சுக துக்கங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு சொல்ல விரும்புவது , நிச்சயமாக இன்ப துன்பங்களை ஒரே அளவீட்டினால் அளக்க முடியாது. இன்பம் கொள்ளளவு என்றால் துன்பம் எடையை போன்றது. ஆனால் மையப்புள்ளி துன்பத்துக்கும் இன்பத்துக்கும் ஒன்றாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.
துன்பத்துக்கு எது காரணமோ அதுவே இன்பத்துக்கும் காரணம்.காதல், நட்பு,பணம், படிப்பு, வெற்றி, அங்கிகாரம்,பாராட்டு இது அனைத்தும் கிடைக்கும் அல்லது இருக்கும் விதத்தை பொருத்து நமக்கு வருத்தமோ சந்தோசமோ ஏற்படுகிறது. சந்தோசத்தை அனுபவிப்பதுபோல் துக்கத்தையும் கொண்டாடுங்கள்.
கஷ்டங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போது உண்மையில் துன்பம் நம்மைவிட்டு விலகி நம் மனம் லேசாகிவிடுகிறது. நீங்கள் வெற்றி பெற்ற்வர்களை கவனித்தீர்கள் என்றால், அவர்களின் வெற்றியின் ரகசியம் வெற்றியை விட அவர்கள் தோல்வியை அதிகம் அலசியிருப்பார்கள்.துன்பம் மனப்பாரமாக கருதப்படுகிறது, அதனை அலசும்போது அவை துகள்களாக சிதறி ந்ம் மனம் மிகவும் பக்குவப்பட்ட நிலையை அடைகிறது.
சந்தோசம் கடல் போன்றது.... நீந்திக்கொன்டே இருக்கலாம்.... சந்தோசம் வரும்போது கொண்டாடுங்கள்... அதே சமயத்தில் துன்பம் வரும்போதும் துன்பத்தை நேசியுங்கள்.
After all Life is to Live and Love the every moment.
Wednesday, October 19, 2005
Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்/Comments:
இன்பம் துன்பம் இரண்டும் சமமாய் பாவித்தல் என்று பெரியோர் கூறுவதின் அர்த்தம் இரண்டும் வாழ்க்கையில் சகஜமே என்பதால்தான்.
நல்ல எழுத்து நடையில் எழுதியுள்ளீர். தொடர்ந்து தாருங்கள்..
Post a Comment