ஒரேயொரு கிரிக்கெட் கேள்வி - விடை - விதி எண் 19.5
”கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டையாளரால் அடிக்கப்பட்ட பந்து, தரையில் படாமல் எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து வந்து விழுந்தால் ஆறு ஓட்டங்களும், தரையில் பட்டு எல்லைக்கோட்டைக் கடந்தால் நான்கு ஓட்டங்களும் வழங்கப்படுகின்றது.
சாத்தியப்படக் கூடிய கற்பனையான ஒரு பன்னாட்டு ஆட்டம் (இது டெஸ்ட் ஆட்டமாகவோ, ஒரு நாள் ஆட்டமாகவோ அல்லது இருபதுக்கு இருபதாகவோ இருக்கலாம்) புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் ஆடப்படுகின்றது. மைதானம் அமைக்க பொருள் உதவி செய்தவருக்கு 5 உம் 8 உம் விருப்பமான எண்கள் ஆதலால், தான் கட்டிய ஆடுகளத்தில் தனக்கான எண்கள் , அதிகபட்ச ஓட்டங்களாக அமைய விரும்புகிறார். அவரின் விருப்பத்தைத் தொடர்ந்து, அந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடைபெறும்பொழுதெல்லாம் பவுண்டரிக்கு 5 ஓட்டங்களும், சிக்ஸருக்கு எட்டு ஓட்டங்களும் வழங்கப்படுகிறது. இது சாத்தியமா? சாத்தியம் என்றால் ஏன் எப்படி? சாத்தியம் இல்லை என்றால் ஏன் ? எப்படி?”
கேள்விக்கான விடை
பந்து எல்லைக் கோட்டைக் கடந்தால் பெறப்படும் ஓட்டங்கள் பற்றி தெளிவாக விதி எண் 19 சொல்கிறது. டாஸ் செய்யும் முன் நடுவர்களும் இரு அணித் தலைவர்களும் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டும் பொழுது பெற வேண்டிய ஓட்டங்களைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவ்விதி சொல்கிறது. ஆட்டம் நடக்கும் மைதானத்தில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்ட விதிகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். இப்படி குறிப்பாக மாற்றம் செய்யாத நிலையில் தரையைத் தொட்டுச் சென்றால் நான்கு ஓட்டங்களும் தொடாமல் எல்லைக் கோட்டைத் தாண்டினால் ஆறு ஓட்டங்களும் அளிக்க வேண்டும்.
இதனால் நடுவர்களும் இரு அணித் தலைவர்களும் டாஸின் முன் 5 மற்றும் 8 ஓட்டங்கள் என்ற விதியை ஏற்றுக் கொண்டால் அதன்படி விளையாடலாம்.
Law 19.5(a) states: "Before the toss, the umpires shall agree with both captains the runs to be allowed for boundaries. In deciding the allowances, the umpires and captains shall be guided by the prevailing custom of the ground."
http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-19-boundaries,1355,AR.html
சரியான விடையை எழுதி தபால் அட்டையை விரைவில் பெறப்போகிறவர்கள்
1. மருத்துவர். புருணோ (http://www.payanangal.in/)
2. வெண்பூ (http://venpu.blogspot.it/)
3. இலவசக்கொத்தனார் (http://elavasam.blogspot.com )
4. காரணன் (https://twitter.com/kaaranan)
5. கேவிஆர் (http://kvraja.blogspot.it/)
6. ஸ்டாலின் ஜே. தங்கராஜ்
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி