Tuesday, October 23, 2012

கடவுள் - பின்நவீனத்துவக் கதை?!!கவிதை

கடவுளுக்காகக் காத்திருந்தேன்
கடவுள் வரவில்லை ...
இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது !!!

கண்டிருந்தால் வரவேண்டிய
அதே மகிழ்ச்சி இப்பொழுதும்...
மகிழ்ச்சியுடன்  தலைவலியும்

வேறுதலையை மாற்ற பெட்டியைத் திறந்தால்
பலவற்றில் ஒரு தலையைக் காணவில்லை !!
கதவுத் தட்டப்பட்டது !!!
கிடைத்ததை மாற்றிக்கொண்டு  கதவைத் திறந்தேன்.

கதவுக்கு வெளியேயும் நான்
கையில் காணாமல் போன தலையுடன்
“ நான் கடவுளைக் கொன்றுவிட்டேன்” என்றேன் !!