" டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமன்றி டேவிஸ் கோப்பை ஆட்டங்களிலும் ஆடியுள்ளார். இருவருக்கும் அதிசயமான ஒற்றுமை என்னவெனில் இவரும் "காணமல் போனவராக" கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான். 2003 ஆம் ஆண்டில் இருந்து இவரைக் காணவில்லை எனபதிவு செய்யப்பட்டுள்ளது.




கென்ய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆசிப்கரீமும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டங்களில் பங்கு பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு கென்ய அணிக்குத் தலைமை தாங்கிய இவர் , டேவிஸ் கோப்பை ஆட்டங்களிலும் கென்ய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்

Monday, December 10, 2007

பேய் வீடு - Surveyசன் போட்டிக்காக "நச்சுன்னு" மேலும் ஒரு கதை

" இந்த பேய் வீட்டை வாங்குற நீங்க பெரிய தைரியசாலிதான் சார், இருந்தும் உங்களுக்கு லாபம் தான், இந்த ஏரியாவில 50 லட்சம் விலை போற கிரவுண்ட் உங்களுக்கு வீட்டோட 15க்கு வந்துடுச்சு, " என தன் கமிஷன் தொகை குறைந்துவிட்டதை தலையை சொறிந்தபடி சுட்டிக்காட்டிய வீட்டு புரோக்கருக்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்துவிட்டு , நான் வாங்கிய வீட்டிற்கு அடுத்த வீட்டைத் தட்டினேன். கதவைத் திறந்த நடுத்தர வயது ஆசாமியிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

“கேள்விப்பட்டேன் சார், நீங்க அந்த வீட்டை வாங்கிட்டிங்கன்னு, கிட்டத்தட்ட 4 வருஷமா பூட்டிக்கிடக்கு, அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்ட பின்ன குடி வந்தவங்களும் தினமும் நைட் 11 மணிக்கு மேல புல்லாங்குழல் சத்தம் வீட்டில கேக்குதுன்னு பயந்து காலி பண்ணிட்டு போயிட்டாங்க, “

“ம்ம்ம்" அவர் சொன்னதற்கு தலையாட்டினேன்.

“உங்களுக்கு பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை உண்டா?”

“இல்லை சார்

“ மனசு தான் பேய், எதுக்கும் நீங்க ஃபேமிலியோட குடிவர முன்னாடி ஒரு பூஜை பண்ணிடுங்க, பேய் வீடுங்கிற நெருடல் உள்ளுக்குள் இருந்தாலும் உங்களுக்கு போயிடும்... நீங்க குடும்பஸ்தரா?, ”

“இல்லை சார், எனக்கு இன்னும் கல்யாணமாகல" அவர் வீட்டில் கொடுத்த காபியை நாசுக்காக மறுத்துவிட்டு நான் புதிதாய் வாங்கிய வீட்டிற்கு ஒரு சில தட்டுமுட்டு சாமான்களுடன் வேலையாட்கள் சுத்தம் செய்து முடித்தவுடன் உள்ளே நுழைந்தேன்.

“சார், இந்த புல்லாங்குழல் கொல்லப் பக்கம் கிடந்தது" என்று சுத்தம் செய்ய வந்திருந்த ஆட்களில் ஒருவன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை சிரித்துக் கொண்டே வாங்கி அலமாரியில் வைத்து, வேலையாட்களை அனுப்பிவிட்டு கட்டிலில் கண்ணயர்ந்தேன். மனது நிறைந்திருந்தது . ஆம் இது என் கல்லூரிக் காதலி ஜெனி வாழ்ந்த வீடு இது... ம்ஹூம் ... இன்னும் வாழ்கிறாள் இங்குதான்.. எனக்காக... மற்றவர்களுக்கு அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அவள் இன்னும் ஜீவனுள்ள அதே பழைய ஜெனிதான்... கல்லூரியில் அவள் வழக்கமாக வாசிக்கும் புல்லாங்குழல் இசை மெலிதாக என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.

Sunday, December 09, 2007

புதுவைப் பட்டறை ஒரு மைல்கல்

தமிழை , கணினியில் தமிழின் பயன்பாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தமிழார்வலர்கள் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஆரோக்கியமான சூழலில், புதுவை வலைப்பதிவர் சிறகம் நடத்திய தமிழ்க் கணினி வலைப்பதிவர் பட்டறை ஒரு மைல்கல் என்று சொல்லலாம். நகரத்தின் மையப்பகுதியில் , வெளியூர்காரர்களும் சிரமமில்லாமல் சென்றடைந்திடக்கூடிய இடமாக பட்டறை நடக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தமைக்காக அமைப்புகுழுவினரை நிச்சயம் பாராட்டலாம்.





நந்தா, மா.சிவக்குமாருடன் சரியாக காலை 9 மணிக்கு அரங்கை (சற்குரு உணவகம்) அடைந்தபோது ஓசை செல்லா, எ-கலப்பை முகுந்த் ஆகியோர் ஏற்கனவே அங்கு இருந்தனர். புதுவை நண்பர் ஜே.பூரா எங்களுக்கான காலை உணவு ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டார்.
காலை உணவை முடித்துவிட்டு பட்டறை நடக்கும் ஐந்தாம் தளத்தை அடைந்த போது ஏற்கனவே பட்டறை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தவர்கள் நிறைந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் உள்ளே நுழையும்பொழுதே பட்டறைக்கான மலர், தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு , எழுதுகோல், எழுத நோட்டுப்புத்தகம் அதை அழகாக வைத்துக் கொள்ள ஒரு கோப்பையும் அவர்களுக்கு தரப்பட்டது.


வழக்கமான ஆரம்ப விழாபோல் அல்லாமல் , ரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோர் ரத்தினச்சுருக்கமாக பட்டறையின் நோக்கத்தைப் பற்றி சொல்லிவிட்டு நேரிடையாக நிகழ்ச்சிக்குச் சென்றனர்.

எ-கலப்பை முகுந்த் தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறைகளை எளிமையாக புரியும்படி வகுப்பு எடுத்து முடித்தவுடன் , முனைவர். மு.இளங்கோவன் தமிழ்99 முறையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பங்கேற்பாளர்கள் சற்று இறுக்கமாக அமர்ந்திருப்பதைக் கவனித்த மா.சிவக்குமார் மு.இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவரசியமாகக் கூறி அந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினார்.





பங்கேற்பாளர்களும் இறுக்கம் தளர்ந்து சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க நந்தா, முகுந்த் ஆகியோர் மா.சி உடன் இணைந்து அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். பட்டறை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஓசை செல்லா புகைப்படங்களை எடுத்து , தனக்கே உரிய ஒன்லைனருடன் தமிழ்வெளி தளத்தில் நேரலையாக தரவு செய்து கொண்டிருந்தார்.



அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் , அரட்டை வசதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி வகுப்பெடுத்து முடித்ததும், “உபுண்டு" ராமதாஸ் சுவரசியமாக உபுண்டு இயங்கு தளத்தைப் பற்றியும் கட்டற்ற மென்பொருள்களின் அவசியத்தைப் பற்றியும் ஆதிக்க அடிமை மோகம் எந்த அளவுக்கு போகும் என அழுத்தம் திருத்தமாக உதாரணங்களுடன் விளக்கினார்.

ராமதாசு பேசிக்கொண்டிருக்கையிலேயே , மா.சிவக்குமார் இடைமறித்து , ராமதாசு லினக்ஸு குழுமங்களில் தமிழில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் உறுதியான நிலையைப் பாராட்டினார்.



ராமதாசின் விளக்கம் முடிந்த பின்னர், முனைவர்.மு.இளங்கோவன் தமிழில் இணையத்தில் கிடைக்கப் பெறும் இணையத்தளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். தமிழில் இணையம் என்று பெயர்வந்தமையைப் பகிர்ந்து கொண்டார்.






அருமையான மதிய உணவிற்குப் பின்னர், முனைவர் நா.இளங்கோவின் தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிப்பது, குறித்த அமர்வு ஆரம்பித்தது. சாமானிய மக்களுக்கு தொழில்நுட்ப விசயங்களைச் சொல்லித்தருவது பெரிய கலை. அதை மிக அனயாசமாக செய்தார். அவ்ர் ஒவ்வொன்றாய் விளக்க மடிக்கணினியில் இருந்து விளக்கங்களை விரைவாக திரையில் காட்டிய அருண்பாரதியின் ஒருங்கிணைவு பாராட்டத்தக்கது. திரட்டிகளில் இணைப்பது பற்றி தூரிகா வெங்கடேசும் , வேர்டுபிரஸ் பற்றி நந்தாவும் ஒலி ஒளிக்காட்சிகளை இணைப்பது பற்றி செல்லாவும் வகுப்பு எடுத்தனர். சென்னைப் பட்டறையில் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள் மாணவர்கள் என்றால் இங்கு அரசு அலுவலங்களில் பணிபுரியும் நடுத்தர வயதினர் காட்டிய ஆர்வம் மெச்சத்தகுந்தது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க வைத்தார்கள். கடை நாற்பதுகளில் இருந்த ஒரு பெண்மனி தமிழில் டைப் அடிச்சுக் காட்டுங்கோ என்று சொல்லி அவர்களுக்கு தட்டச்சு செய்து எவ்வளவு எளிமையானது என்று சொல்ல அவர்கள் முகம் அடைந்த பூரிப்பு அளவிட முடியாதது.






ஜிமெயில் ஒரு கட்டத்தில் தன் வேலையைக் காட்டியதால் சிலருக்கு ஜிமெயில் கணக்கு திறந்து தர இயலவில்லை. இருப்பினும் கோவிந்து என்ற புதுவை நண்பர் விடாப்பிடியாக தனது கையேட்டில் கணக்குத்திறக்கும் வழிமுறைகளை எழுதிக் கொண்டார். மா.சிவக்குமாரும் களத்தில் இறங்கி சொல்லிக் கொடுத்தது பேருதவியாக இருந்தது.





பிரபல வலைப்பதிவாளர் பொட்டீக்கடை சத்யாவை இந்த நிகழ்வின் போது சந்தித்தது மகிழ்ச்சியான விசயம்.




பட்டறையை வெற்றிகரமாக முடிந்ததும், தன் வீட்டுக் கல்யாணத்தை சிறப்பாக முடித்து ஏற்படும் சந்தோசத்தை அமைப்பாளர்களின் கண்களில் காண முடிந்தது. பட்டறையின் தொடர்ச்சியாக புதுவைக்குட்பட்ட பள்ளிகளில் தமிழில் கணினிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் புதுவை வலைப்பதிவர் சிறகம் ஈடுபடப் போவதாக தூரிகா வெங்கடேஷ் தெரிவித்தார். இவர் திரட்டி.காம் என ஒரு வலைப்பூத் திரட்டி ஒன்றை வடிவமைத்துள்ள செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.



இந்த புதுச்சேரி பட்டறை, பிறநகரங்களில் இருக்கும் தமிழார்வலர்கள் இணைந்து தமிழ்க்கணினிப் பயன்பாட்டை பாமரமக்களிடம் கொண்டு சேர்க்க, இவ்வகைப் பட்டறைகளை நடத்தப் போவதற்கு ஒரு முன்மாதிரி என்றால் அது மிகையாகாது. புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

தமிழ்க் கணினி பயன்பாட்டைப் பரவலாக்கும் முயற்சிகளில் மீண்டும் ஒரு முறை பங்கேற்ற மகிழ்ச்சியில் ஊர் திரும்பினோம்.






