Thursday, December 15, 2005

நண்பர்களே,

ஒரு வார தலைநகர் டெல்லி பயணம் மற்றும் உடற் நலக்குறைவு காரணமாக எதுவும் பதிய இயலவில்லை. ஹிந்தி தெரியாமல் விழித்ததைத் தவிர பயணம் நல்ல படியாக முடிந்தது.தாஜ்மகால் விசிட் ஒரு குறிப்பிடத்தக்க விசயம்...ஏனோ தாஜ்மகாலைப் பார்த்தவுடன் ஒரு "ரொமாண்டிக்" ஃபீலிங் ஏற்படவில்லை. 22 வருடத்திய "வறுமையின், தனி மனித பிடிவாததின்" நினைவுசின்னமோ என்று தோன்றியது. எதுவாகினும் பிரம்மாண்டம் பிரம்மாண்டம் தான்.

ஆக்ராவின் நகர வீதிகளில் செல்லும்போது, எங்களது வண்டி டிரைவர் கூறியது, ஆக்ராவில் பாதிப் பேர் பைத்தியங்கள், மீதிப் பேர் பைத்தியங்களாக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

Monday, November 28, 2005

தமிழ் அன்பர்களே,
"அகவல்" என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் என்ன என்று கூறமுடியுமா?

ஆங்கிலத்தின் "Never Say Never" என்ற சொற்றொடர் போல தமிழில் உண்டா?

தமிழில் Vocabulary மேம்படுத்த ஏதேனும் இணையத்தளங்கள் உள்ளனவா?
ஆவலுடன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்

Saturday, November 26, 2005

இந்தியவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது இந்தியர்கள் மைதானத்தில் சந்தோசத்தில் குதிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா.... நேற்று நடந்தது. திராவிட் அவுட் ஆகி வெளியே வரும்போது பவுலரைப் பாராட்டும் விதமாக ஒரே கைத்தட்டல். திராவிட்டின் முகத்தில் ஒரு கடுகடுப்பு தெரிந்தது. ஸ்மித் அடித்த ஒவொவொரு பவுண்டரிக்கும் என்ன ஒரு ஆரவாரம். தங்களின் "ஆல்ரவுண்டர் கங்குலி" ஆதரவை எவ்வளவு நாசூக்காக தெரிவித்தனர். பாராட்டுக்கள்

Thursday, November 24, 2005

உங்களுக்கு தெரிந்த உடற் ஊன்முற்ற பட்டதாரி நண்பர்களுக்கு இந்த தகவலை அளிக்கவும்

AbilityFoundation Madras...

They are like a consultancy who bring companies for recruitment for the disabled...who completed Diplomma,B.Sc,B.Tech etc....Till now they have made 32companies for recruitment...they had, 700 disabled candidates attending the interview and out of them 65 candidates were selected and now they are in the job.. this is a great oppurtunity for them....this is for people who completed their degree or doing their degree...

And November 30th is the last date for registering for interview...only registered candidates are allowed to attend the interview they dont want any mishappenings without registration...Dec 17th,18th interview .... they prefer only one person accompanying the candidate for help.

conducted by Lions club and sponsered by ASN india.contact

details: www.abilityfoundation.com

For more queries Call : +91 44 2445 2400 Or mail at abilityindia@vsnl.net


Employee Ability-2005

C /o.Ability Foundation,
28,Second cross street,
Gandhi Nagar,
Adayar,
Madras.
044-24452400

Wednesday, November 23, 2005

நேற்று ஒரு நல்ல காரியம் சம்பந்தமாக எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் அந்த நல்ல காரியத்தை நாளை செய்வதாக கூறினார். நான் வேண்டாம், இன்றே செய்து விடுங்கள் இன்று புதன் கிழமை நல்ல நாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றேன். அவரும் சரி என்று அந்த விசயத்தை செய்ய கிளம்பினார்.


அவர் சென்றவுடன் என் அருகில் இருந்த நபர், என் ந்ண்பர் கேட்டார் உனக்கு நாள், கிழமை இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா என்று,
நல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே... நன்றே செய்.. நன்றும் இன்றே செய் என்பதற்காக அவரிடம் அப்படிக் கூறினேன் என்றேன்.


ஒரு வேளை அவர் நாளை வந்து இதைப் பத்தி கேட்டிருந்தால் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்றும், வெள்ளி அன்று வந்து இருந்தால் வெள்ளி எல்லாருக்கும் புனிதமான நாள் என்றும், சனி அன்று வந்து இருந்தால் வெங்கடாசலபதி க்கு உகந்த நாள் நல்ல காரியத்தை உடனே தொடங்குங்கள் என்று சொல்லி இருப்பேன் என்றேன்.


என் நண்பரும் என்னை மடக்கும் விதமாக ஞாயிறு என்றால் ... நான் சொன்னேன் ஞாயிறு அன்று விடுமுறை நாள் எந்த ஒரு காரியத்தையும் ஆழ்ந்து வேறு எந்த அலுவல்களின் தொந்தரவு இல்லாமல் செய்ய முடியும். நானே தொடர்ந்து திங்கள் கிழமை வாரத்தின் முதற் நாள், நல்ல காரியத்துடன் தொடங்கலாம் என்றிருப்பேன் என்றேன்.


