கிழக்கு கடற்கரை - சிறுகதை
"ஆனந்த ராகம் கேட்கும் காலம்" பன்னீர் புஷ்பங்கள் பாடப் பாட்டு கார் சிடியில் ஒலித்துக்கொண்டிருக்க, ஜெனி, காரை ஈ.சி.ஆர் இல் மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.
இடது புறம் கார்த்திக் அவள் கார் ஓட்டும் அழகை ரசித்துகொண்டிருந்தான்.
"கார்த்தி, பாட்டை மாத்து, காலையில் கிளம்பினதுலேந்து இது 12 வது தடவை, உனக்கு போரே அடிக்கலியா" என்றாள் ரோட்டின் மீதிருந்த கவனத்தை எடுக்காமல்.
"சில விஷயங்கள் எனக்கு போரே அடிக்காது, உன்னையும் சேர்த்து"
"நடிக்காத, அவளோட எஸ்.எம்.எஸ் இன்பாக்ஸ் ல இதே டயலாக்கோட உன்னோட மெசேஜ் பார்த்தேன்"
"ஹே, அதுவா, இட்ஸ் ஜஸ்ட் அ பார்வர்டட் மெசேஜ், கோச்சுக்காதே, இருக்கட்டும் உன்னோட மளிகை கடை முறைப்பயன் எப்படி இருக்கான் "
"அடி வாங்குவடா!!!, அவன் சூப்பர் மார்க்கெட் வச்சு இருக்கான், மளிகைக்கடை கிடையாது"
"சரி், ஏசி வைச்ச மளிகைக்கடை"
"போடா, நாயே, பி,ஸீரியஸ், அப்பா, வேலை பார்த்தது போதும், அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகுங்கிறார்"
"ஹா ஹா, அப்படி யே பண்ணிடு, மளிகைக் கடை கல்லால உன்னோட லேப்டாப் வச்சிக்கிட்டு வரவு செலவுக்கணக்கு பாரு"
நான் இப்படி சொன்னதும் ஜெனியின் முகம் வாடிப்போனது, 5 நிமிஷத்துக்கு முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு காரை ஓட்டினாள்.
"ஜெனி, சாரி, விளையாட்டுக்கு கிண்டல் பண்ணேன்"
காரை மெதுவாக மாயாஜால் முன்ன இருக்கிற ஒரு இளநீர் கடையில் நிறுத்தினாள்.
இரண்டு பேரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். சுள்ளுன்னு முகத்திலே வெயில் அடித்தது, சம்மர் ஸ்டார்ட் ஆயிடுச்சு.
"நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா? ஆன்சைட் போறியான்னு பி.எம் கேட்டாரு, ஒரு வருஷம், அப்பாக்கிட்ட கேட்டேன், கன்னபின்னான்னு கத்திட்டார், படிக்க வச்சதே தப்பு, சம்பாதிக்கிற திமிரு, ஏதெதோ கத்திட்டு இருந்தார், என் கேரக்டரையும் தப்பா பேச ஆரம்பிச்சுட்டார்," என அழ ஆரம்பித்தாள்.
இளநீர் கடைக்காரன் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்க, காசு கொடுத்து விட்டு வேகமாக காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான் கார்ததி.
ஜெனி, இடதுபுறம் ஏறிக் கொண்டாள், சில நிமிட மவுனத்திற்குப் பின்,
"கார்த்தி, நான் பண்ணுறது தப்பா?சாதிக்கனும், நான் உலகம் முழுவது தெரியர இந்திரா நூயி மாதிரி வர்றனும், உனக்கேத் தெரியும் , ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன், வீக் எண்ட் கூட பிஸி, பிரென்சு,லிபா, அசைன்மெண்ட்ஸ், கீபோர்ட்,ஸாப் கிளாஸ்.
ஸ்கூல், காலேஜ் ல கத்துக் கொள்ளாமல் போன விஷயங்களை இப்போதான் கத்துக்கிறேன்.
ஆனால் அப்பாக்கு , நான் என்னமோ சினிமால காட்டுற மாதிரி ஊர் சுத்திக்கிட்டு ஆட்டம் போடுற மாதிரி நினைக்கிறார், சில சமயங்கள் தோணும் ஏன் இந்த ஆளுக்கு பொண்ணா பிறந்தோம்னு, வேற குடும்பத்தில பிறந்து இருக்கலாம்னு " என ஜெனி முடிக்கு முன் அவளது மொபைல் போன் பாட ஆரம்பித்தது.
"ஹலோ, இல்லைப்பா,
???
உடம்பு சரியில்லைப்பா
???
இன்னக்கி லீவ் போட்டுட்டேன்,
???
இல்லைப்பா,
இங்க தான் பக்கத்துலதான் இருக்கேன்,
எப்போப்பா வந்தீங்க,
???
10 நிமிஷத்துல வந்துடுறேன்பா" என போனைக் கட் செய்தாள் ஜெனி.
கார்த்தி, அப்பா ஹாஸ்டல் இருக்காரு, வண்டியைத்திருப்பு, இன்னக்கி அவ்வளவுதான், ஆபிஸ்ல போய் விசாரிச்சுட்டு வந்து இருக்கார், என்ன நடக்க போகுதோ!!! கொஞ்சம் வேகமாப் போடா, பிளீஸ்.
கார்த்தி, காரை விரட்ட ஆரம்பித்தான். உத்தண்டி தாண்டி வருகையில், என்னது இது பாண்டிச்சேரி பஸ் மீடியனைதாண்டி ராங் சைட் வர்றான், அய்யோ, என பஸ்ஸை பார்த்து காரை வலப்புறம் திருப்ப, மரத்தில் மோதி கார் நசுங்கியது.
மாலைப்பத்திரிக்கைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து, மரத்தில் கார் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பலி".
அதற்கு கீழே, வெளிநாட்டில் வாழும் பிரபல எழுத்தாளரும்,பெண்ணியவாதியுமான வாசகன் தேனிலைவை கொண்டாட மனைவியுடன் மாமல்லபுரம் வந்தார்.
Get Your Own Music Player at Music Plugin
4 பின்னூட்டங்கள்/Comments:
அய்யோ எனக்கு இந்த கதை புரியவே இல்லை :(
Read the red lines again
இந்த அளவுக்கு abstract ஆ எழுதுவீங்க இன்னு நினைக்கலை அண்ணா. இது கொஞ்சம் over தான்.என்னை மாதிரி பாமர வாசக/வாசகி களுக்கும் புரியனுமில்லையா?
But நிச்சயமா ரொம்ப நல்ல முயர்ச்சி
வாழ்த்துக்கள்.
i really didn;t understand the story...pl. eloborate further...
Post a Comment