புகைப்படங்கள் நன்றி: ஓசை செல்லா, தமிழ்வெளி.காம்

Saturday, December 08, 2007

புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது


புதுச்சேரியில் தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை இரா.சுகுமாரன் மற்றும் கோ.சுகுமாரன் ஆகியோர்களின் ஆரம்ப அறிமுக உரைக்குப் பின்னர் இனிதே துவங்கியது. எ-கலப்பை முகுந்த் தமிழ் தட்டச்சு முறைகளை தமிழ்க் கணினி ஆர்வலர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொன்டிருக்கிறார். சென்னையில் இருந்து வலைப்பதிவர்கள் நந்தா, மா.சிவக்குமார் உடன் நானும் சரியான நேரத்திற்கு பட்டறை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.கோவையில் இருந்து ஓசை செல்லாவும் வந்திருக்கிறார்.

முனைவர்.மு.இளங்கோவன் தமிழ்99 தட்டச்சு முறையை விளக்கிக்கொண்டிருக்கிறார்.இறுக்கமாக அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களை மா.சிவக்குமார் இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவையாகக் கூறி அந்த இறுக்கத்தை தளர்த்தினார்.

பங்கேற்பாளர்களின் இறுக்கம் தளர்ந்து தங்களது சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க, முகுந்த் ,நந்தா, மா.சி ஆகியோர் அதற்கான விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர்.

அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் அரட்டை ஆகிய விசயங்களை வகுப்பு எடுத்தார்.நேரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பட்டறையில் அடுத்த நிகழ்வாக இயங்குதளங்களைப் பற்றி மா.சிவக்குமாரும், உபுன்டு ராமதாசு அவர்களும் விளக்கினர்.்
உபுன்டு ராமதாசு மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்கள் எவ்வாறு பயனாளரகளை அடிமைத்தனத்தில் கொண்டு போகிறது என கமலஹாசனின் திரைப்பட எடுத்துக்காட்டைக் கூறி ஒபன் சோர்சு மென்பொருள்களின் தேவையை விளக்கினார்.்
இணைய உலவிகளைப் பற்றி, முக்கியமாக பயர்பாக்சு அதன் நீட்சிகளைப்பற்றியும் விரிவாக விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
இணைய வெளியில் உலவும் தமிழ் இணையதளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையை முனைவர். மு. இளங்கோவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓசை செல்லா பட்டறை செய்திகளை உடனுக்குடன் தமிழ்வெளி முகப்பில் தந்துகொன்டிருக்கிறார்.



மேலதிக தகவல்களைப் புகைப்படங்களுடன் தமிழ்வெளி செய்திகளில் காண இங்கு சொடுக்கவும்

உன் மொழி போல் என் மொழியும் அமுதமே - சிறுகதை

பரீதாபாத்தில் இருந்து எங்க அலுவலகத்திற்கு வியாபரம் விசயமாய் வந்திருந்த பங்கஜ் அகர்வாலுடன் நான், என் அலுவலக தலைமை நிர்வாகி மோகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அகர்வாலே பேச்சை ஆரம்பித்தார்.

"தமிழ்நாடு வந்தாலே ஒரு பிரச்சினை, யாருக்கும் ஹிந்தி தெரியமாட்டேங்குது" என்றார் ஆங்கிலத்தில்

"உங்க ஊரிலேயும் அப்படித்தானே... யாருக்கும் தமிழ் தெரியமாட்டேங்குது" மென்மையான ஆங்கிலத்தில் மோகன் பதில் சொல்ல

"மோகன், என்ன பேசுறீங்க.. ஹிந்தி நம்மோட தேசிய மொழி" கடுமையான குரலுடன் ஆங்கிலத்திலேயே அகர்வால் தொடர்ந்தார்.

இது மாதிரி ஒரு தடவை கிருஷ்ணமூர்த்தி, மோகன் கிட்ட பேசி நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான்.

அகர்வாலுக்கு எப்படி மோகன் பதில் தரப் போகிறார் என்று ஆர்வத்துடன் கவனிக்கலானேன்.

ஆனால் அதற்குள் ஷகிராவின் ஆங்கிலப் பாடல் அதிர அகர்வாலின் கைத்தொலைபேசி அடித்தது. எழுந்துப் போய் கெஞ்சலாய் கொஞ்சலாய் யாருடனோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். பேசி முடித்துவிட்டு திரும்பி கொஞ்சம் சந்தோசமாய் வந்த அகர்வால்

"என் மனைவியிடமிருந்து அழைப்பு... என் அலுவலக மேலிடத்தைவிட இவளிடம் தான் எனக்கு அதிகம் பயம்" கோர்வையான ஆங்கிலத்தில் அகர்வால் பேசப் பேச்சு குடும்பம், குழந்தைகள், கிரிக்கெட் என திசை திரும்பிற்று.

சூடான ஒரு விவாதத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு சப்பென்றாயிற்று. அன்று மாலை அகர்வால் தான் கிளம்பும் முன் திட்ட முன்வடிவுகளை சிறப்பாக வழங்கிய என்னையும் கிருஷ்ணமூர்த்தியையும் தனியே அழைத்துப் பாராட்டினார். எங்களைப் பொதுவாக ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் அகர்வால் ஏதோ ஹிந்தியில் பேசினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு கோபம் கோபமாய் வந்தது.. அவர்கள் மேல் அல்ல..

ஹிந்திப் படிக்க வைக்காத இந்த தமிழ்நாட்டில் பிறந்ததற்காக.. இன்று நேற்று வந்த கோபமல்ல.. "மைனே பியார் கியா, தூர்தர்ஷன் மகாபாரதம், ராமாயண" காலத்துக் கோபம். என்னோட பொழுது போக்கு உலகத்தில் இருந்து பாதியை யாரோ சதி செய்து எடுத்து விட்டு போலத் தோன்றும்.

நடுவில் கொஞ்ச நாள் காணாமல் போய் இருந்த இந்தக் கோபம் எங்க அலுவலகத்தில் கோவாவில் இருந்து ஜெனிபர்- டி -சௌசா வந்து சேர்ந்த போது மீண்டும் கிளர்ந்தெழுந்தது. இந்தக் கிருஷ்ணமூர்த்தி அவளிடம் ஹிந்தியில் கடலைபோடுவான். என்னைவிட கிருஷ்ணமூர்த்தி ஆறு மாதம் சீனியர், மற்றபடி நானும் அவனும் தொழில்நுட்ப அறிவு சம்பந்தபட்ட விசயங்களில் சமம்தான். சீனியர் என்பதால் விடுப்பு சம்பந்தபட்ட விசயங்களில்
அவனின் அனுமதி பெறவேண்டும் என்று இருப்பதால் சில சமயங்களில் ஜெனி முன்னர் என்னை இரண்டாம்தரமாக நடத்துவதும் உண்டு.

ஜெனியின் முகவெட்டு எனக்கு கல்லூரியில் இருந்த முதல் காதலியின் முகத்தை ஞாபகப்
படுத்தியதால் அவள் மேல் எனக்கு தனிக்கவனம் உண்டு. எனக்கு ஆங்கிலம் நன்றாக வரும் என்றபொழுதும், எனக்கு ஹிந்தி தெரியாததால் அது சம்பந்தபட்ட விசயங்களை பேசி அவளைக் கவர முடியவில்லையே என்ற எரிச்சல் அடிக்கடி வரும். இயலாமையினால் எரிச்சல் கடைசியில் என்னை ஹிந்திப் படிக்க விடாமல் பண்ணிட்டாங்களே!! அப்படின்னு ஒரு புலம்பல்ல வந்து முடியும்.

இரண்டு நாள் கழித்து, மோகன் அவரோட அறைக்கு கூப்பிட்டார். இதுதான் முதல் முறை அவர் என்னை அவரின் அறைக்கு அழைப்பது. எதுவாக இருந்தாலும் என் இடத்திற்கே வந்துதான் சொல்லுவார் அல்லது கிருஷ்ணமூர்த்தியை மட்டும் கூப்பிட்டு சொல்லுவார். லேசான நடுக்கத்துடனும் பயத்துடனும் உள்ளே நுழைந்தேன்.

திருவள்ளுவர் படம் அவர் இருக்கைக்கு மேலே இருந்தது. திருக்குறள் புத்தகம் அவரின் மேசையின் மேல் இருந்தது. அறையைச்சுற்றி கண்களை சுழலவிட்டேன். பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகள், சிலப்பதிகாரம், மற்றும் சில திராவிட இயக்க வரலாறு சம்பந்தபட்ட புத்தகங்கள் அலமாரியில் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.

என்னை அவர் அமரச்சொன்னவுடன், "நீராறும் கடலுடுத்த " என கைத்தொலைபேசி பாட எடுத்து யாருடனோ ஹிந்தியில் பேச ஆரம்பித்தார். அவர் பேசும் விதத்தை வைத்துப் பார்த்த பொழுது சரளமாகவே பேசுகிறார் என்று தெரிந்தது.

அவர் பேசி முடித்தவுடன் "சார் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?!!! " என்றேன் ஆச்சரியத்துடன்.

"இந்தக் கம்பெனி ஆரம்பிப்பதற்கு முன்னர் போபால்ல 5 வருஷம் இருந்தேன்" என்றார் சிரித்துக் கொண்டே

"பின்ன அந்த பங்கஜ் அகர்வாலோட நீங்க இங்கிலீஷ்லேயே தான் பேசினீங்க.. ஏன்?"

"இங்கிலீஷ் தானே எங்க இரண்டு பேருக்கும் தெரிந்த பொது மொழி.. ஹிந்தி பேசி நானும் உன் ஆளுதான் அப்படின்னு ஒரு பொய்யான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பல அதனாலதான் இங்கிலீஷ்ல மட்டும் பேசினேன்" என்றார்

அவர் சொல்வதுசரி போலத்தான் தோன்றியது..

" சார்..இவ்வளவு தமிழ் புக்ஸ்.. உங்களுக்கு இவ்வளவு தமிழ் மேல அபெக்சனா?"

"இல்லை கார்த்தி, தமிழ் மொழிப் பற்று என்று சொல்ல முடியாது. தாய்மொழிப் பற்று அப்படின்னு சொல்லலாம்.. தமிழ் என் தாய் மொழியாக அமைந்துபோய்விட்டது.. ஒரு வேளை பெங்காலியோ ஒரியாவோ என் தாய் மொழியாக அமைந்திருந்தால் அந்த மொழியின் பால் பிரியம் அதிகமாக இருந்திருக்கும்... இந்த உலகத்துக்கும் நமக்கும் ஏற்பட்ட முதல் பாலம் நம்ம மொழிதான் அதுமேல ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது இயல்புதானே!!"

"ஆமாம் சார்.. அப்போ ஏன் வேற மொழி வேண்டாம்னு நாம் போராட்டம் பண்ணோம்?"

"போன வாரம் கொலம்பஸ் பத்தின படம் பார்த்தேன்.. கொலம்பஸ் கரீபியன் தீவுகளுக்குப்போறபோது ஒரு பழங்குடி பையனுக்கு ஸ்பானிஷ் கத்துக்கொடுத்து அங்கு இருக்கிற பழங்குடி மக்களுடன் தொடர்பு கருவியாக அவனைப் பயன் படுத்திக் கொள்வார்... ஒரு கட்டத்தில் கொலம்பஸின் ஆட்கள் பழங்குடி மக்களை கொடுமைப் படுத்துவதை காணச்சகிக்காமல் அந்தப் பழங்குடிப் பையன் தனது பழைய அடையாளங்களை எடுத்து மீண்டும் அணிந்து கொண்டு போகும்பொழுது கொலம்பஸ் அவனைக் கூப்பிடுவார்.. அவன் கொலம்பஸை நோக்கி, << நான் உன் மொழியை கத்துக்கிட்டேன்.. ஆனால் நீ என் மொழியில் இருந்து ஒரு வார்த்தைகூட கற்றுக்கொள்ளவில்லை உன்னை நான் எப்படி நம்புவது>> என சொல்லிவிட்டு காட்டுக்குள் ஓடிவிடுவான்.. இப்போ புரிந்ததா!!"

"ம்ம் புரிஞ்சது சார்..."