செவ்வாய் பொதுவாக யாருக்கும் ஆகாது என்பார்கள், அன்று நல்ல காரியத்தைப் பற்றி விவாதிக்க வந்து இருந்தால் என்ன செய்வாய் என்று புத்திசாலித் தனமாக் மடக்கினார்.

ஒரு அறிவியல் பூர்வமான உண்மை செவ்வாய் கிழமை தான் வார நாட்களிலேயே " The Most Productive Day". ஆகையால் உடனே நல்ல காரியத்தை முடித்து விடுங்கள் என்று இருப்பேன் என்றேன்.

செய்யும் காரியம் மட்டுமே முக்கியம் நாள், கிழமை அல்ல என்று முடித்தேன்,
அவரும் என் வாத திறமையை மெச்சி அவர் வேலைப் பார்க்க கிளம்பினார்.
அவர் சென்றவுடன் நான் அன்றைய நாளிதழை எடுத்து எனக்கான ராசிப் பலனைப் பார்க்கலானேன்.




Monday, November 21, 2005

இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக செய்திகளை முந்தித் தருவது உங்கள் "---" தொலைக்காட்சி மற்றும் "---" நியூஸ்.
ஆனால் இன்று சானியா மிர்சா கொச்சியில் மலபார் ஜுவல்லரிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிநடப்பு செய்ததை எனோ 8 மணி செய்தியில் காட்டவில்லை. சிக்னலில் நிற்கும் வண்டிகளை எல்லாம் படம் பிடித்து வந்து விட்டு சாலை மறியல் என்று படம் காட்டுகிறவர்கள் இதை எப்படி விட்டார்கள்செய்தி வந்து சேரவில்லையா அல்லது வழக்கமான இருட்டடிப்பா!!!!! சூரியனுக்குத்தான் வெளிச்சம்.

கடந்த ஒரு மாதத்தில் அதிக முறை தமிழ் தொலைக்காட்சிகளில், வானொலிய் அலைவரிசைகளில் பேட்டி அளித்தவர் யார் தெரியுமா!!!! குஷ்பூ வா, ராமதாஸா, திருமாவளவனா, கராத்தேயா......ம்ஹூம் யாருமில்லை.....
சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் - திரு. இரமணன்.

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்கள் முடிந்ததும் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால் பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சியின் போது நம்மூர் அரசியல்வாதிகள் பத்தோடு பதினொன்றாக அசடு வழிந்து கொண்டு நிற்பது.....

எனக்கு காரசாரமாக ஒரு பதிவுப் போட வேண்டுமென்று ஒரு விருப்பம். ஆனால் ஒரு முறை ஹிந்திக்கு ஆதரவாக ஒரு பதிவுபோட்ட போது என் தந்தை அறிவுரை கூறினார் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா!!! அதனால் சில பரபரப்பான விசயங்களைப் பற்றி பதிய முடியவில்லை. கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது என்று சொல்வார்கள்.

இருந்தாலும் யாரையாவது வம்பிழுக்க வேண்டுமென்று தோன்றியபோது நினைவுக்கு வந்தது நம்ம டெண்டுல்கர் தான்.

நாம் எப்போதும் டெண்டுல்கருக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்துள்ளோமோ என்று தோண்றும். ஒரு மேட்ச் அடித்து விட்டு பத்து மேட்ச் அடிக்காமலிருந்தாலும் நாம் டெண்டுல்கரை ஒன்றும் விமர்சனம் செய்வது இல்லை.

கடைசி பத்து ஆட்ட்ங்களில் அவரது ஸ்கோர்
1, 9, 93 , 67, 2, 11, 19, 39, 2, 2 மொத்தம் 245 பத்து ஆட்டங்களில்.

மக்கள் உடனே சொல்வார்கள் ஷார்ஜா வில் அடித்த அடி என்ன? வோர்ல்ட் கப்பில் அடித்த அடி என்ன என்று... ஷார்ஜாவில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதுமே சந்தேகத்துக்கு உட்பட்டவை.

வோர்ல்ட் கப்பில் கூட இரண்டாம் தர பவுலர்களைத்தான் அடிக்க முடிந்தது. பாகிஸ்தான் ஆட்டம் யுவராஜ் இல்லை என்றால் தோற்றுப்போய் இருப்போம். ஆஸ்திரேலியவுக்கு எதிரான் இரண்டு ஆட்டங்கள் மற்றும் நியுசிலாந்து ஆட்டங்களில் ரன் எடுக்க முடியவில்லையே....

டெண்டுல்கரின் பாதிக்கு மேற்பட்ட சதங்கள் சுமாரன பவுலிங்க்கு எதிராக வந்தமை. கடைசிப் பத்து வருடங்களில் கங்குலியும் டெண்டுல்கருக்கு சமமாக ஆடியும் கங்குலி ஆடதபோது குறை சொன்னவர்கள் டெண்டுல்கர் ஆடதபோது சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.

முக்கியமான ஆட்டங்களிலோ, இக்கட்டான தருணங்களிலோ டெண்டுல்கர் பெரும்பாலும் ஆடியதில்லை. ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட வெற்றிகளை, யார் ஆடினாலும் வெற்றி பெற்று விடும் என்று சூழலிலே ஆடி வெற்றி பெற வைப்பது பெரிய விசயமல்ல.

நிச்சயம் அடி விழும் என்று தெரிந்தே எழுதி உள்ளேன். போடுங்கள் உங்கள் பவுன்சர்களை...

நன்றி கிரிகின்போ இணையத்தளம்

நண்பர்களே, இலவச ஆங்கில ஈ-புத்தகம் GodsDebris by Scott Adams

இதன் கருத்துக்கள், சொல்ல வந்த விசயம் ஆகியன நன்றாக உள்ளது.
படித்துப் பாருங்கள்.

http://www.andrewsmcmeel.com/godsdebris

Wednesday, November 16, 2005

"கிரி" பட வடிவேலு இன்டர்வியுக்கு போனால்

நான் சரி ஒரு ரவுண்ட் தானே ண்னு ஒரு இன்டெர்வியுக்கு போனேன் அங்க 5 பேர் மா, மாத்தி மாத்தி கொஸ்டின் கேட்டங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் ஆன்ஸர் சொன்னேன்.
அப்புறம் 4த் ப்ளோர் போங்க, ஆஃபர் லெட்டர் வாங்கிக்குஙன்னு சொன்னானுங்க, சரின்னு நானும் நம்பி 4த் ப்ளோர்க்கு போனேன். அங்க 8 பெரு , அவங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ கொஸ்டின் கேட்டங்க.
திடீர் நு ஒருத்தன் HRக்கு போன் போட்டு... மச்சான்.. ஃபிரீயா இருந்தா வாடா, இங்க ஒருத்தன் சிக்கி இருக்கான்னு சொன்னான். நானும் எவ்வளோ நேரம் தான் ஆன்ஸர் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது. அதுல ஒருத்தன் சொன்னான் ,என்ன கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்ட இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான் மா...


பின்குறிப்பு : இது எனக்கு வந்த ஈ-மெயில்

Sunday, November 13, 2005

சென்னை எக்மோரிலிருந்து வளசரவாக்கம் வர கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே ரூபாய் 100 அல்லது 110 தான் கொடுத்து வருகிறேன். இந்த வருடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கிட்டத்தட்ட 15 ரூபாய் ஏறி உள்ளது. உண்மையில் சில சமயங்களில் ஆட்டோ டிரைவர்களின் கதையை கேட்கையில் மிகவும் பரிதாபமாக இருக்கும். ஷேர் ஆட்டோ வந்தப் பிறகு இன்னும் அவர்களது நிலை மோசம்.

ஒரு ஆட்டோ டிரைவருடன் பேசுகையில் அவர் சொன்ன விசயம் ஆச்சர்யப்பட வைத்தது,
குடிப்பழக்கம், சினிமா, அரசியல் சார்பு இல்லாத ஒரு ஆட்டோ டிரைவர் நிச்சயம் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 ரூபாய் வரை லாபம் மட்டும் சம்பாதிக்கலாம்.

இன்னும் 10 ரூபாய் பெட்ரோல் விலை உயர்ந்தாலும், மினி பஸ் வந்தால் கூட

நான் கொடுக்கும் முக்கிய இடங்களுக்கான ஆட்டோ கட்டணம்

எக்மோர் - வளசரவாக்கம் - 100 - 110
எக்மோர் - வடபழனி - 60 - 70
சென்ட்ரல் இருந்து வந்தால் 15 கூட கொடுக்கலாம்.
வளசரவாக்கம் - நுங்கம்பாக்கம் 70
கோயம்பேடு - நுங்கம்பாக்கம் 60
டி.நகர் - கோயம்பேடு 70
தி.நகர் - வளசரவாக்கம்.
பெசன்ட் நகர் - வளசரவாக்கம் 140
அம்பத்தூர் - சத்யம் சினிமா 150

மற்ற இடங்களுக்கான கட்டணம் அவ்வபோது பேரம் பேசி படியும்.

எனக்கு ஒரு யோசனை ஏன் ஆட்டோக்களை எல்லாம் அரசுடைமையாக்கி , ஆட்டோ டிரைவர்களை போக்கு வரத்து ஊழியர்கள் போல் ஆக்க கூடாது.

அரசுக்கும் லாபம், மக்களுக்கும் நிம்மதி....

என்க்கு ஆங்கிலப் படமே சப்-டைட்டில் போட்டாதான் புரியும், இந்த லட்சணத்தில் நான் சத்யம் ல நேற்று ஒரு பிரென்ச் படம் பார்த்தேன்(ஆங்கில சப்-டைட்டிலுடன் தான்). நான் பிரென்ச் படிக்கும் அலையான்ஸ் பிரான்ஸெ யில் காம்ப்ளிமென்ட் பாஸ் கிடைத்தது.

