ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 5 )
Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி
முந்தையப் பகுதிகள் - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html
---
இது போன்ற உணர்வுகளை மறைப்பது மிகவும் கடினம். கூட்டிற்கு நானும் அப்பாவும் திரும்பி , வெளியில் சென்று வருவதற்கான உடைகளைக் களைந்து கொண்டிருந்தோம். அப்பா, என் அபரிமிதமான கற்பனையை சொல்லி, சிரித்து அம்மாவிடமும் தங்கையிடமும் விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த தட்டையான வார்த்தைகளில் நம்பகத் தன்மை இல்லை. அம்மாவும் தங்கையும் அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிந்தது. அந்த ஒருக் கணத்தில், யாராவது துணிவு என்ற பந்தைப் பிடித்துக் கொள்ள மாட்டார்களா என இருந்தது. அந்தத் துணிவைப் பெற ஏதாவது செய்ய வேண்டும். வழமைப்போல,
”அப்பா , பூமி எப்படி இப்படியானது” என்ற பழைய நாட்களைப் பற்றிய கதையைச் சொல்ல சொன்னேன்.
சில சமயங்களில் அவர் கதைகளைச் சொல்லத் தயங்குவதில்லை. தங்கையும் நானும் விரும்பிக் கேட்போம். இந்தச் சூழலில் நான் கேட்பதைப் புரிந்து கொண்டார். நாங்கள் நெருப்பைச் சுற்றி அமந்து கொண்டோம். அம்மா இரவு உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அப்பா கதை சொல்ல ஆரம்பித்தார். கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர், நீண்ட சுத்தியலைத் தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டார். அதை நான் கவனித்துக் கொண்டேன்.
அதே பழையக் கதைதான், தூக்கத்தில் இருந்து எழுப்பிக்கேட்டால் கூட மனப்பாடமாக ஒப்பிப்பேன்., இருந்தாலும் அப்பா ஒவ்வொருமுறையும் சில சுவராசியமான விசயங்களை நினைவுப்படுத்தி, சேர்த்துச் சொல்வார்.
பூமி எப்பொழுதும் போல, ஒரே சீரானப் பாதையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மனிதர்கள், பணம் சேர்ப்பதிலும், அதிகார மையத்தை நோக்கி நகர்வதிலும் அடுத்தவர்களின் சரித் தவறுகளை எடைப்போட்டு தீர்ப்பு சொல்லுவதிலும் , போர்களை உருவாக்குவதிலும் குறியாக இருந்தனர். அந்த சமயத்தில் தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த கரிய நட்சத்திரம், எரிந்துத் தீர்ந்துப் போன சூரியன் வந்தது. எல்லாவற்றையும் ஒரேயடியாக வருத்தமைடய செய்தது.
தேனீக்கூட்டம் போல அன்று மக்கள் எண்ணிக்கையில் இருந்தனர் என்பதை நம்புவதைக் காட்டிலும், அந்த மக்களின் எண்ண ஓட்டங்கள், லட்சியங்கள் நம்ப முடியாதவையாக இருந்தன.
ஏற்கனவே தயார்செய்து வைத்திருந்த போர் முன்னெடுப்புகளுக்காக காத்திருந்த மக்கள் ,போரை விரும்பிய மக்கள், குறைந்த பட்சம் போர்கள் முடிவுக்கு வரவேண்டும் என விரும்பிய மக்கள். எல்லோரும் ஒன்றாக இருப்பது அவசியமே இல்லை என்பதைப் போலத்தான் இருந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி தங்களது வந்த ஆபத்து நீங்கும் என எதிர்பார்க்கலாம். நாங்கள் கூட குளிரில் இருந்து மீள்வோம் எனத்தான் நம்பிக்கொண்டிருக்கோம். ஆனால் எங்களின் நம்பிக்கை மேலானாது.
சில சமயங்களில் அப்பா மிகைப்படுத்தி சொல்கிறாரோ என நான் நினைப்பேன். ஆனால் அந்தக் காலத்தில் அத்தகைய மனிதர்களுடன் அவர் வாழ்ந்து இருக்கின்றார். பழைய வார இதழ்களில் நான் படித்த விசயங்கள், இன்னும் பயங்கரமானவைகளாகவே இருந்து இருக்கின்றன. அப்பா சொல்வது சரியாக இருக்கலாம்.
தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/6.html