"இப்போ நாம ஆபிஸ்ல எல்லோரும் ஏன் ஸ்பானிஷ் படிக்கிறோம்" என்று மோகன் ஸ்பானிஷ் ல கேட்ட கேள்விக்கு

"ஜனவரில பாதிபேருக்கு மேல புரஜெக்ட் விசயமா தென்னமெரிக்கா சிலி நாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு அதிகம்" என் உடைந்த ஸ்பானிஷில் பதிலளித்தேன்.

"ம்ம் அதேதான் தேவைக்கேற்ப தெரிந்துவைத்துக் கொள்வதுதான் சரியானது.. நான் போபால்ல இருந்தப்ப ஹிந்தி தேவை இருந்தது கத்துக்கிட்டேன்.. அந்தந்த ஊருக்குப் போறப்ப அந்த ஊரு மொழியில பேசுறதுதான் நாம அந்த மக்களுக்கு கொடுக்கிற மரியாதை .. அப்படி இல்லைன்னா இரண்டு பேரும் பொதுவாக கத்துக்கிட்ட மொழியில பேசனும்..." மீண்டும் தமிழிலேயே தொடர்ந்தார்.

நான் அவரின் பேச்சைக் கேட்டபடி மெதுவாகத் தலையாட்டினேன்.

"என்ன ரொம்ப அறுக்கிறேனா? ... "

"இல்லை சார்.. அப்படி எல்லாம் இல்லை"

"சரி, விசயத்திற்கு வருவோம்.. அடுத்த வாரம் ஹைதராபாத் போகமுடியுமா உங்களால.."

"கிருஷ்ணமூர்த்தி தானே போறதா இருக்கு, நானும் போகனுமா?"

"ம்ம் நீங்களும் போக வேண்டியதா இருக்கும்.. அந்த புரஜெக்டை கொஞ்சம் நல்லா ஸ்டடி பண்ணி வச்சுக்கோங்க" என்றார்

"சார் அந்த பரீதாபாத் , பங்கஜ் அகர்வால் புரொஜெக்ட்.. " என்று இழுத்தேன்.

"ஓ அதுவா.. அவங்க நம்ம புரொபசலை ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. தட்ஸ் ஓகே. சில விசயங்கள் கிடைப்பதை விட கிடைக்காமல் இருப்பதுதான் நல்லது..."

இரவுப்பகல் கண்விழித்து உழைத்த விசயம் இப்படி ஆயிடுச்சே என்ற வருத்தம் இருந்த போதும் அதை வெளிக்காட்டாமல் மெலிதாய் சிரித்துவைத்தேன்.

நான் மோகன் அறையை விட்டு வெளியே வரும்முன்

"கார்த்தி, உங்க தாய்மொழி தமிழ் தானே?"

"ஆமாம் சார்"

"எதிர்காலத்துல உங்க பசங்களுக்கு தமிழ் கத்துக் கொடுங்க.. கடந்த தலைமுறையில் இருந்து எதிர்கால தலைமுறைக்கு அவங்க அவங்க மொழியைக் கொண்டுப் போற பெரிய பொறுப்பு நமக்கு இருக்கு..இப்பொவெல்லாம் நம்ம மொழியை வெளிசக்திகள் அழிக்க விரும்புவதில்லை..அவர்களுக்கு இந்த மொழி தேவை .. நம்ம சினிமா, ஆடியோ, புத்தகங்கள் , இண்டர்நெட் என வியாபார ரீதியா தமிழ் ஒரு பெரிய இண்டர்நேஷனல் மார்க்கெட் .. நாம கடத்தியாய் மொழியறிவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகலேனா இன்னும் மூன்று தலைமுறையில நம்ம மொழி காணாமல் போய்விடும்.. என்ன செய்யுவீங்களா?"

"நிச்சயமாக சார்" என்று தெளிவாய் வெளியே வந்தேன். மறுவாரம் நான் மட்டும்தான் ஹைதராபாத் போகவேண்டியிருந்தது. போவதற்கு முன் சில அடிப்படை வாசகங்களை தெலுங்கிலும் ஹிந்தியிலும் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டேன். வெற்றிகரமாய் ஹைதராபாத்தில் திட்டவிளக்கங்களை கொடுத்துவிட்டு அந்த அலுவலக புது நண்பர்களோடு ஒரு தெலுங்குப் படம் போகலாம் என்று முடிவு செய்து கொண்டிருந்தபோது மோகன் சாரிடமிருந்து அழைப்பு வந்தது.

"கார்த்தி, வாழ்த்துக்கள் ..இந்த புரெஜெக்ட் பிரசண்டேஷன் நல்லா பண்ணீங்கன்னு தகவல் வந்தது.. உங்க உழைப்புக்கு நன்றி.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா"

"சொல்லுங்க சார்"

"என் பொண்ணு இப்போ நல்லா பேச ஆரம்பிச்சுட்டா, அங்க குழந்தைகளுக்கான தெலுங்குப் பாடபுத்தகம், ரைம்ஸ் இருக்கிற புத்தகங்கள் ஆடியோ கேஸட்ஸ் பார்த்து வாங்கிட்டு வரமுடியுமா?"

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

"சரி சார் வாங்கி வரேன்.. ஒரு சின்ன விசயம் உங்க குழந்தை எப்படி... தெலுங்கு?" சந்தேகமாய் கேட்டேன்.

"ஓ அதுவா. என் மனைவி ரம்யா தெலுங்கு தேசப் பொண்ணு, எனக்கு எப்படி என் மொழிக் கத்துக்கொடுக்க உரிமை இருக்கோ என் மனைவிக்கும் இருக்கும் அல்லவா!! அதனால தமிழ் தெலுங்கு இரண்டும் கத்துக்கொடுக்க நாங்க டிசைட் பண்ணி இருக்கோம்... "

மோகன் மேல் வைத்திருந்த மரியாதை மேலும் அதிகமானது. ஒரு வாரக் காத்திருப்பிற்குப் பின் ஹைதராபாத் புரெஜெக்ட் வெற்றிகரமாக எங்களுக்கு கிடைத்தது. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.. கிருஷ்ணமூர்த்தி எங்க அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அந்த பரீதாபாத் பங்கஜ் அகர்வால் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டான். அவன் போய்விட்டதால் இப்பொழுது என் வேலைத் திறமையை முழுமையாகக் காட்ட வாய்ப்புக் கிடைத்தது. பொறுப்புகளும் அதிகமாக வந்து சேர்ந்தது.ம்ம்ம்... இன்னொரு விசயம் நானும் ஜெனிபர் டிசௌசாவும் அடிக்கடி ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம். ஒரு நல்ல நாள் பார்த்து ஆங்கிலத்திலேயே என் காதலைச்சொல்ல , பிகு ஏதும் செய்யாமல் உடனடியாக ஏற்றுக் கொண்டாள்.

பின்னொரு நாள் மாலை சத்யமில் ஒரு தமிழ் படம் எனக்காக அவள் என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த இடைவெளியில்

"ஜெனி, உன் தாய்மொழி என்ன?"

"கொங்கனி"

"எனக்கு அந்த மொழியை எனக்கு கற்றுத்தருவீயா?"

"நிச்சயமா கார்த்திக்" என்றாள் தமிழில்.

============

Wednesday, December 05, 2007

"காதலிக்க நேரமில்லை" - விஜய் தொலைக்காட்சித் தொடர்

விஜய் தொலைக்காட்சித் தொடர்களின் சிறப்பம்சம், அவை ஆரம்ப்பிக்கப்படும் முன்னரே கொடுக்கப்படும் விளம்பரங்கள் தாம். தொடர் எந்த வகையாக இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுவிடும். இன்னும் கொஞ்ச நாள் தொடர் நீளக்கூடாதா என நினைக்கையிலேயே தொடரை முடித்துவிடுவனர். வளவள கொழகொழ என்று சவ்வாக இழுக்காமல் திடிரென முடிப்பதும் பாராட்டப்படக் கூடிய விசயம் தான்.


தற்போது திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு (இந்திய நேரம்) "காதலிக்க நேரமில்லை" தொடர் அட்டகாசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரபல திரை இசையமைப்பாளர் விஜய் ஆந்தனி யின் ஆரம்பப் பாடலும்(பாடல் வரிகள் : தேன்மொழி தாஸ்), சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ள காட்சியமைப்புகளும், சின்னத்திரை அடுத்த பரிணாமத்தை நோக்கி மெல்ல நகர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.



பிரஜன், சந்திரா லக்ஷ்மணன், "உன்னாலே உன்னாலே" ஸ்ரீநாத் ஆகியோர் கதையின் மையக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். பிரஜன்,ஏற்கனவே சன் மியுசிக் தொகுப்பாளராக இருந்த காலங்களில் விஜய் தொலைக்காட்சிக்காக மின்பிம்பங்கள் தயாரித்த "இது ஒரு காதல் கதை" தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் நாயகனாக நடித்து திடிரென ஏனோ மாற்றப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. தற்பொழுது சன் தொலைக்காட்சியில் அஞ்சலி தொடரிலும் பிரஜன் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மறைந்த இயக்குனர் ஜீவாவின் படங்களான 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே ஆகியப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத் இந்த தொடரில் கலகலப்பான கதாபாத்திரத்தில் வருகிறார். பிரம்மா கதை திரைக்கதை எழுத அழகர் ரா.பிரபுகண்ணா இயக்கியுள்ளார்(ஒருவரா, இல்லை இரட்டை இயக்குனர்களா என்பது சரியாகத் தெரியவில்லை)



மறுநாள் மதியம் 1 மணிக்கு(இந்திய நேரம்) மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

"காதலிக்க நேரமில்லை" தொடரின் அதிகாரப்பூர்வத்தளம் இங்கே

இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்

ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம் - "நச்சுன்னு ஒரு கதை" (Surveyசன் போட்டிக்காக)

ஞாயிற்றுக்கிழமை காலையில கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்னா நினைச்சா, ஜெனி ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில ஒரு டிவிடி சகிதமா என்னை எழுப்பி விட்டு லேப்டாப்பில் அந்தப் படத்தை போட்டாள். ஜெனி ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. இருந்தாலும் அவளுக்குப் பேய்ப்படம் பார்க்கறதுன்னா கொள்ளை விருப்பம்.. ஆனால் ஒன்னு அவள் பேய்ப்படங்களை தைரியமா பகல்ல மட்டும் தான் பார்ப்பாள்.

ஒரு படம் பார்த்தான்னா ஒரு வாரத்துக்கு அவ ரூம்ல தூங்க மாட்டாள்... அவள் பயப்படுவது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து பயமுறுத்தி என் ரூம்ல வந்து தூங்குவாள். என்ன படம்னு டிவிடிக் கவரை எடுத்துப் பார்த்தேன்... அட இது நான் ஸ்கூல் படிக்கிறப்பவேயே பார்த்தது...

"ஜெனி, இந்தப் படத்தில ஒரே ஒரு பயங்காட்டுற சீன் தான்... இப்பொ வர பேய்ப்படங்களைக் கம்பேர் பண்றப்ப , இந்த காலத்து சின்னக் குழந்தைக் கூட இதைப் பார்த்துப் பயப்படாது... "

ஒவ்வொரு பயங்காட்டும் சீன் வரும்பொழுதும் அதை முன்கூட்டியே ஜெனியிடம் நான் சொல்ல சொல்ல அவள் வழக்கத்தை விட கொஞ்சம் தைரியமாகவே படத்தைப் பார்த்தாள்.

