Monday, May 14, 2007

முன்னாள் காதலி - சிறுகதை

ரம்யாவுடன் கைக்கோர்த்து கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்த கார்த்தி சடாரென யாரையோப் பார்த்துவிட்டு,

“ரம்யா, ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, இதோ வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு தூரத்தில் தனது கணவனுடன் சென்று கொண்டிருந்த ஜெனியை நோக்கிப் போனான்.

“சல்யூ ஜெனி, கொமொன் சவா? “

“ஜ வே திரேபியான் கார்த்தி, ஏ த்யூ?”

“ எனக்குத் தெரிந்த லாங்குவேஜில பேசுங்க, ஹாய் கார்த்தி, உங்களை நான் டீவில அடிக்கடி பார்த்து இருக்கேன், இட்ஸ் எ சர்ப்ரைஸ் நேரில பார்க்குறது, உங்களைப் பத்தி ஜெனி நிறைய சொல்லி இருக்கா"

“கார்த்தி, இது மோகன், என் ஹஸ்பெண்ட்" என ஜெனி தனது கணவனை அறிமுகப்படுத்த மோகனுக்கு ஹாய் சொன்னான் கார்த்தி..

" உன் ப்ரோகிராம் எல்லாம் டீவில பார்த்து இருக்கேன், அருமையா ஆர்க்யூமெண்ட்ஸை எடுத்திட்டுப் போறே!! ஏதாவது ஃபாரின் மீடியா போகுற சான்ஸ் இருக்கா? உனக்குத்தான் பிரென்சும் ஜெர்மனும் சரளமா வருமே”


“இப்போதக்கி அப்படி ஐடியா எதுவும் இல்லை, எங்க சேனலின் நெம்பர் 2 புதுசா ஒரு சேனல் ஆரம்பிக்கப் போறாரு, அவர் போயிட்டாருன்னா அவரோட சில பேரும் போயிடுவாங்க,, சோ எனக்கு சீக்கிரம் மேல வர்ற சான்ஸ் அதிகம்"

“தட்ஸ் கிரேட் கார்த்தி, குட் லக்"

“யூ னொ ஒன் திங், சீனியர் பொலிடிசியன் அவர் கட்சிக்கு வர சொன்னாரு, நான் தான் இப்போவேண்டாம்னு மறுத்துட்டேன்" என அடுத்தடுத்து தனது அருமை பெருமைகளை விடாப்பிடியாக பேச ஆரம்பிக்க மோகனின் முகம் அவனையும் அறியாமல் மெல்லிய சுனக்கத்தை காட்ட ஆரம்பித்தது. இதைக் கவனித்த ஜெனி அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக

“ஒகே கார்த்தி, நாங்க கிளம்புறோம்" என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு இருவரும் நகர்ந்தனர்.

கார்த்தியை அடையாளாங் கண்டு கொண்ட சிறு கூட்டம் அவனிடம் வந்து ஆட்டோகிராப் வாங்க ஆரம்பித்தது. அவனைச் சுற்றி கூடிய கூட்டத்தை ஜெனி திரும்பிப் பார்த்தபடி போனாள்.

அதற்குள் கார்த்திக்கின் வருங்கால மனைவி ரம்யா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். கார்த்திக்கின் முகத்தில் பரவி இருந்த சந்தோசத்தைப் பார்த்து

“யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்த"

“ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் ஒரு பழைய கணக்கைத் தீர்த்தேன், ஐ ஜஸ்ட் ஹேப்பண்ட் டூ மீட் ஜெனி"


கார்த்தி இதற்குத்தானே இவ்வளவு நாள் காத்திருந்தது. எதேச்சையாக ஒரு நாள் ஜெனியைப் பார்க்கவேண்டும். அவள் கண் முன் வாழ்க்கையில் எத்தனை தூரம் தான் முன்னேறி இருப்பதை காட்ட வேண்டும், அவளால் எட்டாத உயரத்தில் தான் இருப்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்லவேண்டும். அவனின் அசூர வேக வெற்றியைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று அவளின் கண்களில் ஏற்படும் ஏக்கத்தை காணவேண்டும். அவனை விட்டு 5 வருடம் முன் விலகியமைக்கு அவளுக்கு கொடுக்கும் தண்டனை இதுவாகத்தான் இருக்க வேண்டும், சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழும் ஜெனியிடம், தனது அந்தஸ்தை காட்டிக் கொண்டதில் அவனது நீண்ட நாளைய மனக்குமுறல் தீர்ந்தது போல் இருந்தது.

அதே நேரம் ஜெனி மனதினில்,

“ம்ம்ம், கார்த்தி இன்னும் மாறல, அதே ஸ்வீட் லேயர்ட் விச வார்த்தைகள், அடுத்தவர்களை தாழ்மையாக அடையாளப்படுத்தும் பேச்சுக்கள், ஒரு வித எமோஷன்ல் ரிவஞ் எடுக்கும் மனப்பான்மை, ம்ம் இன்னும் அவன் திருந்தவேயில்லை, இப்படி பட்ட வெற்றியாளனுடன் வாழ்வதைவிட, உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், மனைவியைத் தோழியாகப் பாவிக்கும் மோகனுடன் வாழ்வதுதான் சந்தோசம் , அது சராசரி நடுத்தர வாழ்க்கையாக இருந்தாலும் கூட" என்று நினைத்து மோகனின் தோளை வண்டியில் செல்லும்போது இறுக்கப் பிடித்துக் கொண்டாள்..

6 பின்னூட்டங்கள்/Comments:

none said...

இது தானுங்க அண்ணா வாழ்க்கை!
நாம நம்மள பத்தி ஒன்னு நினைக்க, நம்மளை பத்தி இன்னொருதர் வேர ஏதோ நினைப்பாங்க!
இதுல எல்லாம concentrate பண்ணாம, நம்மால முடிஞ்ச நல்லதை பண்ணிட்டு, அவங்க அவங்களுக்கு பிடிச்சமாதிரியான வாழ்க்கைல சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணனும்!
Correct a அண்ணா?

வினையூக்கி said...

பூர்ணிமா நீங்க சொல்றதும் கரெக்ட்டு தான்

Gnanes said...

veetuku veedu vasa padi...

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

Alag said...

ஹ ஹ ஹ. கதை சூபர் செல்வா

Unknown said...

We know who we are. No need to show anyone and no need to consider what others are telling about us.