அம்பத்தூரில் என் ந்ணபனின் திருமணத்திற்கு சென்று விட்டு 10 நிமிடம் தாமதமாக தியேட்டர் வந்த்டைந்தும், என் அதிர்ஷ்டம் காரணமாக படம் சில நிமிடங்கள் ஓடிய பின் திரும்பவும் ஆரம்பித்தார்கள். படத்தின் கதை எளிமாயானது. வீடா என்ற ஆப்பிரிக்க கதாநாயகி பாரிஸ் செல்லும் முன் தன் தாயிடம் சத்தியம் செய்கிறாள் எக்காரணம் கொண்டும் பாட மாட்டேன் என்று.
அக்குடும்பத்தில் பெண்கள் பாடினால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற அவள் தாயின் நம்பிக்கை காரணமாக அப்படி ஒரு சத்தியம் செய்கிறாள்.


ஆனால் பாரிஸ் சென்ற பின் தன் பிரென்ச் காதலனின் வற்புறுத்தாலால் அவள் பாடி உலகப் புகழ் பெறுகிறாள். தன் குற்ற உணர்ச்சியின் காரணமாக திரும்பவும் தன் நாட்டிற்கு வந்து அம்மவிடம் ம்ன்னிப்புக் கோருகிறாள். தான் பாடியதன் காரணமாக தான் இறந்து விட்டதாகவும் தனக்கு ஈமச்சடங்கு நடத்தும்படியும் கேட்டுக்கொள்கிறாள். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் மென்மையான நகைச்சுவை.

தமிழ் படங்களில் பாடல்கள் இருப்பதற்கு குறை சொல்பவர்கள், இப்படத்தைப் பார்த்தால் நிச்சயம் சொல்ல மாட்டர்கள். 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு பாடல். எல்லாம் ரசிக்கும் படியாகவே இருந்தன.

எனக்கு சாரு நிவேதிதா வின் கோணல் பக்கங்களைப் படிக்கும்போது அவர் குறிப்பிடும் பிரென்ச் மொழி பிரென்ச் இசை ஆகியவைப் பற்றி பெரிய எண்ண்ங்கள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது புரிகிறது அவர் ஏன் அவ்வளவு சிலாகித்து எழுதியுள்ளார் என்று.

படத்தைப் பார்த்தப் பிறகு, நாம் இசை, நடனம் மற்றும் நாடகம்[திரைப்படம்] ஆகிவற்றை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ அல்லது மேற்தட்டு மக்களுக்கானவை என்று ஒதுக்கி வைத்துள்ளோமோ என எனக்கு தோன்றியது.

சினிமா இசை, நடனம் தவிர நம் நகரங்களில் வசிக்கும் பாமரனுக்கு வேறு எந்த வடிவிலும் இசை தெரியாது. கிராமத்தவர்கள் பரவாயில்லை, அவர்களுக்கு நாற்று நடுகையில் ஒரு பாட்டு, களைஎடுக்கையில் ஒரு பாட்டு என வித விதமாய் பாடற்கள் வைத்துள்ளார்கள்.

நான் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒருவர் எபோதும் ராகத்தோடு செய்யுள்களை நடத்துவார். ராகத்தை பிடித்துவிட்டாள் நிச்சயம் செய்யுளைப் பிடித்து விடலாம். என் வகுப்பில் மனப்பாட செய்யுள்களில் அனைவரும் முழு மதிப்பெண் எப்போதும் பெற்றி விடுவோம்.

இசையுடன் அமையும் இவ்வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும். பல சமயங்களில் இலுப்பைப்பூ சர்க்கரைப் போல் சினிமா இசைக் கூட இனிமை தான்.

Thursday, November 10, 2005

நான் எழுதி வரும் தொடர்கதை நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன் ஐ படித்து விட்டு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக கோ.கனேஷ், ராகினி மற்றும் முத்து ஆகியோருக்கு அதிக நன்றிகள்.

எந்தொரு எழுத்தாளனின் முதற் கதையும் அவன் சொந்தக் கதையாகத்தான் இருக்கும்.

என் சக ஊழியர்கள் அவர்களின் இடைவிடாத பணிக்கும் மத்தியிலும் படித்து குறை நிறை களை சுட்டி காட்டியமைக்கு நன்றி.


அதிகம் ஆங்கிலம் கலப்பதாக ஒரு "கொட்டு" விழுந்துள்ளது. இயற்பாக எழுத நினைக்கையில் இப்படி ஆகிவிடுகிறது.

நீண்ட நாட்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த கதையில் பிடித்த வரி.
நமக்குப் பிடிச்சவங்களுக்காக நாம கஷ்டப்படுறதும், நமக்காக நமக்கு பிடிச்சவங்களை கஷ்டபடுத்துறதும் ஒரு சுகம்.

அந்த மாதிரி என் பதிவுகளை என் நண்பர்களுக்கு அனுப்பி ஆனந்தமடைகிறேன்.