"ஜெனி, இப்போ பாரு, அந்த ஹீரோவோட கம்ப்யூட்டர்லேந்து ஒரு கை வரும் பாரேன்!!!
இந்த கம்ப்யூட்டர்லேந்து கைவரும் சீன் தான் அப்போ என் கனவில எல்லாம் அடிக்கடி வரும்.. பாரேன்.. பாரேன்.... "

ஜெனியும் கைவரும் என்று அந்த சீனை உன்னிப்பாக கவனித்தாள்... கம்ப்யூட்டரிலிருந்து கை
வராமலேயே அந்த சீன் முடிந்துப் போனது. எனக்கு குழப்பமாய் போனது.. திரும்பவும் டிவிடிக் கவரை எடுத்து சரிபார்த்தேன்... அதே படம்தான்... ஹீரோவின் கம்ப்யூட்டரில் இருந்து கைவரும் சீன் தான் இந்தப் படத்திலேயே கொஞ்சம் பயமான சீன்.. அது வரவில்லையே!!! டிவிடி வெர்ஷன்ல கட் பண்ணிட்டாங்களா!!! இல்லை நான் தான் படத்தை மறந்துட்டேனா!! ஒன்றும் புரியவில்லை... அந்த ஒரு சீனைத்தவிர நான் சொன்ன எல்லா சீனும் சரியா படத்தில் இருந்தது.

படம் முடிந்ததற்கும் ஜெனிக்கு கார்த்தியிடம் இருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது,

"ரம்யா, லேப்பியும், டிவிடியும் இங்கேயே இருக்கட்டும்,, நைட்டு வந்து எடுத்துக்கிறேன்.."

ஜெனி போனதும் திரும்பவும் தூங்கப்போன நான் மதியம் எழுந்தவுடன் ஒரு கியுரியாசிட்டியில் திரும்பவும் அதேப் படத்தை போட்டுப் பார்க்க ஆரம்பித்தேன்,,, எல்லா சீனும் வந்தது... அந்த கம்ப்யூட்டர் கை சீன்.. மனது என்னையும் அறியாமல் திக் திக் என அடிக்க ஆரம்பித்தது... ஹீரோ கம்ப்யூட்டரில் எதோ செய்து கொண்டிருக்கிறான்.. கை நீளூமா.. இல்லை இல்லை.. .. அந்த சீன் வரவில்லை... என் பதைபதைப்பு சிறிது நேரம் நின்றது..

ஆனால் ... ஆனால்... ஆனால்... ஆனால்... நான் படம் பார்த்துக் கொண்டிருந்த லேப்டாப்பிலிருந்து ஒரு கை என் கழுத்து வரை நீளஅ..ஆஆஆஆஆஆஆஆஆரம்பித்தது....
----------------------------

Surveyசன் நடத்தும் "நச்சுன்னு ஒரு கதை" போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, November 21, 2007

அணில் கும்ப்ளேவும் பெரோஷா கோட்லா மைதானமும்

அணில் கும்ப்ளே தனக்கு பிடித்தமான மைதானமான தில்லி பெரொஷா கோட்லா மைதானத்தில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களம் இறங்குகிறார். 1999 ஆம் ஆண்டு இங்கு தான் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கும்ப்ளே இங்கு ஐந்து டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி மொத்தம் 48 விக்கெட்டுகளை
வீழ்த்தியுள்ளார். இந்த ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் தரப் போட்டி ஒன்றில் அணில்கும்ப்ளே இங்கு சதம் ஒன்று அடித்துள்ளது மேலும் ஒரு சுவாரசியமான விசயம்.

அணில் கும்ப்ளேவின் பத்துக்குப் பத்து வீடியோ இங்கே


இந்தியா இங்கு மொத்தம் 28 ஆட்டங்களில் விளையாடி 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1952 ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன் ஆன டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவின் கடைசிவிக்கெட்டிற்கு இணையாக ஹெமு அதிகாரி மற்றும் குலாம் அகமது ஆடி எடுத்த 109 ரன்கள் இன்றளவும் இந்திய சாதனையாகும்.

விபரமான ஸ்கோர் கார்டுக்கு இங்கு சொடுக்கவும்

இங்கு தான் சுனில் கவாஸ்கர் டான் பிராட் மேனின் அதிக சதங்கள் அடித்த சாதனையை முறியடித்தார்.

1883 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு வெலிங்டன் பெவிலியன் என அழைக்கப்பட்ட இந்த மைதானம் துக்ளக் வம்சாவளி அரசரான பெரோஷா பெயரைக் கொண்டு தற்போது அழைக்கப்படுகிறது. டெஸ்ட் ஆட்டங்களில் இந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளனர். இந்த முறையும் புது கேப்டன் தலைமையில் சிறப்பாக ஆடுவார்கள் என வாழ்த்துவோம்.

Tuesday, November 20, 2007

மௌனராகம் - கார்த்திக் - ரேவதி காட்சிகள்

தொலைக்காட்சி ஓடைகளில் மௌனராகம் படம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பப்படும்பொழுதும் கார்த்திக்-ரேவதி வரும் காட்சிகளைப் பார்க்காமல் விடுவதே இல்லை. எத்தனை முறைப் பார்த்தாலும் சலிப்புத்தட்டாத காட்சியமைப்புகள் , இந்தக் காட்சிகளுக்குப் பின்னணி இசைக்கோர்வைகள் பெரிய பலம் என்பது நூறுசதவீத உண்மை.



ஒரு காட்சியில் மணிரத்னம் "continuity" யைத் தவற விட்டு இருப்பார். ரேவதி பயணம் செய்யும் பேருந்தை தொடர்ந்து வரும் கார்த்திக் லேசாக தாடி வைத்திருப்பார். ஆனால் பேருந்துக்குள் வரும்பொழுது முழுக்க சவரம் செய்யப்பட்டு பளபளப்பான முகத்தோடு வருவார். Frame by frame ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து இருந்து இருக்கலாம்.

கடலைக் கொறித்துக்கொண்டே கார்த்திக் பின்னோக்கி நடந்து வரும் காட்சி, அதே வசனங்களுடன் மணிரத்னத்தின் முதல்படமான அனில்கபூர் நடித்த பல்லவி அனுபல்லவியிலும் இடம்பெற்றிருக்கும். (கன்னடப் படமான இது, பின்பு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது)

கார்த்திக், ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமவுலி என காபி சாப்பிட அழைக்கும் காட்சி ஒரு அழகிய குட்டிக்கவிதை.


படத்தை யுடியூப் தளத்தில் வலையேற்றி வைத்திருந்த பால்ஸ்055 க்கு நன்றி

Thursday, November 15, 2007

கற்கப்போவது தமிழ் - சிறுகதை

மோகன் டீமில் ஒரு புதுப் பையன் சேர்ந்து இருந்தான். பொதுவாக அவன் டீமில் யார் புதிதாய் சேர்ந்தாலும் அவர்களைப் பிழிந்து எடுத்துவிடுவான். ஆறு மணிக்கு மேல் உட்கார வைத்து அவர்களுக்கு தினமும் அட்வைஸ் மழை பொழிவான். அத்திப்பூத்தாற் போல நான் சில நேரங்களில் வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அடுத்த தடுப்பில் இருக்கும் அவன் பேச்சு அப்படியே கேட்கும். புதிதாய் வந்துள்ள "ஜூனியர்கள்" மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு சிரிப்பாய் வரும். ஆனால் அவன் "கோடிங்" சொல்லித்தரும் விதம் அலாதியானது. ஜூனியர்களுக்கு மிகவும் சிரத்தை எடுத்து சொல்லித்தருவான்.

என்ன இருந்தும் எனக்கும் மோகனுக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இத்தனைக்கும் மோகனும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவனுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை எல்லாம் இப்போ வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.

இந்தப் புதுப்பையன் துறுதுறுவென இருந்தான். ஸ்ரீலங்கா கிரிக்கெட் டீம்ல முன்பு கலுவித்தாரனே என்கிற பெயரில் ஒரு விக்கெட்கீப்பர் ஞாபகம் இருக்கா!!. அச்சு அசலாக இந்தப் பையன் கலுவித்தாரனே மாதிரியே இருந்தான். மதிய உணவு இடைவெளியில் மோகன் அந்தப் பையனுடன் அருகில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு கலுவித்தாரனே ரொம்ப ரொம்ப பிடிச்ச கிரிக்கெட்டர். எனக்கு உடனே அந்தப் புதுப்பையன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. என்னோட ஹெச்.ஆர் ஜெனியை இண்டர்காமில் கூப்பிட்டேன்.

"ஜெனி, மோகன் டீம்ல புதுசா ஒரு பையன் வந்திருக்கானே , அவன் பேரு என்ன?"

"யா, ஹீ ஈஸ் போஸ், ஸோ ஸ்வீட் பாய், நான் தான் அவனை பர்சனல் இண்டர்வியூ பண்ணேன், அவன் தான் கோலேஜ்ல டோப்பர், பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட்.. உன்னை மாதிரி அவனும் மதுரைக்காரன் தான் .....பாண்டி.... பாண்டி பையன் "என மலையாள வாடையில் தமிழ் பேசி சிரித்தாள்.

அவள் கிண்டலுக்குப் பதிலாக நிலாவில் டீக்கடை வைத்த நாயரின் ஜோக்கை சொல்லி ஜெனியிடம் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு மனம் இல்லாமல் போனை வைத்தேன். ஜெனியிடம் பேசுவது எப்போதும் சுவாரசியம் தான்.

பேரும் ஊரும் போஸை "நம்மாளு" என்று உறுதி செய்தன. அவன் மேல திடிரென புதுப்பாசம் வந்தது. மறுநாள் புகழ்பெற்ற தனியார் பல்கலை கழகம் நடத்தும் தொலை தூர பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு அலுவலக விறாந்தாவில் நடந்து கொண்டிருந்தது, போன வருஷமே TREASURY MANAGEMENT படிப்பில் சேரவேண்டும் என நினைத்திருந்தேன்.சேருகிறார்களோ இல்லியோ அலுவலகத்தில் இருந்த அனைவரும் அங்குதான் குழுமி இருந்தனர். போஸ் அந்த கூட்டத்தில் இல்லாமல் தன் இடத்தில் உட்கார்ந்து அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை அலுவலக நூலகத்தில் நான் அன்றைய நாளிதழ்களை மேய்ந்து கொண்டிருக்கும்பொழுது போஸ் அங்கு இருந்த பொதுவான பிரிண்டரில்
சில பிரிண்ட் அவுட்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் என்னைப்பார்த்து சிரிக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருக்கும்போதே நானே முந்திக் கொண்டு சிரித்து "ஹாய் போஸ்" என்றேன். அவன் முகம் பிரகாசமானது. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே மக்களுக்கு சந்தோசம் தான். அதுவும் ஜுனியராகிய தன் பெயரை சீனியர் நான் தெரிந்து வைத்திருப்பது அவனுக்கு மேலும் சந்தோசத்தைக் கொடுத்திருக்கும்.

"ஆபிஸ் பிடிச்சிருக்கா"

"ஓ யெஸ் சார், நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்"

"ம்ம்.. அது என்ன பிரிண்ட் அவுட்ஸ்?"

"மெட்றாஸ் யுனிவர்ஸிட்டி தமிழ் பி.ஏ அப்ளிகேஷன் ஃபார்ம் சார்,"

"உன் பிரெண்ட்ஸ்க்கா?"

"இல்லை சார், எனக்குத்தான்.. நான் தான் பண்ணலாம்னு இருக்கேன். 10 வது வரை நான் தமிழ் நல்லா படிப்பேன். டென்த்ல தமிழ்ல எங்க டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் ... ஆனால் அப்பா +2 ல நல்ல டோட்டல் வரனும்னு பிரெஞ்சு எடுக்கச் சொல்லிட்டாரு. அப்புறம் இஞ்சினியரிங்ல நாலு வருஷம் போயிடுச்சு,,,இருந்தாலும் அந்த ஆர்வம் இன்னும் நீர்த்துப் போகாமல் இன்னும் இருக்கு.. ஜாயின் பண்ணிடலாம்னு இருக்கேன் சார்"

அவன் அப்படி பேசுவதைக்கேட்கும்பொழுது சந்தோசமாகத்தான் இருந்தது. பெருமையாகவும் இருந்தது. போனவாரம் என் மனைவி ரம்யா "கற்றது தமிழ்" படம் பார்த்த பிறகு "வீட்டில் வெறுமன இருப்பதற்கு கரஸ்ல தமிழ் படிக்ட்டுமா?" என்று சீரியஸாகவே கேட்டது ஞாபகத்திற்கு வந்து போனது.

போஸின் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு நூலகத்தை விட்டு வெளியே வரும்போது மோகன் எதிரே வந்தான். அவனைப்பார்த்து கடைசியா எப்பொழுது புன்னகைத்தேன்.. மறந்து போய்விட்டது,, ம்ம் ஆறு மாதங்கள் இருக்கலாம்.

"ஹாய்டா கார்த்தி" அவனே பேச்சை ஆரம்பித்து என் புரஜெக்ட் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். வழக்கம்போல அதை இப்படி செய் அப்படி அப்படி என அட்வைஸினால் நான் எரிச்சல் ஆவதைக் கண்ட மோகன்,

"கார்த்தி, நான் எம்.ஏ தமிழ் கிளியர் பண்ணிட்டேண்டா!!!"

போஸின் தமிழார்வம் மீண்டும் கிளர்ந்து எழுந்ததற்கு இவனும் ஒரு காரணம் என எனக்குப் புரிந்தது.

"கங்கிராட்ஸ், மன்னிச்சுக்கோ வாழ்த்துக்கள் "

"நன்றி நன்றி .. ரம்யா எப்படி இருக்கா? "

"ஷீ ஈஸ் ஃபைன் .."

"நான் கேட்டதாக சொல்லு"

"ஸ்யூர் ஸ்யூர்"

மோகனுடனான உரையாடலை முடித்துவிட்டு, போஸிடம் எனக்கும் ஒரு பி.ஏ தமிழ் அப்ளிகேஷன் பிரிண்ட் அவுட் எடுத்து தரச்சொன்னேன்.அதை ரம்யாவிடம் கொடுத்தபொழுது இஞ்சினியரிங் டிகிரி வாங்கும்பொழுது அடைந்த சந்தோசத்தை விட அதிகம் சந்தோசப்பட்டாள்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு , நீண்ட நாள் கழித்து போஸ் "எங்காளு" இல்லை என்று உறுதியாகத் தெரிந்தது. இருந்தும் அவனை எனக்கு இன்னும் அதிகமாகவே பிடித்தது. மறுவருடம் நானும் தமிழ் படிப்பிற்கு அப்ளிகேஷன் போட்டேன். மோகனைப் பற்றி சொல்லவில்லையே.. அவன் வேலையை விட்டுவிட்டு பிரான்சு போய்விட்டான். அங்கு தமிழ்- ஆங்கிலம்- பிரெஞ்சு அகராதி ஒன்றை answers.com ஸ்டைலில் உருவாக்கிக்
கொண்டிருப்பதாகவும் , ரம்யாவைக் கேட்டதாகவும் மெயில் அனுப்பி இருந்தான். மோகன் ரம்யாவை விசாரித்தது பற்றி நான் ரம்யாவிடம் வழக்கம் போல சொல்லவில்லை.

Wednesday, November 14, 2007

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 3 வலைப்பதிவர்களின் கூட்டுத் தொடர்கதை

முந்தையப் பகுதிகள் :
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 1 எழுதியவர் சிறில் அலெக்ஸ்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 2 எழுதியவர் லக்கிலுக்

இனி

"அன்புள்ள அண்ணா சுரேஷுக்கு" இந்த வாக்கியம் அவனது மூளையில் சுத்தியலால் அடிப்பது போல திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது.மின்னஞ்சலை எரிச்சலுடன் படித்து முடித்துவிட்டு , அலுவலக தோட்டத்தில் கையில் சிகரெட்டுடன் வலம் வந்து கொண்டிருந்தான். ஒரு மணி நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை
உள்ளிழுத்துவிட்டு மீண்டும் இருக்கைக்கு வந்தமர்ந்தான். மீண்டும் ஒரு முறை அந்த மின்னஞ்சலை வாசிக்க ஆரம்பித்தான்.

அன்புள்ள அண்ணா சுரேஷுக்கு,
நான் உங்களை அண்ணா என்று அழைப்பது உங்களுக்கு வியப்பாய் இருக்கலாம். ஏன் அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். மன்னிக்கவும். தங்களது சூசகமான வார்த்தைகளின் மூலம் தங்களது விருப்பத்தை அறிந்தேன். உங்களது பெயரும், பேச்சுக்களும் எனது பள்ளிக்காலத்தில் என்னுடன் படித்த சுரேஷையே நினைவுப்
படுத்துகின்றன. சுரேஷ் என் உண்மையான சகோதரன் போல் என் மேல் பிரியம் வைத்து இருந்தான். பள்ளி இறுதிக்குப் பின்னர் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்களை இணையத்தில் சந்தித்து அரட்டையடிப்பது அவனுடனே பேசுவதைப் போல உணருகின்றேன்.

உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையுடன்
ஆம்பல்

இந்த முறை நல்ல ஆங்கிலத்தில் எழுதிய மின்னஞ்சலை வாசித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் சுரேஷ் ஆர்குட்டினுள் புகுந்தான். ஆம்பலுடனான நட்பு இங்குதான் அவனுக்கு ஆரம்பமானது. ஒரே ஒரு ஸ்கிராப் இருக்க ஸ்கிராப் புக் பக்கம் சென்றான். அது ஆம்பல் உடையது.
"அண்ணா, சுரேஷிற்கு காலை வணக்கம்" தமிழ் வாக்கியம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

ஆம்பலின் மின்னஞ்சல் முகவரி கிடைத்ததில் இருந்து , அவளின் ஆர்குட் புரைபல் பக்கமே அவன் போனதில்லை. அவளின் புரைபலின் பக்கம் நீண்ட நாள் கழித்து அப்போது சென்றான். அவனைத்தவிர ஆம்பலுக்கு வேறு நண்பர்கள் அங்கு இல்லை. அவன் மட்டுமே இருந்தான். ஆர்குட்டில் இருந்து லாக் அவுட் செய்யலாம் என்று நினைத்து எலிக்குட்டியை இழுத்து சென்றபோது search கட்டத்தைக் கண்டவுடன் அவனுக்கு சடாரென ஏதோ தோன்றியது.

சுரேஷிற்கு இது ஒரு வியாதி போல, நாளுக்கொருமுறை தன் பெயரையோ தனக்கு நெருங்கியவர்களின் பெயரையோ கூகிளில் அடித்து தேடுவது. என்னமோ தெரியவில்லை ஆம்பலுடன் நெருக்கமான இந்த பூஜ்ய உறவின் நாட்களில் ஒரு முறைக்கூட அப்படி அவன் செய்ய நினைப்பு வரவில்லை. அடுத்து வரப்போகும் அதிர்ச்சிகளைப் பற்றி அறியாமல்
ஆர்குட் தேடுக கட்டத்தில் "Aambal" என்று அடித்து search பொத்தானை சொடுக்கினான்.



16 ஆர்குட் புரைபல் பக்கங்கள் வந்து விழுந்தன. அதைப் பார்க்கையில் அவனுக்குத் தலைச்சுற்றலே வந்தது, ஆம் அனைத்திலும் "ஆம்பலின்" புகைப்படங்கள். ஒவ்வொன்றாய் திறந்து பார்த்துக் கொண்டே வந்தான். அடுத்த அதிர்ச்சி அதனுள் காத்திருந்தது.

ஆம் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு நண்பர் தான். அதுவும் சுரேஷ் என்ற பெயரில்
மட்டும். 15 யும் பார்த்து முடித்துவிட்டு கடைசியாக இருந்த ஆம்பலின் பக்கத்தை திறந்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. இதில் இரண்டு நண்பர்கள். ஒன்று முந்திய பக்கங்களில் இருந்தது போன்று எதோ ஒரு சுரேஷ்.

இன்னொன்று

...............................

............................

....................................
அது அவனின் மனைவியின் புரபைல். ஒரு கணம் அவன் இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.

தொடரும்

அடுத்தப் பகுதியை எழுதப் போவது மகரந்தம் ஜி.ராகவன். (ஜிரா... ஜிரா... ஜிரா ....எக்கோ எபெக்ட்ல )

Tuesday, November 06, 2007

கலாபக் கனவுகள் - ஒரு நிமிடக்கதை

தீபாவளி சமயம் ஆதலால் எங்க மொத்த லேடிஸ் ஹாஸ்டலும் காலியாகி இருந்தது. என்னோட ரூம்மேட் ரம்யாவும் ஊருக்குப் போய்விட்டாள். ஆன்லைனிலும் யாரையும் காணவில்லை. ரொம்ப போரடித்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மொபைல் எஃப்.எம்மை ஆன் செய்தேன். ஏதோ ஒரு அலைவரிசையில் கலாபக்கனவுகள் என ஒரு தொலைபேசியில் தன் காதல் வேண்டுகோள்களை/அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தனது காதலன்/காதலியை எப்படி நேசிக்கிறார்கள் என்று உணர்வுப்பூர்வமாக அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
தொகுப்பாளர் அடுத்து நம்மிடையே கார்த்தி பேசப்போகிறார் என சொல்வதைக் கேட்டு அரைத்தூக்கத்திலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.இந்த கார்த்தி பெயர் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பெயர். அப்படியே அந்த வானொலி உரையாடலைக் கேட்கலானேன்.

"ஹல்லோ கார்த்தி சொல்லுங்க, உங்க காதலி பெயர் என்ன?"

"அவ பேரு ஜெனி, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றாங்க"

அய்யோ என்னோட பேரைச் சொல்றான்.. இந்தக்குரல் அவனோட குரல்தானே!! எனக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

"நீங்க ஜெனிக்கு எதாவது சொல்ல விரும்பிறீங்களா?"

"யெஸ், நான் எங்க இருந்தாலும் அவளோட நினைவுகளில் தான் இருக்கேன். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள், அதை அவளுக்கு ஞாபகப் படுத்தத் தான் இப்போ உங்களுக்கு போன் பண்ணேன்"

கடவுளே, என்னக் கொடுமை இது, நாளைக்கு நவம்பர் 7, கார்த்தி போன வருஷம் இந்த தேதியில தான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.என் இதயத்துடிப்பு அதிகரித்தது.

"கார்த்திக்காகவும் அவரோட காதலி ஜெனிக்காகவும் இந்த அருமையான பாடல் ஒலிபரப்பப்படுகிறது" என்று வானொலித் தொகுப்பாளர் சொல்லியவுடன் "தேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி" பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் ஒலித்துக் கொண்டிருக்க எனது அறை முழுவதும் கார்த்தி வழக்கமாக உபயோகப்படுத்தும் "ஃபர்ஃபியூமின்" வாசம் விரவத்தொடங்கியது.

Friday, November 02, 2007

நண்பரின் "ஹைக்கூ" கவிதைகள்

அலுவலக நண்பர் ஒருவருக்கு வலைப்பூ ஒன்றை உருவாக்கிக் கொடுத்து, அவரின் இரண்டு மழைக்கூ கவிதைகளை பதிய வைத்தாகிவிட்டது.

அந்த "மழைக்கூ" கவிதைகளைப் படிக்க இங்கு சொடுக்கவும்

அவர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Thursday, November 01, 2007

தற்கொலை - ஒரு நிமிடக்கதை

கார்த்தி தற்கொலை பண்ணிக்கிட்டான் என்பதை கேட்ட பொழுது ஜெனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சொன்னதை செய்துவிட்டான். கடைசி ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராதவன் நேற்று அவள் கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அங்கு வந்த கார்த்தி தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி இருந்தான்.ஏற்கனவே அவளை இது போல அவன் பலமுறை மிரட்டி இருப்பதால் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் இன்று அலுவலகம் அவள் கிளம்பும் முன் மோகனின் தொலைபேசி அழைப்பில் இந்த அதிர்ச்சி செய்தி வந்திருந்தது.


