ஒரு ஞாயிற்றுக்கிழமை - சிறுகதை
என்னமோ தெரியாது, இந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலே மட்டும் கரெக்டா தூக்கம் சீக்கிரம் கலைஞ்சுப் போயிடும். மணி பார்த்தேன். 8.10, எழுந்து உட்கார்ந்து , டீவியைப் போட்டேன், தமிழ் சேனல் எதையும் காணோம், கன்னடப்பாட்டு சேனல்ல "கேளட நிம கீதா" பாட்டு ஓடிக்கொண்டிருந்தது, தமிழ்ல இந்தப்பாட்டு எனக்குப்பிடிச்ச பாட்டுல ஒன்னு, தேவதை இளம் தேவி, கார்த்திக் நடிச்ச படம்னு நினைக்கிறேன், ஸ்கூல் படிக்கிறப்ப ரேடியோல நைட் இந்தப் பாட்டை கேட்கும்போதெல்லாம் இருந்த பயம், திகில் உணர்வை இப்ப நினைச்சா சிரிப்புதான் வருது.
ஆபிஸ் போகலாமா, வீட்டிலே இருந்து, 5.Something படிக்கலாமா...
ம்ம்ம், ஆபிஸே போகலாம், நிம்மதியா பிரவுஸ் பன்னலாம், என்னோட புரொஜெக்ட் டீம் எல்லாம் பிக்னிக் போயிட்டாங்க, அமெரிக்கால லாங் வீக் எண்ட் னா இங்க இவனுங்க எங்கயாவது கிளம்பிடுவானுங்க, நான் இந்த பார்ட்டி, பிக்னிக்குன்னு எதுலேயும் கலந்துகிறது இல்லீங்க. டீம் ஆளுங்ககிட்ட புரெஜெக்ட் , புரொகிராம் தவிர எதுவும் பேசுறது கிடையாது, கொஞ்சம் பேசிட்ட டின்னர் போலாம்னு சொல்லுவானுங்க, அங்க போயிட்டு , டச்சு, ஸ்பானிஷ் னு காசு கேட்பனுங்க, கம்பெனி ஜாயின் பண்ண புதுசுல, இப்படி போய், நான் சாப்பிட்ட 4 இட்லிக்கு 200 மொய் வைக்க வேண்டியதாப் போச்சு. அதுவும் புதுசா டீம்ல ஏதாவது பொண்ணு வந்துட்டாப் போதும், கடலைக்கு ஹோம் வொர்க் பண்ணிட்டு வருவானுங்க,
ஆபிஸ்ல எவனையும் பிடிக்கலன்னாலும் இங்க இருக்கிற காரணம், கிடைக்கிற சம்பளம்தான், இருந்தாலும் இவனுங்க கொடுக்கிற சம்பளத்துக்கு மேலேயே தான் நான் கூவுறேன், இன்னும் ஆறுமாசம், இங்க இருந்து ஜூட் தான்,
இந்த பிக்னிக்குக்கு என்னையும் கூப்பிடலாமேன்னு புதுசா வந்த ஹரியானா பொண்ணு சொன்னப்ப ,என் பி-எம் அடிச்ச கமெண்டுக்காகவே , ஆபிஸை விட்டு போறப்ப ,அவனுக்கு எக்சிட் இண்டர்வியூல ஆப்பு அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.
சோம்பலை முறித்துவிட்டு, கதவைத்திறந்து பேப்பரை எடுத்து எனக்கான கன்னி ராசிபலனை பார்க்கலானேன்.
'புதுவிதமான அறிமுகங்கள் கிடைக்கும்" எனப் போட்டிருந்தது. ஸ்போர்ட்ஸ் பேஜ் மட்டும் பார்த்துட்டு பேப்பரை மூடி வைத்தேன்.
