Monday, May 28, 2007

எல்லாம் சாமிதான்

பள்ளியில் முதல் மாணவன் நான்,
எல்லாம் கற்பகவிநாயகர் அருள்
- அம்மா அத்தையிடம்

கடவுள் சன்னிதானம் பணம் போயிடாது
ரூபாய் தாளை நான் கொடுக்க
- ஒரு பெரியவர் சக நண்பரி்டம்

கர்த்தருக்கு நன்றி நீ கிடைத்ததுக்கு
- காதலி என்னிடம்

சாமிப்பேரு உனக்கு, அதனாலதான் இவ்வளவு நல்ல குணம்
- பக்கத்து வீட்டு பாட்டி

இராப்பகலாய் நான் முயற்சித்து முடித்த வேலை
அலுவலகக் கோயிலில் சிறப்பு யாகம்

பல நாள் வருத்தமெல்லாம் போனது,
"கடவுள் மாதிரி வந்து எம்புள்ளய காப்பத்திட்ட"
- என் ரத்தம் பெற்று உயிர் பிழைத்தவரின் தாய்

****************
பி.கு: சிரத்தை எடுத்து கவிதை வடிவில் எழுதவேண்டும் என்று முயற்சித்தது. எங்கேனும் வார்த்தைகளை மாற்றிப் போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் சொல்லுங்களேன்.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லாயிருங்குங்க..

said...

கவிதையும் எழுத தொடங்கிவிட்டீர்களா..! நல்ல முயற்சி தொடருங்க. மாற்றம் செய்ய தேவையில்லை. நன்றாக உள்ளது. என்ன தன்னம்பிக்கையை கடவுள்மேலே போட்டுவிடுகிறோம். நமது உயர்வெல்லாம் நமது விடாமுயற்சி என்பதை ஏனோ உணரமுற்படுவதில்லை.

said...

யார் யார்
எப்படி எப்படி
நினைத்தாலும்
அப்படி அப்படி
தோன்றுவதால்
நீங்கள்
கடவுள்தான்!

said...

நன்றி சிவபாலன், நளாயினி மற்றும் சிவஞானம்ஜி

said...

sivame anbu pala perukku.Anbe sivam silarukku :) arumaiyaana pathivu

said...

ஆமாம் சாமி...