Wednesday, April 18, 2012

ஒரேயொரு கிரிக்கெட் கேள்வி - பதில் சொல்லுங்கள் ...வெல்லுங்கள் ரோமில் இருந்து ஒரு தபால் அட்டை


கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டையாளரால் அடிக்கப்பட்ட பந்து, தரையில் படாமல் எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து வந்து விழுந்தால் ஆறு ஓட்டங்களும், தரையில் பட்டு எல்லைக்கோட்டைக் கடந்தால் நான்கு ஓட்டங்களும் வழங்கப்படுகின்றது.

சாத்தியப்படக் கூடிய கற்பனையான ஒரு பன்னாட்டு ஆட்டம் (இது டெஸ்ட் ஆட்டமாகவோ, ஒரு நாள் ஆட்டமாகவோ அல்லது இருபதுக்கு இருபதாகவோ இருக்கலாம்) புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் ஆடப்படுகின்றது. மைதானம் அமைக்க பொருள் உதவி செய்தவருக்கு 5 உம் 8 உம் விருப்பமான எண்கள் ஆதலால், தான் கட்டிய ஆடுகளத்தில் தனக்கான எண்கள் , அதிகபட்ச ஓட்டங்களாக அமைய விரும்புகிறார். அவரின் விருப்பத்தைத் தொடர்ந்து, அந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடைபெறும்பொழுதெல்லாம் பவுண்டரிக்கு 5 ஓட்டங்களும், சிக்ஸருக்கு எட்டு ஓட்டங்களும் வழங்கப்படுகிறது. இது சாத்தியமா? சாத்தியம் என்றால் ஏன் எப்படி? சாத்தியம் இல்லை என்றால் ஏன் ? எப்படி

பதிலை எனது மின்னஞ்சல் முகவரி rrselvakumar@gmail.com வரும் ஞாயிற்று கிழமைக்குள் அனுப்பலாம். சரியான பதில் சொல்லும் அனைவருக்கும் ஒரு தபால் அட்டை ரோம் நகரத்தில் (பதில் சொல்பவர்களின் விருப்ப முகவரிகளுக்கு) இருந்து அனுப்பப்படும்.