ஆமாம், உள்ளவங்க கிட்டயே பேச முடியல, இதுல புது அறிமுகம் வேறயாக்கும், என நினைத்துக் கொண்டே மொபைலை எடுத்துப் பார்த்தேன், பி.எம் நெம்பர்லேந்து நிறைய மிஸ்ட் கால்ஸ், நைட்ல நான் எப்போதும் சைலண்ட் மோட்ல தான் போட்டுறது, இல்லாட்டி நேரம் கெட்ட நேரத்துல ஆணி புடுங்க டவுட் கேப்பானுங்க.
போன முறை இவனுங்க பிக்னிக் போனப்ப, என்னைக் கால் பண்ணி கலாட்டா பண்ணானுங்க, இந்த முறையும் கலாட்டா பண்ண என் பி.எம் டிரை பண்ணிருப்பான்னு நினைச்சுக்கிட்டே எஸ்.எம்.எஸ் பார்த்தேன், ஒரு எஸ்.எம்.எஸ் பி.எம் கிட்டேயிருந்து, Call me, immdediately"
கூப்பிட்டு வம்பு இழுக்கிறதுக்கு எப்படியெல்லாம் இந்த ஆளு மெசேஜ் அனுப்புறான்னு நினைச்சுக்கிட்டே, ஆபிஸுக்கு கிளம்ப ஆரம்பித்தேன்.
***
Forum எதிர்த்தாப்ல இருக்கிற கடையில நாலு இட்லியை நின்னுக்கிட்டே தின்னுட்டு, ஆபிஸ் நோக்கி பைக்கை ஓட்ட ஆரம்பித்தேன். எல்லாம் ஜோடி - ஜோடியா பறந்து போய்ட்டு இருந்தானுங்க, ஹும்ம்ம், எனக்கு தான் அந்தக் கொடுப்பினை இல்லை. இருக்கட்டும் இருக்கட்டும், இந்த முறை அந்த ஹரியானா பொண்ணைக் கரெக்ட் பண்ணனும் நினைச்சுக்கிட்டு வண்டியை வேகமெடுத்தேன்.
ஆபிஸ், வந்து சேரும்போது மணி 11, பார்க் பன்ணிட்டு, செக்யூரிட்டிகிட்ட ஒரு முறைக்கு இரண்டு முறை ஐடி காட்டுட்டு உள்ளேப் போனேன். ரெண்டு மாசம் முன்ன, ஐடி எடுக்காம வந்தப்ப இதே செக்யூரிட்டி அலப்பரை பண்ணிட்டான்.
என்றைக்கும் இல்லாமல் இன்னக்கி, செக்யூரிட்ட பசங்க கிட்ட ஒரு வித்தியாசம் தெரிஞ்சது.
சரி எதுவா இருந்தா எனக்கு என்னன்னு நான் லிப்ட் ல ஏறினேன்.
என் இடத்தை நோக்கி நடக்கையில், என் டீம் ல இருக்கிற ஜூனியர் பசங்க குரல் மாதிரி இருந்தது, அடுத்த தடுப்புல தான் அவனுங்க இருக்கானுங்க, ஆமாம், அந்த பசங்க டீம் பிக்னிக் ல போயிருந்தானுங்க, நாளைக்குல வர்றனும், எதுவும் டார்கெட் வேற இல்லை, நான் தான் அவனுங்களை டிரெயின் பன்னேன்,
இரண்டு பேர்ல ஒருத்தன் , டேபிள் மேல உட்கார்ந்துகிட்டு இருந்தான், இன்னொருத்தன் நின்னுக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தானுங்க,
"ஹாய், ஹவ் வாஸ் தெ ட்ரிப்?" னு கேட்டேன், பதில் எதுவும் இல்லை., வெள்ளிக்கிழமை வரை சார் சார் னு வழிஞ்சவனுங்க, இன்னக்கி பார்த்தும் பார்க்கதது மாதிரி இருக்கானுங்க, ம்ம், இந்த பி.எம் ஏதாவது ஓதி இருப்பான், more over டிரெயினிங் வேற முடிஞ்சுடுச்சு.
புளோர்ல வேறயாரும் இல்லை, இந்த பசங்க வேற என்னை கிண்டலடிக்கிற மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறானுங்க, ரெண்டு முறை பேச டிரை பண்ணியும் மதிக்க மாட்டுறானுங்க.
