Saturday, July 21, 2007

அம்மா

முன்பொரு சமயம் கௌதமின் தடலாடிப் போட்டிக்காக "அம்மா" என்ற தலைப்பில் எழுதியவை.

மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது,
------------------------------------------------
1. இ-கலப்பையை தரவிறக்கம் செய்க.
2. இ-கலப்பையை கணினியில் நிறுவவும்.
3. Alt + 2 தட்டச்சு செய்யவும்
4. ammaa - அம்மா
------------------------------------------------
நாளை முடிக்க வேண்டிய வேலைகள் இருப்பினும், அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்ற எனது சக ஊழியனுக்கு விடுப்பு வழங்கினேன், கடைசி காலத்தில் அம்மாவை சரியாக பராமரிக்காத நான்.

0 பின்னூட்டங்கள்/Comments: