சென்னை எக்மோரிலிருந்து வளசரவாக்கம் வர கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே ரூபாய் 100 அல்லது 110 தான் கொடுத்து வருகிறேன். இந்த வருடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கிட்டத்தட்ட 15 ரூபாய் ஏறி உள்ளது. உண்மையில் சில சமயங்களில் ஆட்டோ டிரைவர்களின் கதையை கேட்கையில் மிகவும் பரிதாபமாக இருக்கும். ஷேர் ஆட்டோ வந்தப் பிறகு இன்னும் அவர்களது நிலை மோசம்.
ஒரு ஆட்டோ டிரைவருடன் பேசுகையில் அவர் சொன்ன விசயம் ஆச்சர்யப்பட வைத்தது,
குடிப்பழக்கம், சினிமா, அரசியல் சார்பு இல்லாத ஒரு ஆட்டோ டிரைவர் நிச்சயம் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 ரூபாய் வரை லாபம் மட்டும் சம்பாதிக்கலாம்.
இன்னும் 10 ரூபாய் பெட்ரோல் விலை உயர்ந்தாலும், மினி பஸ் வந்தால் கூட
நான் கொடுக்கும் முக்கிய இடங்களுக்கான ஆட்டோ கட்டணம்
எக்மோர் - வளசரவாக்கம் - 100 - 110
எக்மோர் - வடபழனி - 60 - 70
சென்ட்ரல் இருந்து வந்தால் 15 கூட கொடுக்கலாம்.
வளசரவாக்கம் - நுங்கம்பாக்கம் 70
கோயம்பேடு - நுங்கம்பாக்கம் 60
டி.நகர் - கோயம்பேடு 70
தி.நகர் - வளசரவாக்கம்.
பெசன்ட் நகர் - வளசரவாக்கம் 140
அம்பத்தூர் - சத்யம் சினிமா 150
மற்ற இடங்களுக்கான கட்டணம் அவ்வபோது பேரம் பேசி படியும்.
எனக்கு ஒரு யோசனை ஏன் ஆட்டோக்களை எல்லாம் அரசுடைமையாக்கி , ஆட்டோ டிரைவர்களை போக்கு வரத்து ஊழியர்கள் போல் ஆக்க கூடாது.
அரசுக்கும் லாபம், மக்களுக்கும் நிம்மதி....
Sunday, November 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்/Comments:
அரசு இருக்கிற துறைகளையெல்லாம் 'கழட்டி' விட்டுக் கொண்டிருக்கும் போது புதிய அரசுடைமையா? முதலில் அரசு தனக்கான பணியை செவ்வனே செய்யட்டும்.
Post a Comment