Wednesday, April 04, 2012

நெடுங்கதைப் போட்டி - ரிஷ்வன் எழுதும் தொடரின் பாகங்கள்

சில வாரங்களுக்கு முன்னர் என்னால் அறிவிக்கப்பட்ட வினையூக்கி நெடுங்கதைப் போட்டியில் பங்கேற்பதற்காக பதிவர் ரிஷ்வன் மிகச் சிரத்தையாக தொடரை எழுதிவருகின்றார்.

அந்தத் தொடரை வாசிக்க பின்வரும் சுட்டியினை சொடுக்கவும்.

கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி

---
1. என் மனதைக் கவர்ந்த முதல் நெடுங்கதைக்கு - இந்திய ரூபாய் 2500 பணமுடிப்பாக வழங்கப்படும்.

2. இரண்டாவது பரிசு - 1500 ரூபாய்

3. பங்கு பெறும் அனைவருக்கும் ரூபாய் 100 மதிப்பில் புத்தகங்கள் வழங்கப்படும்.

இன்ப அதிர்ச்சியாக பரிசுத் தொகை அதிகப்படுத்தப்படவும் கூடும்.

இந்தியக் குடியரசுக்கு வெளியே இருப்பவர்கள் வெற்றிபெற்றால், அவர்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பிற்கு சமமாக வழங்கப்படும்.

கதைகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் ----> நான் மட்டுமே !!! - வினையூக்கி செல்வா :)
-----