Tuesday, October 04, 2005

தெலுங்கு மக்களும் தமிழ் சினிமாவும்,
தெலுங்கு மக்களுக்கு சினிமாவை பொருத்த மட்டில் பரந்த மனப்பாண்மை உண்டு. தெலுங்கர்களின் தமிழ் படங்களை,நடிகர்களை, இசையை ஏற்றுகொள்ளும் மனோபாவம் பாராட்டததக்கது. ஆந்திரா மக்கள் தமிழ் டப்பிங் படங்களை ஏற்றுகொள்ளும் அளவை ஒப்பீடு செய்கையில் தமிழ் ரசிகர்கள் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ஒரு சராசரி வெற்றி கூட தருவதில்லை. [இதற்கு காரணம் ஆந்திரா மக்களின் சினிமா மோகம். ஒரு வருடத்திற்கு ஆந்திராவில் வசிக்குமொருவர் 27 படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கிறார். ]
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் ஆந்திரா மக்கள் தெலுங்கிற்கு டப் செய்யப்படும் படங்களை நேரடி மொழி படமாகவே கருதுகிறார்கள்.ஆதித்யா என்ற தெலுங்கு சேனலில் 10 பாடல்களுக்கு 3 பாடல்கள் தமிழ் டப் படங்களிருந்து வந்துவிடும். இதே விசயத்தை நீங்கள்எந்த ஒரு தமிழ் சேனலிலும் பார்க்கமுடியாது. [" Exception" தெலுங்கு மெட்டில் அமைந்த பாடல்கள்]. ஒரு பாமர தெலுங்கு ரசிகனுக்கு நம்மூர் வடிவேலு,கௌன்டமணி கூட நன்றாக தெரியும்.

நாம் தெலுங்கு டப் படஙகளை வெற்றி பெற வைத்தது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்?... ஆம். அவையனைத்தும் நம்மூர் கமல் நடித்த "சலங்கை ஒலி", சிப்பிக்குள் முத்து", மணிரத்னம் இயக்கிய "இதயத்தை திருடாதே" இப்படி விரல் விட்டு எண்ணி விடலாம். Again "Exception " வைஜெயந்தி ஐ.பி.எஸ், இதுதான்டா போலிஸ்.
அங்கு நம்ம ராமராஜன் நடித்த "கரகாட்டக்காரன்" கூட வெற்றிபடமாம். சந்திரமுகி, அன்னியன், மன்மதன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு நேரடி தெலுங்கு படங்களை விட அதிக வசூல் செய்து வருகின்றன.

தமிழ் நடிகர்களில் விஜயை தவிர அனைவருக்கும் தெலுங்கில் நல்ல " Market" உண்டு.

ஆந்திராவை பொருத்தமட்டில் தமிழ் மட்டும் அல்லாது ஏனைய அனைத்து மொழிகளுக்கும் மரியாதை உண்டு. ஒரு பாமர தெலுங்கன் குறைந்தபட்சம் மூன்று மொழிகள் பேசுவான்.

தமிழ் மக்களை பொருத்தவரை, என்றுமே மற்ற மொழி சம்பந்தபட்ட விசயங்களில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. இந்த மனப்போக்கு மாறவேண்டும். எங்கே, நாம் ஹிந்திக்காக எதிர்ப்புக்காக ஊயிர் விட்டவர்கள். ஆச்சே!

Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

Reasearch ellam panra pola? enna dhideer-nu telugu cinema industry mela oru pat-cha-dhaabam? telugu padathula nadikka poriya?

said...

வினையூக்கி, அவ்வளவு எளிதாக நான் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் தமிழர்களிடத்தில் நான் கண்டது ஒன்றுண்டு.

அவர்களுக்குப் பழக்கமில்லாத உணவு வகைகள், வேற்று மொழித் திரைப்படங்கள், என்று எதையுமே பரிசோதனை முயற்சியாகக் கூட தொட விரும்ப மாட்டார்கள். இந்நிலை மாறவேண்டும். விதி விலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையானோர் இப்படித்தான். கொஞ்சம் திறந்த மனது அவசியம்.

இந்தி எதிர்ப்பு என்பது வேறு. இந்தப் பிரச்சனை வேறு.

said...

//ஒரு பாமர தெலுங்கன் குறைந்தபட்சம் மூன்று மொழிகள் பேசுவான்.

he..he..ungalukkum time sariyelle polirukku...!