நான் எழுதி வரும் தொடர்கதை நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன் ஐ படித்து விட்டு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. குறிப்பாக கோ.கனேஷ், ராகினி மற்றும் முத்து ஆகியோருக்கு அதிக நன்றிகள்.
எந்தொரு எழுத்தாளனின் முதற் கதையும் அவன் சொந்தக் கதையாகத்தான் இருக்கும்.
என் சக ஊழியர்கள் அவர்களின் இடைவிடாத பணிக்கும் மத்தியிலும் படித்து குறை நிறை களை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
அதிகம் ஆங்கிலம் கலப்பதாக ஒரு "கொட்டு" விழுந்துள்ளது. இயற்பாக எழுத நினைக்கையில் இப்படி ஆகிவிடுகிறது.
நீண்ட நாட்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த கதையில் பிடித்த வரி.
நமக்குப் பிடிச்சவங்களுக்காக நாம கஷ்டப்படுறதும், நமக்காக நமக்கு பிடிச்சவங்களை கஷ்டபடுத்துறதும் ஒரு சுகம்.
அந்த மாதிரி என் பதிவுகளை என் நண்பர்களுக்கு அனுப்பி ஆனந்தமடைகிறேன்.
Thursday, November 10, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்/Comments:
எழுதுங்க எழுதுங்க படிச்சிட்டு தான் இருக்கோம்.
எங்களால முடியாதத நீங்க செய்யறீங்க. நல்லாவோ வந்திட்டு இருக்கு.
ஆங்கில கலப்பது தப்பாகாது. ஆனால் தமிழிலேயே எழுத முயற்சி செய்யுங்கள்.
Post a Comment