Wednesday, November 09, 2005

கடந்த ஞாயிறன்று, தெலுங்கு ஆதித்யா சேனலில் நம்ம சூர்யா பேட்டி லைவ் ஆ போய் கொண்டிருந்தது. அஹமதாபாத் மாட்ச் போரடிச்சதால் ஆதித்யாவுக்கு தாவினேன். "பாகுன்னாரு" என்ற தெலுங்கு வார்த்தையை தவிர மற்றவையெல்லாம் ஆங்கிலம்.
ராஜமுந்திரியில் இருந்து ஒரு தெலுங்கர் தமிழில் கூப்பிட்டுப் பேசினார். "கஜினி" தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஹிட் ஆகியுள்ளதாம். நிச்சயம் எந்த ஒரு தமிழ் சேனலிலும் இது போல் ஒரு தெலுங்கு நடிகரின் பேட்டி கனவிலும் சாத்தியம் அன்று.
வாழ்க தெலுங்கு மக்களின் திரை நேசம்.
நிகழ்ச்சியின் போது கீழே ஓடிகொண்டிருந்த SMS

kalpana: Sanjay Ramasamy I love you.

எல்லோரும் மஜா வா இருக்கனும்.. இதுதான் மஜா படத்தில் சொல்ல வந்த விசயம்.

மலையாளத்தில் "தொம்மனும் மக்களும்" என்று மம்மூட்டி, ராஜன்.பி.தேவ், ஆனந் நடித்து வந்தப் படம்.

படத்தின் ஹைலைட் - பசுபதி.

படத்தில் விக்ரம், முன்னாள் இந்திய கிரிக்கெட் காப்டன் அஸாருதின் போல் எதோ வந்தோம் போனோம் என்று நடித்துள்ளார்.

மலையாளத்தில் தமிழ் நடிகர் ஆனந் வில்லன். தமிழில் மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லன்.


சீ சீ பாடலைத் தவிர, படத்தை குடும்பத்தோடு தைரியமாகப் பார்க்கலாம்.

ராஜேஷ் குரல் நடிகர் முரளிக்கு சரியாகப் பொருந்துகிறது.

காம்ப்லெக்ஸான கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு முறைப் பார்க்கலாம்.

இன்று நான் ரசித்த ஐவர்:

1. பாண்டி பஜாரில் ட்ராபிக்கை நிருத்தி, ஒரு மூதாட்டிக்கு ரோட்டை கிராஸ் பண்ண உதவிய ட்ராபிக் கான்ஸ்டபிள்.

2. தி.நகர், துரைசாமி சுரங்கப்பாதையில் இரண்டு பள்ளி மாணவ்ர்களுக்கு லிப்ட் கொடுத்த பல்ஸ்ர் பைக் இளைஞன்.

3. மழையிலும், அதிகம் பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர்.

4. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சர்ச்சுகுள் சென்ற சிறுவன்.

5. அதிசயமாய் இன்று என்னைப் பார்த்து சிரித்த பக்கத்து வீட்டுப் பெண்.

Tuesday, October 25, 2005

தமிழ்மணம் மற்றும் சுரதா நண்பர்களே நான் எழுதிக்கொண்டிருக்கும் நேசித்தேன்..நேசிக்கின்றேன்.. நேசிப்பேன் தொடரைப்படித்து உங்கள் பின்னூட்டங்களை இட உங்களை வேண்டுகின்றேன்.
உங்கள் கருத்துக்கள் நிச்சயம் என்னை மேலும் சிறப்பாக எழுத தூண்டுகோலாக அமையும்.
நன்றிகள்.

Monday, October 24, 2005

அவன் கிரிக்கெட் பார்க்க ஆரமபித்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது.1991 ஆம் வருடம் அக்டோபர் 25 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஷார்ஜா பைனல் மேட்ச். அக்யூப் ஜாவித் ஹாட்ரிக் எடுத்த மேட்ச்.

http://ind.cricinfo.com/db/ARCHIVE/1991-92/OD_TOURNEYS/WLSTPY/PAK_IND_WLSTPY_ODI-FINAL_25OCT1991.html


அது முதல் அவன் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் எல்லாம் ஒரு கிரிக்கெட் மேட்ச் வந்து அந்த நிகழ்ச்சியை மறக்க முடியாதது ஆகிவிடும்.இந்தியாவின் வெற்றியை அவன் வெற்றி போல் கொண்டாடியது உண்டு. தோல்விகளை அவனுக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுவான்.
சில தோல்வி மேட்ச்களை அவன் தன் கனவில் வென்று கொடுத்தது உண்டு.

