காகிதக் கடவுள் - உரைநடைக்கும் கவிதைக்கும் நடுவிலான ஒரு முயற்சி
சாமிப்படத்தை மிதித்த போது நாத்திகன் எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்தது.
காந்தி, ஜின்னா, பெஞ்சமின் பிராங்ளின், வாஷிங்டன்,
ஜெபர்சன், மாவோ, கோமேனி, அகஸ்டஸ் 2, குஸ்டாவ் 1, எலிசபெத் 2,
பியரி க்யுரி , யூசுப்-பின்.இசாக்
ஏன் ரத்தக் காட்டேறி ராஜபக்சேவுடன்
இன்னும் ஏராளமானோர் என் கடவுள்கள்...
எண்ணிக்கையில் குறைவானவர்கள்
படைக்கப்பட்ட கடவுள்களை விட மேலானவர்கள்
காகிதங்களில் இருக்கும் கருணாமூர்த்திகள் ...
மிதிபட்ட படத்தைக் குப்பையில் வீசி,
அருகில் கிடந்த 100 ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டேன்.
தொலைந்ததைத் தேடி தன்னையும் கடவுளையும் நிந்தித்தபடி
கடந்து சென்றான் ஒருவன்.