Sunday, May 13, 2007

ஒரு வீடு இரு வாசல் - சிறுகதை

கைத்தொலைபேசியில் அழைப்பு, கடவுளே!! இது ஜெனியின் எண்ணாச்சே!!, மொபைலில் பதிந்து வச்சிருந்ததை அழித்திருந்தாலும், மனதில் பதிந்து வைத்திருந்ததை அழிக்க முடியவில்லையே!!!

எதற்கு இந்த நேரத்தில் கூப்பிடுகிறாள். முடிந்து போன விசயங்கள் முடிந்து போனதாகவே இருக்கட்டுமே!! , எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே அந்த அழைப்பு முடிந்து போனது. நான் திரும்ப அழைக்கவில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் ஜெனியிடம் இருந்து அழைப்பு.

“ஹலோ ஜெனி சொல்லு"

“கார்த்தி,...” அழுகையினால் ஏற்படும் செருமலுடன்

“ஜெனி, என்ன ஆச்சு?”

“கார்த்தி, நான் உன் கூட வந்துடுறேன், பிளீஸ் நாம எங்கயாவது போயிடலாம்"

“முதல்ல என்ன ஆச்சு சொல்லு, உன் ஹஸ்பெண்ட் எதாவது சொல்லிட்டாரா, என்ன பிரச்சினை, உன் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகல"

“பிளீஸ்டா, என்னைப் புரிஞ்சுக்கோ, என்னால முடியாது, உன் நினைப்பு என்னைக் கொல்லுது, உன்னை ஏமாத்திட்டேண்டா, என்னால அந்த கில்டி ஃபீலிங்கை தாங்க முடியல"

“ஜெனி, எல்லாம் சில நாள்ல சரி ஆயிடும்"

"இல்லைடா என்னால முடியாது, வெட்கத்தை விட்டு சொல்றேன், என் ஹஸ்பெண்ட் தொடுறப்ப எல்லாம் உன்னை தான் நினைச்சுக்கிறேன், நரக வேதனையா இருக்கு" அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது குரல் உடைந்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“ஜெனி, பிளீஸ் அழதே, “ எனக்கும் கண்கலங்க ஆரம்பித்தது.

“கார்த்தி, அடுத்த மாசம் எனக்கு விசா வந்துடும், அவர்கூட போயாகனும், அதுக்கு முன்ன உன்கூட வந்துடுறேண்டா, என்னை ஏத்துக்குவியா, பிளீஸ்"

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“சரி ஜெனி நாளைக்கு நான் உன்னை நேரில் பார்க்கிறேன், அப்போ இதைப் பத்தி பேசலாம்"

“கார்த்தி, நாளைக்கு ஈஞ்சம்பாக்கம் பாபா கோயிலுக்கு வந்துடு, நீ வரலன்னே அப்படியே கடல்ல குதிச்சுடுவேன்"

“சரி வந்துடுவேன், தயவு செய்து எதுவும் தப்பு தப்பா யோசிக்காம தூங்குடா குட்டிமா!!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

ஜெனி என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்தவள். கல்லூரிக்காலங்களில் என்னுடன் படித்த எனக்குப் பிடித்த பெண்ணின் முகச்சாடையில் இருந்ததால், பழக்கத்தை வலிய ஏற்படுத்திக் கொண்டு, திட்டமிட்ட படி காதலை சொல்லி அடுத்த பத்து நாட்களில் அவளின் சம்மதத்தை வாங்கியபோது என்னிடம் இருந்த அதிர்ஷ்டம், அவள் தந்தையிடம் எங்களின் விருப்பத்தை சொல்லிய போது இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாத நான், அவளுக்காக மதம் மாறக்கூட தயாராயிருந்தேன். ஆனால் ஜெனியின் தந்தை தனது பொருளாதார அந்தஸ்தைக் காட்டி மறுத்துவிட்டார். ஆமாம், மாதத் தவணையில் மாருதி கார் வாங்கி ஓட்டும் நான் எங்கே!! ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தையில் வரும் புதிய காரில் வலம் வரும் அவர்களின் நிலை எங்கே!!!

ஜெனியவே நேரே வரவழைத்து தனது வாழ்க்கையில் என்னைக் குறுக்கிடவேண்டாமென்று சொல்ல வைத்தார். இருந்தும் ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தேன் திருமணத்திற்கு முன்னர் என்னைத் தேடி வருவாள் என்று. இதற்காக பெங்களூரில் இருக்கும் என் நண்பர்களிடம் வீடு பார்க்க எல்லாம் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் இப்படி திடீரென்று திருமணத்திற்குப் பின் இவ்வளவு பெரிய குண்டைத் தூக்கிப் போடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“பிறர் மனை நோக்காமை பேராண்மை" படித்த குறளும், “எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே" பார்த்த வசனமும் ஞாபகத்திற்கு வந்தது.

இவள் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக செய்து கொண்டால், நானும் அல்லவா இதில் இழுக்கப்படுவேன். அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்ற எண்ணத்திலேயே தூங்கிப் போனேன்.

மறுநாள் ஜெனியை சந்திக்கப் போனபோது, என்னமோ மனதில் அந்தப் பழையக் காதல் இல்லை. கடைசியா இந்த பாபாக் கோவிலுக்கு வந்தபோது
“ஜெனி எனக்கு எப்படியாவது கிடைக்கவேண்டும்" என்று வேண்டிய வேண்டுதல் இப்படியா இரு இக்கட்டான சூழலுக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டும்.

ஜெனி அந்த சோகத்திலும் அழகாக இருந்தாள். கோவிலுக்கு வெளியேவே நின்று கொண்டிருந்தாள்.

“ஜெனி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, சாமி கும்பிட்டு வந்துடுறேன்"

கஷ்டகாலத்துலதான் கடவுள் என்கிற ஒரு விசயம் நிஜமாகவே இருந்து எல்லா பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றமாட்டாரா நம்மை அறியாமல் ஒரு உணர்வு/உந்துதல் வரும். எனக்கு இப்போவெல்லாம் அடிக்கடி வருகிறது.

வேகமாக வேகமாக சாமி கும்பிட்டுவிட்டு காருக்கு வந்தபொழுது என் காரிலே உட்கார்ந்திருந்தாள்.

காரை மிதமான வேகத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் செலுத்தினேன்.

“ஜெனி, நம்மை மீறி சில விசயங்கள் நடந்து முடிஞ்சுடும், அதை சகித்துக் கொண்டு தான் வாழ்க்கையை வாழ பழகிக்கனும், உன் கல்யாணத்திற்கு முன்னமே நீ என்னோட உங்க அப்பாவை எதிர்த்து வந்திருந்தீன்னா, எந்த சஞ்சலமும் இல்லாம உன்னை ஏத்திக்கிட்டிருந்திருப்பேன். “

“இல்லைடா, அப்பா, அம்மா எல்லாம் என்னை மிரட்டி ஒரு சூழ்நிலைக் கைதியா வச்சிருந்தாங்க, என்னால ஒன்னும் பண்ண முடியல"

“ம்ம்ம், ஜெனி என்னை மறந்து வாழ்ந்தின்னா, அது உன் மனசிலே மட்டும் தான் காயமா கொஞ்ச காலம் இருக்கும், அதுவும் காலப் போக்கில மறைஞ்சுப் போயிடும், ஆனால் நீ சொல்ற மாதிரி நாம முட்டாள்தனமா நடந்துகிட்டோம்னா எல்லோருடைய மனசிலேயும் தீராத காயமா ஆகிடும். தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வு காலம்பூர நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கும், இந்த உலகத்திலே இருக்கிற பெண்களும் ஆண்களும் உன்னை மாதிரி நினைச்சாங்கான்னா குடும்ப உறவு முறைகளே இருக்காது, உன் ஹஸ்பெண்டுக்கு வாழ்க்கையைப் பத்தி எவ்வளவு கனவுகள் இருக்கும், அந்தக் கனவுகளை எல்லாம் சின்னாபின்னமாக்கி விடாதே!! முழுக்க முழுக்க தவற்றை உன் பக்கம் வைத்துக் கொண்டு அவரை ஏன் பலிகடா ஆக்க வேண்டும், அவருடன் ஆஸ்திரேலியா போ, அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட், ஒரு சின்னக் கனவு மாதிரி என் நினைவுகள் தானாகவே மறந்துவிடும், எப்படி உன் நினைவிலே என் காலேஜ் ஜூனியர் நினைவுகள் மறந்துப் போனது அது மாதிரி, எனக்கும் உன் நினைவுகள் மறக்கும், ஜெனியோட இடத்தை ஒரு ஜென்சி பிடிக்கலாம். நீ படிச்சவ, உட்கார்ந்து யோசி... உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்கும்.. மற்றவர்களின் உணர்வுகளைக் கொன்று புதைத்து அதன் மேல் நம் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டாம். நானும் நைஜீரியா போறேன். இரண்டு வருஷம் காண்டிராக்ட். சில சமயங்களில் தோல்விகள் கூட இனிமையாக இருக்கும், லெட் அஸ் பி குட் பிரெண்ட்ஸ் ஃபார் எவர்,"