1996 வோர்ல்ட் கப் கால் இறுதி ஆட்டத்தில் பெங்களூரில் ஜடேஜா அடித்த அடி இன்னொரு தீபாவளி... உண்மையில் அவனக்கு ஜடேஜா வை பிடிக்காது காரணம் அவனுக்குபிடித்த அவளுக்கு ஜடேஜா என்றால் உயிர்.

http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/IND_PAK_WC96_ODI-QF2_09MAR1996.html


1996 வோர்ல்ட் கப் செமி பைனல்ஸில் வினோத் காம்ப்ளி அழுதபோது , ஏதோ அவன் வீட்டில் துக்கம் நடந்தது போல் கண்னீர் விட்டது...
http://www.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC96/WC96-MATCHES/SL_IND_WC96_ODI-SEMI1_13MAR1996.html

1999 வோர்ல்ட்கப் டாண் டாண் டவுன்டனில் 373 ரன் அடிச்சு இலங்கையை அழ விட்ட போது 1996 கு ஒரு பழி வாஙகள் என்ற ஒரு திருப்தி.... ...

http://ind.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC99/SCORECARDS/GROUP-A/IND_SL_WC99_ODI21_26MAY1999.html

College Final year la Operation Research Exam ல இந்தியா அடிச்ச ஸ்கோர் 54 எடுத்து பாஸ் பண்ணது....


அண்ணன் லக்ஷ்மன் "பெரியண்ணன்" ஆஸ்திரேலியாவுக்கு கல்கத்தாவில் ஆப்பு வைத்த டெஸ்ட் மேட்ச்.. அன்று முதல் அவனுக்கு லக்ஷ்மன் பிரியமான கிரிக்கெட்டர் ஆனார்.

ஒவ்வொரு முறை சின்ன சின்ன டீம் கிட்ட எல்லாம் தோற்கும் போது கிரிக்கெட்டையே மறந்து விட தோணும் ஆனால் அடுத்த மேட்ச் வந்தால் முதல் ஆளாய் டீவி முன் உட்கார்ந்ந்து விடுவான்.

அவன் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டும் ரசிகன் என்று எண்ணிவிட முடியாது... பொதுவில் அவன் கிரிக்கெட்டுக்கு ரசிகன் ...பின்புதான் இந்திய அணிக்கு .....
டீவி யில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஆட்டங்களை கூட அவன் ரசித்துப் பார்ப்பான்.
ஒரு முறை அவன் தோழிக்கு அவன் ஆஸ்த்ரேலியா பாகிஸ்தானை டெஸ்ட் மேட்ச்சில் சேஸிங் செய்ததை வர்ணனையாக கடிதம் எழுதியதுண்டு. [அந்த மேட்ச்சில் "கில்லி" யும் லாங்கரும் சதமடித்து ஜெயிக்க வைப்பார்கள்].
Many of the matches are won from no where positions... Life also like that ... u can never expect what would happen ... Life is full of suprises like a "perfect" test matches...

அவனைப் பொருத்தவரை கிரிக்கெட் அவன் வாழ்வோடு ஒன்றிய ஒரு விசயம்.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Wednesday, October 19, 2005

சுக துக்கங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு சொல்ல விரும்புவது , நிச்சயமாக இன்ப துன்பங்களை ஒரே அளவீட்டினால் அளக்க முடியாது. இன்பம் கொள்ளளவு என்றால் துன்பம் எடையை போன்றது. ஆனால் மையப்புள்ளி துன்பத்துக்கும் இன்பத்துக்கும் ஒன்றாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.
துன்பத்துக்கு எது காரணமோ அதுவே இன்பத்துக்கும் காரணம்.காதல், நட்பு,பணம், படிப்பு, வெற்றி, அங்கிகாரம்,பாராட்டு இது அனைத்தும் கிடைக்கும் அல்லது இருக்கும் விதத்தை பொருத்து நமக்கு வருத்தமோ சந்தோசமோ ஏற்படுகிறது. சந்தோசத்தை அனுபவிப்பதுபோல் துக்கத்தையும் கொண்டாடுங்கள்.
கஷ்டங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போது உண்மையில் துன்பம் நம்மைவிட்டு விலகி நம் மனம் லேசாகிவிடுகிறது. நீங்கள் வெற்றி பெற்ற்வர்களை கவனித்தீர்கள் என்றால், அவர்களின் வெற்றியின் ரகசியம் வெற்றியை விட அவர்கள் தோல்வியை அதிகம் அலசியிருப்பார்கள்.துன்பம் மனப்பாரமாக கருதப்படுகிறது, அதனை அலசும்போது அவை துகள்களாக சிதறி ந்ம் மனம் மிகவும் பக்குவப்பட்ட நிலையை அடைகிறது.
சந்தோசம் கடல் போன்றது.... நீந்திக்கொன்டே இருக்கலாம்.... சந்தோசம் வரும்போது கொண்டாடுங்கள்... அதே சமயத்தில் துன்பம் வரும்போதும் துன்பத்தை நேசியுங்கள்.