சரி போய் காபி சாப்பிடலாம்னு கபடேரியா வந்தேன். டூர் முடிச்சுட்டு வந்துட்டானுங்களா, பி.எம், அந்த ஹரியான பொண்ணு, இன்னும் சில என் டீம் மேட்ஸ் அங்க இருந்தானுங்க, காபி மெஷின்ல காபி எடுத்துக்கிட்டு எங்க டீம் கிட்ட போனேன்.
என் பி.எம் ஹரியானா பொன்ணு மேல கை போட்டு உட்கார்ந்து இருந்தான், பரதேசி , கரெக்ட் பண்ணிட்டான் போல.
"ஹாய், எவ்ரிபடி!! ஹவ் வாஸ் தெ ட்ரிப்" எல்லோரும் ஒரு சேர என்னைப் பார்த்தானுங்க, திரும்ப பேச ஆரம்பிச்சுட்டுனானுங்க,
"ஓகே பை" னு சொல்லிட்டு கீழே வந்தேன்.
ரிஷப்சனுக்கு வந்தப்ப அங்க ஹெச்-ஆர் ஜெனி நின்னுக்கிட்டு இருந்தாள், சில ஹெச்-ஆர் டிரெயினிஸ்,
அவர்களைக் கவனிக்காமல் காபியுடன் தம்மடிக்க வெளியே வர எத்தனிக்கும்போது
'கார்த்தி" ன்னு கூப்பிட்டாள் ஜெனி.
"யெஸ்" என அவளை நோக்கித்திரும்பினேன்,
அவள் கண்களில் கலக்கம் தெரிந்தது.
"யுவர் டீம் வேன் ஹாட் மெட் அன் ஆக்சிடெண்ட்"
"வாட்?!! "
"அதில இருந்த எல்லோரும் ஸ்பாட்லேயே ....??" சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள்.
"அய்யோ,அப்போ நான் மேல பார்த்தவங்க!!!!"
******************************
இந்த சிறுகதை பூங்கா இணைய வார இதழில் (மார்ச் 19 )தேர்வு செய்யப்பட்டது
http://poongaa.com/content/view/1365/1/
12 பின்னூட்டங்கள்/Comments:
Pretty interesting and damn twist...gr8 work...Keep up...I liked dat u have given it in Tamil...Oops I do not know how to type in Tamil or else I would have also typed my commemnt in Tamil...
Good twist in the story...Keep up the work...Interesting to read...gr8 dat u have given it in Tamil...Oops I do not know typing in Tamil..or else I would have left the comment in Tamil...
கொஞ்சம் குரூரம்......
மிதமான சஸ்பென்ஸ்...
கீப் இட் அப்
கதை அருமை.... ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.... எப்படி அவர் கண்களுக்கு அவர்கள் தெரிந்தார்கள்.
wow!!!!!!!!Gr8 twist...
well..I read ur other stories of the same kind though everything has a same twist the way u presented it was good..Gr8 to read it in Tamil...Keep up...
ithe mari nalla palla karuthu ulla pei kadaikalai ethir parkiren...
;)
Thank you Sivanjanamji, Shanmugapriya and Fantasy
i was able to predit the story....i think, its time u start attempting other genere's....bestos 'sir'...
Thanks for deciding to start writing other kinds of stories. எவ்ளோ நாளைக்கு தான் பேய் ஒட காலத்தை ஓட்டுறது?
hahaha
:)
இப்பத்தான் படிச்சேன்.
கடைசியிலே நல்ல திடுக்.
பிடிச்சிருக்கு.
Good Story :)
நல்ல கதை.
நான் படிச்சதில உங்களோட மத்த கதைகள விட இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு.
ஆனா, கடைசியில பேய்க்கதை மாதிரி எழுதாம இருந்திருந்தா, இன்னும் நல்ல 'இயல்பான' கதையா இருந்திருக்கும். வாழ்த்துக்கள் !!
Post a Comment