எனக்கு காரசாரமாக ஒரு பதிவுப் போட வேண்டுமென்று ஒரு விருப்பம். ஆனால் ஒரு முறை ஹிந்திக்கு ஆதரவாக ஒரு பதிவுபோட்ட போது என் தந்தை அறிவுரை கூறினார் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா!!! அதனால் சில பரபரப்பான விசயங்களைப் பற்றி பதிய முடியவில்லை. கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது என்று சொல்வார்கள்.
இருந்தாலும் யாரையாவது வம்பிழுக்க வேண்டுமென்று தோன்றியபோது நினைவுக்கு வந்தது நம்ம டெண்டுல்கர் தான்.
நாம் எப்போதும் டெண்டுல்கருக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்துள்ளோமோ என்று தோண்றும். ஒரு மேட்ச் அடித்து விட்டு பத்து மேட்ச் அடிக்காமலிருந்தாலும் நாம் டெண்டுல்கரை ஒன்றும் விமர்சனம் செய்வது இல்லை.
கடைசி பத்து ஆட்ட்ங்களில் அவரது ஸ்கோர்
1, 9, 93 , 67, 2, 11, 19, 39, 2, 2 மொத்தம் 245 பத்து ஆட்டங்களில்.
மக்கள் உடனே சொல்வார்கள் ஷார்ஜா வில் அடித்த அடி என்ன? வோர்ல்ட் கப்பில் அடித்த அடி என்ன என்று... ஷார்ஜாவில் நடக்கும் ஆட்டங்கள் எப்போதுமே சந்தேகத்துக்கு உட்பட்டவை.
வோர்ல்ட் கப்பில் கூட இரண்டாம் தர பவுலர்களைத்தான் அடிக்க முடிந்தது. பாகிஸ்தான் ஆட்டம் யுவராஜ் இல்லை என்றால் தோற்றுப்போய் இருப்போம். ஆஸ்திரேலியவுக்கு எதிரான் இரண்டு ஆட்டங்கள் மற்றும் நியுசிலாந்து ஆட்டங்களில் ரன் எடுக்க முடியவில்லையே....
டெண்டுல்கரின் பாதிக்கு மேற்பட்ட சதங்கள் சுமாரன பவுலிங்க்கு எதிராக வந்தமை. கடைசிப் பத்து வருடங்களில் கங்குலியும் டெண்டுல்கருக்கு சமமாக ஆடியும் கங்குலி ஆடதபோது குறை சொன்னவர்கள் டெண்டுல்கர் ஆடதபோது சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.
முக்கியமான ஆட்டங்களிலோ, இக்கட்டான தருணங்களிலோ டெண்டுல்கர் பெரும்பாலும் ஆடியதில்லை. ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட வெற்றிகளை, யார் ஆடினாலும் வெற்றி பெற்று விடும் என்று சூழலிலே ஆடி வெற்றி பெற வைப்பது பெரிய விசயமல்ல.
நிச்சயம் அடி விழும் என்று தெரிந்தே எழுதி உள்ளேன். போடுங்கள் உங்கள் பவுன்சர்களை...
நன்றி கிரிகின்போ இணையத்தளம்
Monday, November 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டங்கள்/Comments:
WHAT YOU HAVE SAID IS TRUE..HE IS TYPICAL MUMBAIKAR..HE WILL ONLY LOOK FOR HIS RECORDS..
வினையூக்கி, உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் மார்க் போட்டிருக்கேன். நல்ல பதிவு. முத்து சொல்றதும் சரிதான்.
//டெண்டுல்கரின் பாதிக்கு மேற்பட்ட சதங்கள் சுமாரன பவுலிங்க்கு எதிராக வந்தமை//
திட்டுவாங்கறதுக்காக பொய் சொல்லக் கூடாது வினையூக்கி!!. சதம் எடுக்கறதுக்கு முன்னாடி போடற 'டொக்க' வேணுமின்னா சொல்லிக்கங்க!!.
நல்லாத் தான் சொல்லியிருக்கீங்க, மனம் திறந்து பாராட்டுகிறேன், ஆனால் டெண்டுல்கர் இது போன்றவற்றை பலமுறை சந்தித்தவர். மீண்டு வருவார்.
கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர், சாதாரண பந்து வீச்சாளர் என்பது எல்லாம் கிடையாது, மட்டையாளர் எந்த நேரத்திலும் தவறு செய்ய முடியும். ஆக அவர் இரண்டாம் தர பந்து வீச்சை தான் அடித்து ரன்குவித்தார் என்பது நகைப்புக்குறியது.
Post a Comment