After all Life is to Live and Love the every moment.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Monday, October 10, 2005

தினமலர் நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேற்றைய [9 அக்டோபர் ஞாயிறு] இதழில் என்னுடைய இந்த வலைப்பூவை பற்றிய தகவல் வெளியானது. நம்முடைய எழுத்தை, எண்ணத்தை அச்சில் பார்க்கையில் தான் எவ்வளவு ஆனந்தம். நேற்று அதிகாலையில் தினமலரை விரித்து இரண்டாம் பக்கத்தை மேலோட்டமாக பார்க்கையில் "வினையூக்கி" கண்ணில் பட்டது. என் வாழ்க்கையில் முக்கியமான த்ருணம் அது.
[தினமலர் வெப் சைட்டிலும் வெளியாகி உள்ளது
http://www.dinamalar.com/2005oct09/flash.asp ]

Thursday, October 06, 2005

அவன் எப்போதும் தன் சங்கடங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள் விரும்பாதவன். பிரச்சினைகள், சங்கடங்கள். வருத்த்ங்கள் அவனுக்கு ஏற்படும்போது நேராக கிளிஜோஷ்யகாரனிடம் செல்வான். ஜோஷ்யம் பார்த்தால் சரி ஆகிவிடும் என்று அல்ல... வெறும் 5 ரூபாய்க்கு உலகத்தில் வேறு யாரும் "அவ்வளவு நல்ல, நிம்மதியான வார்த்தைகளை" கூற மாட்டார்கள். அவன் ஒரு முறை பார்த்த கிளியிடம் மருமுறை பார்க்க மாட்டான், காரணம் கிளி ஜோஷ்ய காரர்களிடம் இரண்டாம் முறை போனால் "பரிகாரம்" என்று எதாவது கதை சொல்லி விடுவார்களோ என்ற பயம். எனவே ஒவ்வொரு முறையும் புது கிளி தான். இதனாலயே அவனுக்கு மதராசில் பெரும்பண்மயான கிளிகள் அறிமுகம்.
ஆச்சர்யமான விசயம் என்னவெனில் ஒவ்வொரு முறை கிளி எடுக்கும் அட்டை அவன் அப்போதைய சூழ்நிலையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துவிடும்.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

மொழி என்பது உணர்வு சார்ந்த விசயமன்று,,,,, அறிவு சார்ந்த விசயம்..... என்று தமிழர்கள் ஆகிய நாம் மொழியை உண்ர்வுபூர்வமான விசயமாக அணுக ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து மற்றவர்களை காட்டிலும் ஒரு படி பின் தங்க ஆரம்பித்து விட்டோம்.

தமிழ் வழிக்கல்வியில் படித்த பெரும்பாண்மையினோருக்கு தமிழ் இலக்கணம் எவ்வ்ளவு தூரம் தெரியும் என்பது அகத்தியருக்குத்தான் வெளிச்சம். இன்றைக்கு பள்ளி இறுதி தமிழ் மாணவனின் நிலை இரண்டும் கெட்டான் நிலைதான். தமிழ் மொழியறிவும் இல்லாமல், கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்த் போகும் பாடங்களை புரிந்து கொள்ள் முடியாமல் திக்கி திணறுகின்றான்.
நம் மொழி செம்மொழி என்று சொல்ல வேண்டுமானால் நமக்கு பன் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் ஒரு விசயததை ஆதரிக்கையில், அது பிறிதொரு விசயத்துக்கு எதிர்ப்பகிவிடக்கூடாது என்பதை புரிந்துகொண்டு
தமிழ் இளைஞனே, தமிழ் பேசு, படி, எழுது ஆனால் தமிழுடன் பிற மொழியும் படி, பிறன் மொழியில் உன் மொழி புகழ் பாடு.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Wednesday, October 05, 2005

நம்மில் எத்தனை பேர் , காதல் அல்லது நட்பில் பிரிவு ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மற்றவரை மட்டும் குறை சொல்லி உள்ளோம். நிச்சயம் 99 விழுக்காடு நபர்கள், உறவின் பிரிவின் போது சம்பந்தப்பட்ட மற்றவரை எவ்வளவு தரம் தாழ்த்தி பேசி விடுகிறார்கள். உண்மையான நட்பு அல்லது காதலின் ஆழம் பிரிவுக்குப் பின்னரும் நாம் மற்றவரின் மேல் வைத்துள்ள மரியாதையில் தான் உள்ளது.

பிரிவினால் மற்றவருக்கு அமைதியோ சந்தோசமோ கிடைக்குமென்றால், தாராளமாக அந்தப் பிரிவை ஏற்றுகொள்ளலாம். அப்படி ஏற்றுகொள்ளும்போது எந்த ஒரு உறவின் பிரிவும் காயமாக மாறாது, மாறாக பிரிந்தவரின் நினைவுகள் மண்வாசனை போல் என்றென்றும் ரம்மியத்தைக் கொடுக்கும்.

