Saturday, July 24, 2010

என்னைப்போல் ஒருவன் - சிறுகதை

”இது தற்செயலானதா!! ”என ஒரே வரியில் மோகனிடம் இருந்து என்னுடைய சிறுகதையின் பிரதியுடன் அவருடைய ஆங்கிலக் கதையின் பிரதியையும் இணைத்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வாசுகிரெட்டி சொன்ன ஒருவரிக்கதைக்கு கைகால் வைத்து சின்ன எதிர்பாராத முடிவுடன் ஒரு கதையை போன மாதம் எழுதி இருந்தேன். மோகனின் ஆங்கிலக் கதையை வாசித்துப் பார்த்தேன். நடக்கும் சூழலைத் தவிர முடிவு முதற்கொண்டு அப்படியே கதையின் கரு அப்படியே என்னுடையது. என்ன விசயம் என்றால் மோகனின் கதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தது.


வெளியில் இருந்து பார்க்கும்பொழுது நான் திருடி எழுதிவிட்டதாக இருக்கும். ஆனால் மோகனின் எண்ண ஓட்டங்களிலேயே நானும் எழுதுவது இது முதன்முறை அல்ல, மோகன் என்னுடைய பள்ளித்தோழன், எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தோம். பிடித்த தலைவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் என கட்டுரைப்போட்டி நடத்தப்பட்ட பொழுது எல்லோரும் காந்தி நேரு என எழுத நாங்கள் இருவரும் பிரபாகரன் பற்றி ஏறத்தாழ ஒரே மாதிரி எழுதி இருந்தோம். தமிழாசிரியர்
”முளைச்சி மூணு இலை விடல, இப்பொவே கலகக்காரன் ஆகனுமா !! இதுல காப்பி வேற அடிக்கிறீங்களடா ” என எங்கள் இருவரையும் பின்னி எடுத்தார்.

ஒன்பதாம் வகுப்புத் தேர்வுகளில் எங்களது விடைத்தாளில் விடைகள் ஒரே மாதிரியாக இருக்கும். கார்த்தி, மோகன் ஆங்கில அகர வரிசைப்படி அடுத்தடுத்து அமர்வதால் ஒருவரை ஒருவர் பார்த்து எழுதி இருக்கலாம் என்ற சந்தேகம் எப்பொழுதும் ஆசிரியர்களுக்கு உண்டு. இதற்காகவே 10 ஆம் வகுப்பில் பூவாளுரில் இருந்து லால்குடிக்கு நான் பள்ளியை மாற்றிக்கொண்டேன்.

அப்புறம் வாழ்க்கை ஃபாஸ்ட்பார்வர்டில் ஓட, வியாபர மேலாண்மைப் படிக்க வந்த சுவீடனில் நானும் மோகனும் ஒரே வகுப்பு. ஒரு முறை பேராசிரியர் கூப்பிட்டுக் கேட்டார்.

”போத் அஃப் யுவர் அசைண்ட்மெண்ட்ஸ் லுக் எக்ஸாக்ட்லி சிமிலர்” நம்மைப்போல யோசிப்பவர்களைப் பொதுவாக நமக்குப் பிடிக்கவேண்டும். ஆனால் எனக்கு மோகனைக் கண்டாலே வெறுப்பாய் இருந்தது. மோகனின் நிழலே என் பிம்பமாய் மாறிவிடுமோ என பயமாயிருந்தது. சோம்பேறியாய் கடைசிநேரத்தில் வேலை செய்து முடிப்பதால் நான் தான் மோகனிடம் இருந்து அறிவுத்திருட்டுகளைச் செய்வதாக சக மாணவர்களும் நினைத்தார்கள்.

படிப்பு சம்பந்தமானவைகளை விடுங்க, ஃபேஸ்புக்கில் வைக்கும் வாக்கியங்கள் கூட ஒரே மாதிரியாக இருக்கும். இன்றைக்கு நீலக்கலர் சட்டை, போட்டுப் போய் வாசுகிரெட்டியை அசத்தலாம் என்றால் அதே மாதிரி சட்டையுடன் மோகனும் கல்லுரிக்கு வந்து சேருவான்.

நிம்மதியானது என்னவெனில் எனக்குப்பிடித்த வாசுகிரெட்டியை மோகனுக்கும் எங்கே பிடித்துவிடுமோ என்பது மட்டும் நடக்காததுதான். நான் சுந்தரத் தெலுங்கில் காதல் படித்துக் கொண்டிருக்க , மோகன் , கிறிடினா ஆண்டர்சனுடன் ஸ்விடீஷ் கீதங்கள். இருவருமே வைரமுத்துவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரவரின் பெண்களை அசத்துகின்றோம் என்பதை எதேச்சையாக மோகனின் கையடக்க நாட்குறிப்பைப் பார்த்தபொழுதுதான் அறிந்து கொண்டேன்.

மோகனின் காதலி கிறிஸ்டினாவும் வாசுகிரெட்டியும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

“கார்த்தி, ஐயம் கோயிங் டு டு மை தீஸிஸ் வித் கிறிஸ்டினா “

“ஷீ இஸ் யுவர் ரைவல் நு சொல்லுவா , ஹவ் கம்”

“கிறிஸ்டினா நேத்து செம சரக்கு அடிச்சிட்டு ரொம்ப ப்ரைண்ட்லியா பேசிட்டு இருந்தாள், அப்போ சின்ன லவ் பொயம் ஒன்னுசொன்னா, அவள் யுஜி படிக்கிறப்ப எழுதுனதாம்”

“அது சரிம்மா, அதுக்கும் தீஸிஸுக்கும் என்ன சம்பந்தம்”

”கார்த்தி, எக்ஸாக்டா அதே வார்த்தைகளோட, நானும் எஞ்சினியரிங் படிக்கிறப்ப காலேஜ் மேகசினுக்கு 2005ல ஒரு போயம் எழுதி இருந்தேன்,அவளும் என்னைமாதிரியே யோசிச்சிருக்கா பாரேன்”




6 பின்னூட்டங்கள்/Comments:

said...

!!!!!!!!!!!!!!:)

said...

மோகன் உங்க ஆத்மாவா? ரொம்ப பேய் கதைகளும், பேய் படமும் பார்க்காதீர்கள். இப்பொழுது உங்க ஆத்மாவே உங்களை பயமுறுத்திகிறது,
சும்மா சொன்னேன்.
கதை முடுவு சரியா புரியல

said...

எல்லாரும் ஓரே குரூப்பா தான் கிளம்பீருகீங்க.....நடத்துங்க

said...

பாஸ் கதையின் முடிவு குழப்பமா இருக்கு.... அந்த கவிதை உங்களதா இல்லை எதற்சையான ஒன்றுனு சொல்லவரிங்களா...

said...

கொஞ்சம் குழப்பம்!

said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)