மும்பை வான்கடே மைதானமும் , முரளி கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய அணியும்
முரளி கார்த்திக் , ரயில்வே அணிக்காக முதற்தர போட்டிகளில் விளையாடிய இவர், 2000 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக முதன்முறையாக பன்னாட்டு கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கங்குலி கேப்டனாக இருந்தபோது, அவருக்கு இடது கைசுழற்பந்து பந்து வீச்சாளர்களின் இருந்த மேல் நம்பிக்கையின்மையினால் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் சோர்வடையாமல் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணம் 2004 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வந்தது, முதற் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 3 விக்கெட்டுக்களயும் வீழ்த்தி இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்ட வீடியோ இதோ
இன்று, மும்பை வான்கடே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்துவிட்டார் முரளி கார்த்திக். இந்த முறை ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி ஒருநாள்போட்டியில் ஆறுதல் வெற்றி அடையக் காரணமாய் இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுவிட்டார். பாராட்டுக்கள் முரளி கார்த்திக்
2 பின்னூட்டங்கள்/Comments:
எளிதாக வெற்றி பெறவேண்டிய போட்டி. இருந்தாலும் உத்தப்பா மற்றும் கார்த்திக் தங்களை நிரூபிக்க உதவியது. ட்ராவிட் க்கு கூட மாற்று அமையவில்லை. இதில் சச்சினை வேறு ஒய்வுபெற கேட்கிறர்கள். இந்த தொடரில் அவர் ஒருவர் தான் ஓரளவு ஆடிய BCCI ஆட்டக்காரர்
இந்த ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு கோப்பை கையை விட்டுப் போய் விடுமோ என்ற பயத்தில் டாஸ் ஜெயித்தால் பேட்டிங்தான் என்று முடிவெடுத்து அதைச் செய்தும் காட்டியது ஆஸ்திரேலியா அணி.அந்த அளவிற்கு நமது அணியின் திடீர் பலம் அவர்களுக்கு பயம் காட்டியிருக்கிறது.
நேற்று நடந்த போட்டி திடீரென்று அவர்களுக்கு எதிரியானதற்குக் காரணம் என்றென்றைக்கும் இல்லாத திருநாளாக பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாகிப் போனது அவர்களுடைய துரதிருஷ்டம்.
அதிலும் ஸ்பின் வெகுவாக எடுபட நீண்ட நாட்கள் கழித்து நேற்றைய மேட்ச்சில்தான் 3 ஸ்லிப்புகள், கல்லி என்று வியூக அமைப்பைப் பார்த்தேன்.
நல்ல வேளை.. நாம் முதலில் பேட் செய்யவில்லை. செய்திருந்தால் தோல்விதான் கிடைத்திருக்கும்.
வெற்றிக்குக் காரணம் முரளிகார்த்திக்தான். இதில் சந்தேகமில்லை..
Post a Comment