முடிவு 1:

நான் சொல்லிக்கொண்டு இருக்க அவள் கண்களில் தாரைத்தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“சாரிடா, யூ ஆர் கரெக்ட், உன்னை ரொம்ப டிரபிள் பண்ணிட்டேன். என் ஹஸ்பெண்டும் உன்னை மாதிரி ஜெண்டில்மேன் தான், என் வாழ்க்கை நல்லாதான் இருக்கும்... ஆமாம் இவ்வளவு தூரம் நான் வந்த பிறகும் என்னைக் கழட்டி விடுறீயே, இந்த கேப்பிலே யாரையாவது கரெக்ட் பண்ணிட்டீயா " என்று சொல்லிக் கொண்டிருந்த போது அவளுக்கு அழைப்பு வந்தது,

“ஹலோ ஹனி, ஐ யம் வித் மை பிரெண்ட், வில் பி பேக் இன் ஃபியூ மினிட்ஸ்" அழைப்பைத் துண்டித்தாள்.

அவளின் பேச்சிலும் பார்வையிலும் ஒரு நல்ல மாற்றம் தெரிந்தது.

நான் வேண்டிய வேண்டுதல் நிறைவேற்றிய சீரடி பாபாவுக்கு நன்றி தெரிவிக்க வண்டியைத் திருப்பினேன்.

முடிவு 2 :
“கார்த்தி,, இட்ஸ் டூ லேட் நௌ. ஒரு வேளை நேத்தே இந்த அட்வைஸ் பண்ணி இருந்தீன்னா நான் மாறினாலும் மாறி இருந்திருப்பேன் . நானும் நீயும் அன்-லக்கி, உன்கிட்ட பேசி முடிச்ச பிறகு நான் ஸ்லீப்பிங் டேப்லட்ஸ் போட்டு சூசைட் பண்ணிக்கிட்டேன்,. உன்கிட்ட மீட் பண்றேன்னு சொல்லிட்டேனேன்னு தான் இப்போ வந்தேன்.” என்று சொல்லி காரின் சீட்டிலிருந்து நொடியில் மறைந்தாள்., அதிர்ச்சியில் காரின் கட்டுப்பாட்டை நான் தவறவிட எதிரே !!! அய்யோ ஒரு கண்டெயினர் லாரி!!!!!!

4 பின்னூட்டங்கள்/Comments:

Alchemist said...

Pazhaiya Kadhai naalum, indha pudhiya flavour nalla irrukku..

your writing has improved a lot Selva.. I think you have attained the skill to write anything in a interesting way for the reader.

Unmaayave unnoda way of writing.. padikka romba interesting ga irrukku...

Nethu intha story ya nee enakku sonna appuramum.. inikku padikka rombave interesting ga irunthathu..

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

செந்தில்குமார் said...

hi dear friend nice read this story keep it up

here by senthilkumar.v
http://naanentralenna.blogspot.com

நிலாமதி said...

முடிவு ஒன்று........நன்று . நல்ல நட்புக்கும் அவளின் எதிர் காலத்துக்கும் நன்று........

...முடிவு இரண்டு ....
ஒரு சஸ்பென்ஸ் படத்துக்கு கொடுக்கலாம். வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
புதிய நட்பு றவு ( சகோதரி ) நிலாமதி ( mathinilaablogspot .com )