இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக செய்திகளை முந்தித் தருவது உங்கள் "---" தொலைக்காட்சி மற்றும் "---" நியூஸ்.
ஆனால் இன்று சானியா மிர்சா கொச்சியில் மலபார் ஜுவல்லரிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிநடப்பு செய்ததை எனோ 8 மணி செய்தியில் காட்டவில்லை. சிக்னலில் நிற்கும் வண்டிகளை எல்லாம் படம் பிடித்து வந்து விட்டு சாலை மறியல் என்று படம் காட்டுகிறவர்கள் இதை எப்படி விட்டார்கள்செய்தி வந்து சேரவில்லையா அல்லது வழக்கமான இருட்டடிப்பா!!!!! சூரியனுக்குத்தான் வெளிச்சம்.
கடந்த ஒரு மாதத்தில் அதிக முறை தமிழ் தொலைக்காட்சிகளில், வானொலிய் அலைவரிசைகளில் பேட்டி அளித்தவர் யார் தெரியுமா!!!! குஷ்பூ வா, ராமதாஸா, திருமாவளவனா, கராத்தேயா......ம்ஹூம் யாருமில்லை.....
சென்னை வானிலை ஆராய்ச்சி இயக்குனர் - திரு. இரமணன்.
இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்கள் முடிந்ததும் எனக்கு பிடித்த விசயம் என்னவென்றால் பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சியின் போது நம்மூர் அரசியல்வாதிகள் பத்தோடு பதினொன்றாக அசடு வழிந்து கொண்டு நிற்பது.....
Monday, November 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டங்கள்/Comments:
கலக்குறீங்க ராசா கலக்குறீங்க.
படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.
தொடர்ந்து பதிவுயுங்க உங்க ரவுசு பதிவுகளை.
//இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக//
கேட்டுக்கேட்டு புளித்த சொல்
Vinaiooki,
"Nesiththen, Nesikiren, Nesippen" kadhai enna aachu?
வினையூக்கி!!
இந்த முதல் முதலைக் கண்டுகொள்ளக் கூடாது.
Post a Comment