Thursday, April 05, 2012

கெட்ட வார்த்தை - ஒரு நிமிடக்கதை

மொழியின் ஆளுமை வெறுமனே இலக்கியங்களில் மட்டும் இருப்பதில்லை, பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகளிலும் இருக்கின்றது. பொதுவாக எனக்குக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது பிடிக்காது, இருந்த போதிலும் அவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வேன். அகர்வால் மூச்சுக்கு முந்நூறு தடவை இந்தியில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவான். ஆங்கிலம் தெரிந்த தோழிகள் அருகில் இருந்தால் கெட்ட வார்த்தைகள் ஆங்கிலத்திலும் தப்பும் தவறுமான சாதாரண வாக்கியங்களுக்கு மத்தியிலும் வந்து விழும். அவனைப் பொருத்தமட்டில் வெகு சகஜமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறானாம்.


கனியிருப்பக் காய்கவர்ந்தற்று வகையில் அதீத கோபம் வந்தாலொழிய எந்த மொழியிலும் நான் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கிடையாது. அதே சமயத்தில் கலாச்சாரத்தினுள் ஊறிய கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு எதுவும் காட்ட மாட்டேன்.

“கார்த்தி எப்படி இருக்கிறாய்” என்ற கேள்விக்கு முன்னர் பெஹன்சூத், மாதர்சூத் என்ற அடைமொழியும் சேர்ந்து வரும்.

எந்த மொழியும் கைவைசப்படும் முன்னர், பிரயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் நம்மைக் குத்தாது. தூர்தர்ஷனின் இந்தித் தெரிந்த எனக்கு, கடந்த சில வாரங்களாகவே அகர்வாலின் வேண்டுமென்ற , இடம் பொருள் ஏவலற்ற கெட்ட வார்த்தைகள் ஊடான பேச்சு நடை எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தேவையின்றி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதே என அவனிடம் ஒரு முறை சொல்லியும் விட்டேன்.

“உனக்கு கெட்ட வார்த்தைகள் தெரிந்தால் நீயும் பயன்படுத்திக்கொள் பெஹன்சூத்? என பதில் சொன்ன பின்னர் அவனிடம் ஒட்டு மொத்தமாகப் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.

சில மாதங்கள் கழித்து, ஒரு மாணவர் கொண்டாட்டத்தின் போது, வலிய வந்து சிலப்பல மதராசி நகைச்சுவைகளுடன் “இன்றிரவு என்ன செய்யப்போகிறாய்” என முன்னர் சொன்ன கெட்ட வார்த்தைகளுடன் கேட்டான். என்னைச் சுற்றிலும் சில இந்திப் பேசும் தோழிகள் மற்றும் அரை குறை இந்தித் தெரிந்த தென்னிந்தியர்கள்.

இதற்காகத்தானே காத்திருந்தாய் என , நினைத்து சிரித்துக்கொண்டே,

“ தேர்ரி லௌடியா கொ ச்சூடு கியா” நான் சொன்ன பதிலை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. வெளிறிப்போன முகத்துடன் வெளியேறிய அகர்வால், அதன்பின்னர் யாரிடமும் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில்லை.

சொல்ல மறந்துவிட்டேன், அந்த சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அவனுக்குத் திருமணம் ஆகி இருந்தது.