“ஜெனி, கார்த்தி தங்கி இருந்த பிளாட் நாலு நாளா உட்பக்கமா பூட்டி இருந்துச்சாம், நேத்து புல்லா செம பேட் ஸ்மெல் அடிச்சதனால் பிளாட் செக்ரட்டரி கதவை உடைச்சி உள்ளே போய் இருக்காங்க... கார்த்தியோட பாடி டிகம்போஸ் ஆகி இருக்கு.. செத்து போய் மூணு நாள் ஆயிருக்கும்னு சொல்றாங்க" என மோகன் சொல்ல சொல்ல ஜெனிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.

புண்ய பூமி நா தேசம் - தெலுங்கு பாடல், என்.டி.ஆர் கட்டபொம்மனாக

என்.டி.ராமாராவ் தனது உணர்ச்சிப்பிரவாகமான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை மட்டுமன்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். தமிழகத்தில் கிருஷணர் , ராமர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இவர்தான்.


மேஜர் சந்திரகாந்த் என்ற தெலுங்குப்படத்தில் வரும் பாடல் காட்சி இது. இதில் ராமாராவ் வரலாற்று நாயகர்களாக தோன்றி இருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வருகிறார்.
வரி வட்டி வசனமும் பாடலின் இடையில் வரும்.

இந்த படம் ராமாராவின் கடைசிபடம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலுக்கு இசை : கீரவாணி(நம்ம ஊரில் மரகதமணி)

நன்றி: நந்தமூரி ரசிகர்கள் இணையதளம்

Monday, October 29, 2007

வாழ்க்கையில்(ன்) சில விசயங்கள் - சிறுகதை

"மனிதனாய் மரத்துப்போய் வீழ்வதைக்காட்டிலும் மழைத்துளியாய் மண்ணில் வீழ்ந்திருக்கலாமோ" எங்கோ படித்த கவிதையின் மீள்நினைவா அல்லது என்னையும் அறியாமல் கவிதை வருகிறதா என்று புரியாமல் , புரிய விருப்பமும் இல்லாமல் மனதிற்கினிய இசைபோல் நிதானமாக பெய்து கொண்டிருந்த மழையை கல்லூரி நூலக
விறாந்தாவில் நின்று ரசித்துக் கொண்டிருக்கும்பொழுது, "கார்த்தி," என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

"என்னடா உள்ளே வராமல் ,, இங்க நின்னு மழையை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க, இன்னக்கி எதாவது கான்செப்ட் சொல்லப் போறியா ? "

"அதெல்லாம் ஒன்னுமில்லை,, புக்ஸ் எடுத்திட்டியா , வா போகலாம். "

"இல்லை மழை நிக்கட்டும் , அடுத்த வாரம் எக்ஸாம் வேற.. மழையில நனஞ்சு ஃபீவர் எதாவது வந்துட்டா என்ன பண்றது?"

நான் ரம்யாவுக்கு மட்டும் எதிர்ப்பேதும் சொல்வதில்லை. அவள் சொன்னால் நான் கேட்டுக்கொள்வேன். பிடிக்கவைல்லை என்றாலும் கூட .. ரம்யா என்னிடம் முதன் முதலில் பேசியது , கன்யாகுமரியில் , இரண்டு வருடங்களுக்கு முன், துறை சார்ந்த சுற்றுலா என்று வழக்கமான கதை விட்டு திருவனந்தபுரம் சென்று திரும்புவழியில் கன்யாகுமரி கோயிலுக்குள் எல்லோரும் போக நான் மட்டும் உள்ளே வரவில்லை என்று சொன்ன போது என்னை ஆச்சரியமா பார்த்த அவள் , சுற்றுலா முடிந்த அடுத்த வாரம் முதல் தடவையா என்னிடம் பேசினாள்.

"கார்த்தி, எல்லோரும் கோயிலுக்கு உள்ளேப் போனப்ப நீ மட்டும் ஏன் வரலேன்னு சொன்ன?, அஜீஸ் கூட உள்ளே வந்தான், if you dont mind may i know the reason?"

"சாமி, பூதம் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை.."

நான் பூதத்துடன் சாமியை சேர்த்து சொன்னவுடன் அவள் முகம் சுண்டிபோனது.

முதல்முறையாகப் பேசும் பெண்ணிடம் நான் அப்படி பேசி இருக்கக்கூடாது தான் என்ன செய்வது.. சிறுவயதில் இருந்து கடவுள், பக்தி , பிராயசித்தம் என்ற பெயரில் என் அம்மா அப்பா ஆடிய ஆட்டங்கள் என்னையும் அறியாமல் இந்த விசயங்களை விட்டு விலக வைத்தது. விவரம் தெரிந்த பின், இந்த மாதிரி விசயங்களை கண்டால்
வெறுப்புதான் மிஞ்சுகிறது. இன்னமும் என் வீட்டில் என் அப்பாவின் மாத சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு கடவுளுக்குக் கொடுக்கப்படுகிறது. கடவுள் அப்படி திருப்பி என்னத்தான் கொடுக்கிறார் என்று தெரியவில்லை.

மறுநாள் நானே வலியச் சென்று ரம்யாவிடம் "ஹாய்" சொன்னேன். அவள் ஏதும் கோபமின்றி சிரித்து திரும்ப "ஹாய்" சொன்னாள்.

"கார்த்தி, உனக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை"

"சிம்பிள் லாஜிக் ரம்யா, கடவுள் இருக்கிறது அப்படி நம்பறதுனால வர்ற பிரச்சினைகளை விட, கடவுள் இல்லைன்னு சொல்றதுனால வர்ற பிரச்சினைகள் கம்மி, எது குறைச்ச பிராப்லம்ஸ் தருதோ அதை எடுத்துக்கிட்டேன்"


"அப்படி இல்லை கார்த்தி, பக்தி மனுசனைப் பக்குவப்படுத்தும்.. நம்மள மாதிரி படிக்கிற பசங்களுக்கு கான்சண்ட்ரேசன் பவரை இன்கிரீஸ் பண்ணும்" ரம்யா அடுக்கிக் கொண்டே போனாள். இது எல்லாம் நான் ஏற்கனவே என் அம்மா அப்பா சொல்லக் கேட்டிருந்ததால் ஆரவமின்றி அவள் சொல்வதை தலையாட்டிக்
கொண்டே கேட்டிருந்தேன். அதன் பிறகு நல்ல நண்பர்களாயினோம். சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரம்யா, கடவுள் நம்பிக்கை, பக்தி பேச்சுக்களை ஆரம்பிப்பாள். ஆன்மிகம் மனிதனுக்கு எவ்வளவு தேவை என்று அவள் விளக்கமாக நிறைய உதாரணங்கள் கொடுத்து பேசுவதைக் கேட்க சுவாரசியமத்தான் இருக்கும். என்னதான் இருந்தாலும் கோயில் குருக்கள் பொண்ணாயிற்றே!!

"கார்த்தி நீ எங்கப்பா பேசுறதைக் கேட்டிருக்கனும், அவர் பேச்சைக்கேட்டா இந்த நிமிஷமே ஆத்திகத்திற்கு மாறிடுவே"

அவளின் அப்பாவுடன் ஒரு முறை பேசியிருக்கின்றேன். நான் உருவகப்படுத்தி வைத்திருந்த வழக்கமான குருக்கள் போல் இல்லை. சகஜமாகவே பேசினார்.

"உன்னைப் பத்தி ரம்யா நிறைய சொல்லி இருக்காள், நாத்திகமும் ஒரு அருமையான பாதை தான், அதில் பிடிப்போடு இரு,அதுவும் நல்ல மார்க்கம்னுதான் நம் முன்னோர் சொல்லி இருக்காங்க " என்று வாழ்த்தினார்.

அவர் அப்படி சொல்லியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. மழையின் சலசலப்பு சத்தம் நின்றவுடன் நினைவுச்சுழலில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தேன்.

"கார்த்தி, என் கூட கோயிலுக்கு வர்றீயா?" என்று ரம்யா கேட்க புருவத்தை உயர்த்தி வியப்பு மேலிட அவளைப் பார்த்தேன்.இதுவரை இப்படிக் கேட்டதில்லை.

"சரி போகலாம், " என்று நூலகப்படிகளில் இறங்கி கல்லூரி சாலையில் நடக்க ஆரம்பித்தோம். ஆடவர் விடுதி கடக்கும்பொழுதெல்லாம் எங்கள் இருவரைக் கண்டால் முன்பு சத்தம் போடும் மாணவர்கள் இப்பொழுதெல்லாம்
எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஒரு வேளை எங்களைப் பற்றி கிண்டலடிப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று நினைத்து இருக்கலாம். இன்னும் கல்லூரி முடிய 3 மாதம்தான் என்பதால் போனால் போய்ட்டு போகுது
என்று விட்டும் இருக்கலாம். திருப்பரங்குன்றம் நுழைவாயில் வரும் வரை அவள் எதுவும் பேசவில்லை.
நானும் அமைதியாக அவளுடன் நடந்தேன். செருப்பிற்கு காசு கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.மழை இருந்தும் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முருகனை கண்ணைமூடிக்கொண்டு வேண்டிக்கொண்டாள்.

எல்லோரும் கைக்கூப்பி வேண்டிக்கொண்டிருக்கும்பொழுது நானும் அப்படி செய்யவில்லை என்றால் நல்லா இருக்காது என்று கைக்கூப்பினேன்.

கோயிலில் இருந்து திரும்பும் போது

"கார்த்தி, வெற்றிவேல்ல சாப்பிட்டு போவோண்டா!!, ஒரு குட்டி டீரீட் உனக்கு"



எனக்குத்திரும்பவும் ஆச்சரியம். வழக்கமான ரம்யாவைப் போல் இல்லாமல் அவள் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது.

சாப்பிடும்பொழுது,

"கார்த்தி, ஒரு குட் நியுஸ், ஃபைனல் செமஸ்டர் முடிந்தவுடன், எனக்கு மேரேஜ், என் அத்தைப் பையன் தான். அவர் பேரு மோகனகிருஷ்ணன், ஸ்டேட்ஸ் ல இருக்காரு.."

எனக்கு தலைப் புரை ஏறியது. தண்ணீரைக் குடித்தவுடன்

"கங்கிராட்ஸ் ரம்யா" இதை என்னால் முழுமனதோடு சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் ரம்யாமேல் எனக்கு காதல் அப்படி எல்லாம் இதுவரை தோன்றியதில்லை. எங்களோட துறைத்தலைவர் இதைப் பற்றி கேட்டபொழுது
கூட சிறு உணர்வு கூட வரவில்லை. ஏன் இப்படி இப்பொழுது? ஒரு வேளை அவளின் திருமணம் எங்கள் இருவரின் நட்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடும் என்ற நினைப்போ!!
இல்லை என்றால் என்னையுமறியாமல் அவளை நேசிக்க ஆரம்பித்திருக்கின்றேனா?

"கார்த்தி, நீ இன்னைக்கு சாமி கும்பிட்டதை பார்த்தேனே!!" என்று குழந்தையின் குதுகலத்துடன் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

"அது கடவுளுக்காக இல்லை, கல்லை சிற்பமாக்கிய கடவுளை நினைத்து"

"ம்ம்ம்.... எனக்கு ஒரு ஆசை என்னக்காவது ஒரு நாள், உன்னை கடவுள் நம்பிக்கை உள்ள ஆளாப்பார்க்கனும்"

"may be in next ஜென்மம்"

நாட்கள் கடகடவென ஓடியது. எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்தவுடனேயே ரம்யாவின் கல்யாணம் முடிந்தது.ரம்யாவின் கணவன் மோகன கிருஷ்ணன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். பேச்சிலும் நல்ல கனிவு இருந்தது. ரம்யா கொடுத்து வைத்தவள்தான். திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே அவள் அமெரிக்கா
போய்விட்டாள். அதன்பிறகு அவளின் தொடர்பு துண்டித்துப் போனது. எனது usa.net மின்னஞ்சல் சேவையை நிறுத்திவிட்டதால் அவளை மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவளும் usa.net மின்னஞ்சல் சேவைதான் வைத்திருந்தாள்.

படித்து முடித்தவுடன் வேலை இல்லாமல் இருந்தால் எவ்வளவு அவமானம் என்பதை உற்றம் சுற்றம் கேள்விகளால் துளைத்தெடுக்கும்பொழுதுதான் உணர்ந்தேன். பகீரத பிரயாத்தனம் செய்தும் வேலை என்பது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. மெட்றாஸ் போய் தங்கி வேலை தேடலாம் என்றாலும் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. அம்மா ஒரு நாள் என்னிடம் வந்து

"பழனிக்கு ஒருமுறை மாலை போட்டுட்டு போய் வாடா!! எல்லாம் நல்லபடியா நடக்கும்,," என்று பாவமாய் கேட்க அம்மாவிற்காக போகலாம் என்று முடிவெடுத்தேன்.

பழனி முருகன் சன்னிதானத்தில் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. "கடவுள் கிட்ட அப்படியே சரணாகதி அடைந்துவிடும் அளவுக்கு வேண்டுப்பா.. அவர் எல்லாம் தருவார்" ..

மனமுருக எனக்கு நல்ல வேலை தரும்படிக்கேட்டேன். என்ன ஆச்சரியம் அடுத்த இரண்டாவது வாரத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஏதோ ஒரு சக்தி இருப்பதை நான் நம்ப ஆரம்பித்துவிட்டதாக என் மனது சொல்லியது. அதன்
பின் அடிக்கடி கோவில் போக ஆரம்பித்து இந்த ஐந்தாறு வருடங்களில் பக்தியின் மறு உருவமாகவே மாறிவிட்டேன். நான் எப்போவெல்லாம் கோயிலுக்கு போறேனோ அப்போதெல்லாம் ரம்யாவின் ஞாபகம் வரும். நான் இப்படி இருப்பதை பார்த்தால் நிச்சயம் சந்தோசப்படுவாள். கடவுள் நம்பிக்கை பிரச்சினை அல்ல...
பிரச்சினைகளை சந்திக்க நாம் நாமே கொடுத்துக் கொள்ளும் ஆன்மபலம். எனக்கு பெண் தேடும் விளம்பரத்தில் கூட இறைபக்தியில் நம்பிக்கை உள்ளவர் வேண்டும் என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.

அன்று, அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லை... எல்லோரும் ஓர்குட்டில் மூழ்கி இருந்தனர். சும்மாதானே இருக்கிறோம் என்று ஓர்குட்டில் என் ஜிமெயில் மின்னஞ்சல் கொடுத்து உள்நுழைந்தேன். ரம்யா மோகனகிருஷ்ணன் என்று தேடிப்பார்த்தேன். ஏகப்பட்ட பேர்கள் இருந்தார்கள். அப்படியே ஒன்றின் பின் ஒன்றாகப் பார்த்த்துக்
கொண்டே வந்தேன். "முருகா, ரம்யா கிடைக்கவேண்டும் " என்று வேண்டிக்கொண்டே அட... அங்கு இருந்தாள்.

கடவுளுக்கு நன்றி சொன்னேன். அதே முகம் ..கொஞ்சம் முகத்தில் சதை போட்டிருந்தாள். ஊர் பெங்களூர்.. அட நான் இருக்கும் இதே ஊரில் தான் இருக்கிறாள். அவளின் புகைப்படங்கள் இருக்கும் பக்கத்திற்கு போனேன்..

"My Life line" என்று சொல்லி தன் குழந்தையுடன் புகைப்படத்தில் இருந்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு என் மின்னஞ்சல் முகவரியைக் குறுந்தகவலாக ஆர்குட் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு வேறு வேலை பார்க்கலானேன். சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. தனது கைத்தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு, முடிந்தால் அந்த வார இறுதியில் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தாள். வார இறுதியில் சந்திப்பை உறுதி செய்துகொண்டு அவளின் இல்லத்திற்கு சென்றேன். போகும் முன் என் நெற்றியில் சந்தனக்கீற்றை வைத்துக்
கொண்டே கிளம்பி இருந்தேன்.

ரம்யா என்னை உற்சாகமாக வரவேற்றாலும் கண்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழுதுவிடும் போல் இருந்தது. கண்களிலும் வீட்டிலும் வெறுமை இருந்தது. வீட்டைச்சுற்றி கண்களை சுழல விட, கடவுளே என்ன இது
மோகனகிருஷ்ணனின் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது.

நான் அதைப்பார்ப்பதைக் கவனித்துவிட்ட ரம்யா,

"நீ அப்ப சொல்லுவியேடா, அது எல்லாம் கரெக்ட் கடவுள்னு எதுவுமே கிடையாது.. அப்படி இருந்திருந்தால் கடைசிவரை கடவுள் தாசனாகவே இருந்த எங்க அப்பாவை சாகடிச்சுட்டு அந்த கோயில் நகைகள் திருடுபோய் இருக்காது... கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா நாள் கிழமை தவறமா எல்லாம் செஞ்ச என்னை இப்படி
தண்டிச்சுருக்க மாட்டாரு, எல்லாம் பொய்டா.. எதுவுமே கிடையாது.. எல்லாம் ஹம்பக், பூஜை புண்ஸ்காரம் எல்லாம் நம்மளை நாமே ஏமாத்திக்கிறது"

"மோகனுக்கு!!" எனக்குக் கேட்கையிலேயே நாதழுதழுத்தது...

"போன வருஷம் திருநள்ளாறு கோயிலுக்குப் போறப்ப ஆக்ஸிடெண்ட்.. " உடைந்து அழ ஆரம்பித்தாள். அழுதுத் தீர்த்தவுடன் தன் குழந்தையைக்கூப்பிட்டு

"இந்த பிள்ளைக்காகத் தான் வாழ்றேன்.. ம்ம் சரி நாளைக்கு உனக்கு நேரம் இருந்தால் பக்கத்தில ஒரு முதியோர் ஆசிரமம் இருக்கு . உன்னால வர்றமுடியுமா? இப்பொவெல்லாம் வீக் எண்ட்ல அவங்களோடதான் ஸ்பெண்ட்
பண்றேன்."

"ம்ம் ஸ்யூர்" மேலும் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு என்வீட்டிற்கு வந்தவுடன் ஊருக்குத் தொலைபேசினேன்.

"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறதை நிறுத்தி வைங்க... கொஞ்ச நாளாகட்டும்.. நானே சொல்றேன்"

ம்ம்ம்.. வாழ்க்கையில் சில விசயங்கள் புரிவதே இல்லை என்று நினைத்துக் கொண்டே, வழக்கமாக இரவு தூங்கும் முன் கும்பிடும் சாமியை வணங்காமலேயே தூங்கிப் போனேன்.

====== முடிந்தது =====

Saturday, October 27, 2007

பறவையே எங்கு இருக்கிறாய் - "கற்றது தமிழ்" படத்தில் இருந்து ஒரு பாடற்காட்சி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.முழுபடத்தின் தரத்தை இந்த ஒருபாடலின் வாயிலாகவே அறிந்து கொள்ளும் வகையில், காட்சியமைப்பு , நாயகன் நாயகியின் உண்ர்வுகளை வெளிக்காட்டும் முகபாவங்கள்,அதை படம் பிடித்தவிதம் இசையமைப்பு, இசைக்கான வரிகள் இவையனைத்தையும் அருமையாக திரையில் கொடுத்தமைக்காக "கற்றது தமிழ்" படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்



பாடலை யூடியூப் தளத்தில் ஏற்றி வைத்திருந்த "இசைத்திரு" விற்கு நன்றி

Friday, October 26, 2007

தமிழர் தொழில் - வணிகச் சிறப்பு மாநாடு, திருப்பூர் 28/10/2007

உலகத்தமிழர் பேரமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாளை, 28.10.2007, ஞாயிறன்று திருப்பூரில் தமிழர் தொழில் வணிகச் சிறபு மாநாடு நடைபெறவிருக்கிறது. உலகத்தமிழர் பேராளர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் , தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கின்றனர்.

சக பதிவர் திரு. மா. சிவக்குமார் தொழில் வளர்ச்சியில் கணினி என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

நடைபெறும் இடம் :
ஆர்.வி குமாரசாமி திருமண மண்டபம்
தொடர்வண்டி நிலையம் , பேருந்து நிலையம் அருகில்,திருப்பூர்

Thursday, October 25, 2007

மதத்தின் பெயரால் - அம்பலப்படுத்தியது தெகல்ஹா

"வரலாறு இதுவரை பார்த்திராத விசயமாக இருக்க வேண்டும்"

"இதை செய்வதற்கு நீங்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்"

அவர்களைக் கொன்ற பின் , என்னை நான் "மகாராணா பிரதாப்பாக உணர்ந்தேன்."

இது எல்லாம் மன்னர் ஆட்சியில் போர்க்களத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் அல்ல..

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மேல் திட்டமிட்டு வன்முறையை கடவுளின் பெயரால் ஏவி விட்ட பின் வன்முறைக்கூட்டம் கொக்கரித்தவை

மனதை உறைய வைக்கும் ஆதாரங்களுடன் தெகல்ஹா இந்த திட்டமிட்ட தாக்குதலை ரகசிய புலனாய்வின் மூலம் அம்பலப்படுத்தி உள்ளது.

விவரங்களுடன் படிக்க இங்கே சொடுக்கவும்

HeadLines Today ஆங்கில தொலைக்காட்சியில் இதை இப்பொழுது ஒளிபரப்பி வருகின்றனர்.

அசாருதீன் - டெண்டுல்கர் ஜோடி ஆட்டம், கேப்டவுன் டெஸ்ட் , வீடியோ

முகமது அசாருதீன் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்தியாவை மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் வழிநடத்தி சென்றவர். இவரின் ஆட்டத்தை காண்பதே அந்தக்கால கட்டங்களில் அலாதியான அனுபவம். தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக கேப்டவுனில் இவர் ஆடிய அசூர ஆட்டத்தை இந்த வீடியோவில் காணலாம். 58/5 என்ற நிலையில் இருந்து இந்திய அணியை இவரும் டெண்டுல்கரும் மீட்டெடுப்பர். 19 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அசார் மின்னல் வேகத்தில் ரன்கள் குவித்திருப்பார். குலுஸ்னர் மேல் தனி பாசம் வைத்து அவரை சிறப்பாகக் கவனித்து இருப்பார். இதே டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் தொடா கனேஷின் பந்துகளில் தொடர்ச்சியாக குலுஸ்னர் 3 பவுண்டரிகள் அடித்து சதமடித்து இருப்பார். அவர் மூன்று அடித்தால் நாங்க ஐந்தாக அடிப்போம் என்று கவாஸ்கரின் வர்ணனையை கவனிக்கலாம்.



பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அசார் ஆட்டமிழந்த போது , டெண்டுல்கர் தனது சிறப்பான ஆட்டத்தால் சதமும் அடித்து பாலோஆனில் இருந்து மீட்டெடுப்பார். 26 பவுண்டரிகளுடன் டெண்டுல்கர் 169 ரன் எடுத்து ஒரு அருமையான கேட்சினால் ஆட்டமிழக்கப்பட்டிருப்பார்.