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Tuesday, October 04, 2005

தெலுங்கு மக்களும் தமிழ் சினிமாவும்,
தெலுங்கு மக்களுக்கு சினிமாவை பொருத்த மட்டில் பரந்த மனப்பாண்மை உண்டு. தெலுங்கர்களின் தமிழ் படங்களை,நடிகர்களை, இசையை ஏற்றுகொள்ளும் மனோபாவம் பாராட்டததக்கது. ஆந்திரா மக்கள் தமிழ் டப்பிங் படங்களை ஏற்றுகொள்ளும் அளவை ஒப்பீடு செய்கையில் தமிழ் ரசிகர்கள் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ஒரு சராசரி வெற்றி கூட தருவதில்லை. [இதற்கு காரணம் ஆந்திரா மக்களின் சினிமா மோகம். ஒரு வருடத்திற்கு ஆந்திராவில் வசிக்குமொருவர் 27 படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கிறார். ]
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் ஆந்திரா மக்கள் தெலுங்கிற்கு டப் செய்யப்படும் படங்களை நேரடி மொழி படமாகவே கருதுகிறார்கள்.ஆதித்யா என்ற தெலுங்கு சேனலில் 10 பாடல்களுக்கு 3 பாடல்கள் தமிழ் டப் படங்களிருந்து வந்துவிடும். இதே விசயத்தை நீங்கள்எந்த ஒரு தமிழ் சேனலிலும் பார்க்கமுடியாது. [" Exception" தெலுங்கு மெட்டில் அமைந்த பாடல்கள்]. ஒரு பாமர தெலுங்கு ரசிகனுக்கு நம்மூர் வடிவேலு,கௌன்டமணி கூட நன்றாக தெரியும்.

நாம் தெலுங்கு டப் படஙகளை வெற்றி பெற வைத்தது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்?... ஆம். அவையனைத்தும் நம்மூர் கமல் நடித்த "சலங்கை ஒலி", சிப்பிக்குள் முத்து", மணிரத்னம் இயக்கிய "இதயத்தை திருடாதே" இப்படி விரல் விட்டு எண்ணி விடலாம். Again "Exception " வைஜெயந்தி ஐ.பி.எஸ், இதுதான்டா போலிஸ்.
அங்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" கூட வெற்றிபடமாம். சந்திரமுகி, அன்னியன், மன்மதன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேரடி தெலுங்கு படங்களை விட அதிக வசூல் செய்து வருகின்றன.

தமிழ் நடிகர்களில் விஜயை தவிர அனைவருக்கும் தெலுங்கில் நல்ல " Market" உண்டு.

ஆந்திராவை பொருத்தமட்டில் தமிழ் மட்டும் அல்லாது ஏனைய அனைத்து மொழிகளுக்கும் மரியாதை உண்டு. ஒரு பாமர தெலுங்கன் குறைந்தபட்சம் மூன்று மொழிகள் பேசுவான்.

தமிழ் மக்களை பொருத்தவரை, என்றுமே மற்ற மொழி சம்பந்தபட்ட விசயங்களில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. இந்த மனப்போக்கு மாறவேண்டும். எங்கே, நாம் ஹிந்திக்காக எதிர்ப்புக்காக ஊயிர் விட்டவர்கள். ஆச்சே!

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

Condtions Apply

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ். உண்மை. ஆனால் அன்பு நிபந்தனைக்குட்பட்டதா... என்று எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நீண்ட விவாதம் நேற்று சென்றது. பெரும்பாலான சமயங்களில் அன்பு " Condtions Apply " என்ற நிலையில்தான் இருக்கிறது. சுயநலமில்லாத காதலோ நட்போ கிடையாது. காதலோ நட்போ "I Feel Comfortable with him/her " என்ற சூழ்நிலையில்தான் தோன்றுகிறது.

தமிழ்மணம் இணைய தளத்திற்கு நன்றிகள். என்னுடைய எண்ணஙகளை பலகோடி தமிழ் மக்களுக்கு எடுத்து செல்வதற்காக.

Monday, October 03, 2005

கஜினி படம் பார்தேன். பார்தேன் என்று சொல்வதை விட பார்த்தோம் என்று சொல்வது சரி. எனது சக ஊழியர்கள் 43 பேருடன் மதராசில் மிகவும் பிரபல்யமான விருகம்பாக்கம் அன்னை கருமாரி, தேவிகருமாரி , சக்தி கருமாரி காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் மூட்டை பூச்சி கடியுடன் குளுகுளு வசதி இல்லாமல் 70 ருபாய்க்கு பார்த்தோம். படம் விருவிருப்பாக இருந்தது. நந்தாவுக்கு பிறகு சூர்யா விடம் தான் நடிப்ப்பில் எததனை முன்னேற்றங்கள். படத்தில் வெறுப்பான ஒரே விசயம் நயந்தாரா. இரண்டு பாடல்கள் அற்புதம்,
இன்னொருமுறை சத்யம் ல் பார்க்கவேன்டும்.

என் நண்பர் திரு,ஏகாந்த் அவர்களின் உதவியால் இந்த வலைப்பதிவில் என் முதற் தமிழ் பதிப்பை தருகின்றேன். ஏகாந்த் அவர்களுக்கு என் நன்றிகள். ஏகாந்த், ஒரு நடமாடும் என்சைக்ளோப்டியா. எனக்கு எந்த ஒரு ஐயப்பாடு வந்தாலும் என் கைத்தொலைப்பேசியில் அவரை அழைத்து விசயத்தை தெளிவுபடுத்திகொள்வேன்.நீண்ட நாட்களாக தமிழில் வலைபதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் இன்றுதான் நிறைவேறியது.

மீண்டும் வருகிறேன்.
வினையூக்கி.