டெண்டுல்கரின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என நிச்சயமாகக் கூறலாம்.
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்ற போதும் அசாருதீன் - டெண்டுல்கரின் இந்த இணையாட்டம் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கும்

நன்றி : www.youtube.com

Wednesday, October 24, 2007

கார்த்தி, ஜெனி மற்றும் மோகன் - சிறுகதை

வழக்கமான ஞாயிற்றுக்கிழமை காலை போல் தூங்கி வடியாமல், பெண்கள் விடுதி பரபரப்பாய் இருந்தது. ஜெனி தடதடவென இரண்டாவது மாடியில் இருந்து படிகளில் இறங்கி ரம்யாவின் அறைக்கு ஓடினாள். அசந்து தூங்கி கொண்டிருந்த ரம்யாவை வேகமாக உலுக்கி எழுப்பினாள்.

"ரம்யா, கார்த்தி, சூசைட் பண்ணிக்கிட்டானாம்"

"வாட்... "

தூக்கத்தில் பாதியில் எழுப்பப்பட்ட அதிர்ச்சியுடன், இந்த செய்தி மேலும் ரம்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"எப்படிடி ஆச்சு, ஃபிரைடே ஈவ்னிங் கூட அவன்கிட்ட பேசினேனே...பட் அன்னைக்கு கூட அவன் டல்லாதான் இருந்தான், இன்னும் கொஞ்சநேரம் இருந்து பேசிட்டு போக சொன்னான், நான் தான் கிளம்பி வந்துட்டேன் "

ரம்யாவின் படபடப்பு அதிகமானது

"ஆமா, ரம்யா, நேத்து காலைல எனக்கு போன் பண்ணான், ஒரு முக்கியமான விசயம் பேசனும், லைப்ரரி வர்றமுடியுமான்னு கேட்டான், அவன் ஏற்கனவே எனக்கு புரோபஸ் பண்ணி இருக்குறதுனாலா, திரும்ப ஏதாவது சொல்லிடுவானோன்னு நான் தான் போகல"

"ஒரு வேளை, அவன் சொல்ல வந்ததைக் கேட்டிருந்தா அவனைக் காப்பாத்தி இருக்கலாமோ?"

தற்கொலை செய்து கொண்ட கார்த்தி, ரம்யா ஜெனியுடன் ஒரே வகுப்பில் கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவன். ஜெனி, கார்த்தி பெயர்கள் வரிசைப்படி அடுத்தடுத்து வருவதால் ஆய்வக வகுப்புகளில் ஒரே அணியில் இருப்பார்கள், இரண்டாமாண்டில் ஏற்பட்ட அறிமுகம், கார்த்தி ஜெனியை காதலிப்பதாக சொல்லும் வரை நன்றாகவே போனது. போன அரையாண்டில் அவன் தனது விருப்பத்தைச் சொல்லப்போக , முகம் திருப்பிப் போன ஜெனி, விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் ஆரம்பித்து . இந்த ஒரு வாரத்தில் கார்த்தி எவ்வளவோ முயன்றும், அவனிடம் பேசவில்லை.

கார்த்தியின் இந்த ஒரு தலைக் காதலுக்கு "வில்லன்" மோகன், மோகனும் கார்த்தி ஜெனியுடன் தான் ஆய்வக சோதனைகளைச் செய்தாக வேண்டும். ஜெனிக்கு ஆரம்பத்தில் மோகனின் "கலாட்டா செய்யும் போக்கு" பிடிக்கவில்லை என்றாலும், போக போக உள்ளூர அவனை நேசிக்க/ரசிக்க ஆரம்பித்தாள். நிறைய இடங்களில் வெளிப்படையாகவே கார்த்தி எதிரிலேயே மோகனிடம் நெருக்கமாக இருப்பதைக் காட்டிக் கொள்வாள். எரிச்சல் கோபம் இயலாமை எல்லாம் சேர்ந்து கார்த்தியை கடந்த இரண்டு மாதங்களாக பித்துப்பிடித்தவன் போல் அலைய வைத்தது. தேர்வில் மிகவும் மட்டமான மதிப்பெண்களையேப் பெற்றிருந்தான்.

"ரம்யா, கார்த்தி எதாவது லெட்டர் எழுதி வச்சிட்டு செத்துப் போய் இருப்பானா, நான் தான் காரணம்னு எழுதி இருப்பானா?" என்று பயத்துடன் அழ ஆரம்பித்தாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இருக்காதுடி, சரி, வா பாய்ஸ் ஹாஸ்டல் போய்ட்டு வரலாம், மோகன் வந்துட்டானா? "

"இன்னும் வரல.. அவன் கூட சாட் பண்ணி 15 நாள் ஆகுது, அவங்க அப்பாகூட மொரிஷியஸ் ல இருக்கான்"

ரம்யா, ஜெனி இருவரும் உடை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு அடுத்த முனையில் அமைந்திருந்த ஆடவர் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

கல்லூரி பிள்ளையார் கோவிலின் வாசலில் நின்று கொண்டிருந்த மோகனைப் பார்த்த ரம்யாவும் ஜெனியும்,

"மோகன் எப்போ வந்தே!! விசயம் கேள்விப்பட்டியா? கார்த்தி சூசைட் பண்ணிக்கிட்டான்"

"நான் வந்து ரெண்டு நாளாச்சு, ம்ம் தெரியும்.. அவன் ஒரு கவர்ட், பயந்தாங்கொள்ளி, ஐ ஹேட் ஹிம்"

"மோகன் , நீ எங்க கூட வாடா, பாய்ஸ் ஹாஸ்டல் வர்றைக்கும் போய்ட்டு வந்துடலாம்" ஜெனிக்கு இன்னும் நடுக்கம் விடவில்லை.

"நீங்க போயிட்டு வாங்க, நான் இங்க வெயிட் பண்றேன்".

---

"முடிந்தது என்று நினைத்த விசயம், மீண்டும் வந்ததனால் நான் போகின்றேன்" இதுதான் கார்த்தி விட்டுச்சென்ற குறிப்பு. கல்லூரியின் தாளாளர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் யாரையும் விசாரணை என்ற பெயரில் அதிக தொந்தரவுக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஜெனிக்கு தான் தான் காரணமோ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்தாள். அடுத்த இரண்டு நாட்கள் ரம்யாவும் ஜெனியும் கல்லூரிக்குப் போகவில்லை. ஜெனியைத் தேற்றுவதிலேயே ரம்யா நேரத்தைச் செலவிட வேண்டியதாக இருந்தது.
புதனன்று காலையில் ஜெனி எழுந்தவுடன் ரம்யாவிடம்,

"நேத்து நைட், கார்த்திக்கிட்டே இருந்து கால் வந்தது, அவன் தான் பேசினான் ஸ்யூர்"

"உளறாதே!!ஜெனி அவனோட செல்போன் தான் போலிஸ் கிட்ட இருக்கு, சான்ஸே இல்லை.. உன்னோட பிரமை...சரி வா இன்னக்கி நாம கிளாஸ் அட்டெண்ட் பண்ணலாம் சீக்கிரம் கிளம்பு"

"இல்லை ரம்யா, நான் சத்தியமா சொல்றேன்,கார்த்தி தான் பேசினான். அவனோட வாய்ஸ்தான்..மோகன் பத்தி ஒன்னு சொல்றேன்னு ஸ்டார்ட் பண்ணான், நான் பட்டுன்னு போனை வச்சுட்டேன்"

ரம்யாவுக்கு ஜெனியைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.

"சரி காலேஜுக்கு கிளம்பு"

"இல்லை ரம்யா, நான் வரல.. நான் இங்கேயே இருக்கேன்"

தனது அறையிலேயே ஜெனியை விட்டு விட்டு, ரம்யா தனது துறை அலுவலகத்திற்கு வந்தாள். அங்கு மோகனின் அம்மா, அப்பா இருவரும் நின்று கொண்டிருந்தனர். முகத்தில் ஏதோ சோகம் இருந்தது.

"ஆண்டி, மோகன் எங்க?" ரம்யா கேட்க,

மோகனின் அம்மா அழ ஆரம்பித்தார்.பத்து நாட்களுக்கு முன் கடலில் நீச்சலடிக்கப் போனவன் வெறும் உயிரற்ற சடலமாகத் திரும்பினான் என மோகனின் அப்பா சொன்னார்.

ரம்யாவுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
ஏதேனும் விபரீதம் நிகழும் முன் ஜெனியை அழைத்துக் கொண்டு ஊருக்குப் போய் விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கல்லூரியில் இருந்து விடுதிரும்பும் போது, ரம்யாவின் கைத்தொலைபேசி மணி அடித்தது..

"ஹலோ, ரம்யா, நான் கார்த்தி பேசுறேன், மோகனைப் பத்தி ஒன்னு சொல்லனும்,"

ரம்யாவுக்கு வியர்த்துக் கொட்டியது.

"எல்லாம் எனக்குத் தெரியும்.,, பிளீஸ் இனி போன் பண்ணாதே... எங்களை விட்டுடு"

அழைப்பை துண்டித்துவிட்டு வேகமாக பிள்ளையார் கோயில் நெருங்குகையில்,

அய்யோ.. அங்கு மோகன் , கார்த்தி ஜெனி மூவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.மூவரும் ஒரே சமயத்தில் ரம்யாவைத் திரும்பிப் பார்த்து மெலிதாக சிரித்தனர்.

"கடவுளே... அங்க யாரும் இல்லை சும்மா பிரமை... இன்னைக்கு நைட் நல்லா தூங்கிட்டா சரி ஆயிடும்..." என தனக்குத் தானே நினைத்தபடி வேகமாக ரம்யா விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். விடுதியில் ரம்யாவின் அறை முன் பதட்டமாக விடுதி பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

------முடிந்தது-------

Saturday, October 20, 2007

ஜாகிர்கான், முரளிகார்த்திக் வெற்றி பார்ட்னர்ஷிப், - வீடியோ

வெற்றிக்கு இன்னும் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ,பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிகார்த்திக் ஜாகிர்கானுடன் இணைந்து இந்தியாவை ஆறுதல் வெற்றி அடைய செய்தார்.



இவர்கள் ஆடிய ஆட்டம் சில வருடங்களுக்கு முன்னர் பெங்களூரில் ஜவஹல் ஸ்ரீநாத்தும் அனில் கும்ப்ளே 9வது விக்கெட்டுக்கு இதேபோல் 50 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற செய்ததை நினைவுப் படுத்தியது.



பிரெட் லீ ஜாகிர் கானை வம்பிழுக்க , ஜாகிர் கான் அடுத்த பந்தை தேர்ந்த பேட்ஸ்மேன் சிக்ஸருக்கு செலுத்தும் காட்சியும் உண்டு.



வர்ணனையாளார் சிவராமகிருஷ்ணன் , நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் , என்று அந்த பெங்களூர் ஆட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.



வெற்றிகான ரன்களை அடிக்கும் வீடியோ கீழே



நன்றி : http://www.crickethighlights.info/

Wednesday, October 17, 2007

மும்பை வான்கடே மைதானமும் , முரளி கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய அணியும்


முரளி கார்த்திக் , ரயில்வே அணிக்காக முதற்தர போட்டிகளில் விளையாடிய இவர், 2000 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக முதன்முறையாக பன்னாட்டு கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கங்குலி கேப்டனாக இருந்தபோது, அவருக்கு இடது கைசுழற்பந்து பந்து வீச்சாளர்களின் இருந்த மேல் நம்பிக்கையின்மையினால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் சோர்வடையாமல் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணம் 2004 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வந்தது, முதற் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 3 விக்கெட்டுக்களயும் வீழ்த்தி இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்ட வீடியோ இதோ



இன்று, மும்பை வான்கடே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்துவிட்டார் முரளி கார்த்திக். இந்த முறை ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி ஒருநாள்போட்டியில் ஆறுதல் வெற்றி அடையக் காரணமாய் இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுவிட்டார். பாராட்டுக்கள் முரளி கார்த்திக்