Sunday, March 25, 2007

இதைப் படிக்காதிங்க

லீ ஜெர்மோன், இவரது அறிமுக டெஸ்ட் ஆட்டமே அணித்தலைவராகத்தான். 1994-95 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த நியுசிலாந்து அணி மிக மோசமாக விளையாடியதை அடுத்து, ஒரு சில ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த லீ ஜெர்மோனை அணித்தலைவராக்கினார்கள். ஓரளவுக்கு சமாளித்த லீ ஜெர்மோன் 1997 ல் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். பெரிய வெற்றிகளைக் குவிக்கா விட்டாலும் பெரும் வீழ்ச்சியிலிருந்து ஓரளவுக்கு மீட்ட பெருமை இவரைசாரும். 96 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில், சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரும் ஸ்கோரை எட்ட உதவினார். ஆனால் வாவ் சகோதரர்களின் சிறப்பான ஆட்டம் உலகக்கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அடுத்து கிரேம் ஸ்மித், மீண்டும் மழையால் 2003 உலககோப்பையில் தென்னாப்பிரிக்கா வெளியேறிய போது, அடுத்து காலிஸ், பவுச்சர், க்ரிஷ்டன் யார் கேப்டன் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது அதிரடியாக ஸ்மித் ஆக்கப்பட்டார். உலககோப்பைக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் போலக்குக்கும் ஸ்மித்துக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தின் வளர்ச்சி அதற்குப் பின்னால் ஏறுமுகம்தான். லான்ஸ் குலூஷ்னரை "Disruptive element in the team" என வெளிப்படையாக சொல்லி அவரை அணியிலிருந்து நிரந்தரமாக நீக்க காரணமாக இருந்த இவர், ஆஸ்திரேலியாவின் வார்த்தை அடிகளுக்கு சிறப்பான பதிலடி கொடுக்க என்றுமே தவறுவதில்லல.

ஜிம்பாப்வேயின் தற்போதைய கேப்டன் பிராஸ்பர் உத்சேயாவும் இப்படித்தான் கேப்டன் ஆக்கப்பட்டவர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரால் பெரும் தோல்விகளில் இருந்து அணிய காப்பாற்ற இயலவில்லை.

இதுபோல் மீண்டும் மீண்டும் பழைய முகங்களுக்கு போகமால் இந்தியாவும் ஒரு "தலைவனை" உருவாக்க முயற்சிக்கலாம். திராவிட்டை தவிர மற்ற பழைய முகங்கள் எதுவுமே பேட்டிங்கில் "consistent" ஆக சோபிக்க வில்லை, கங்குலி கூட தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஆடியது போல் இருந்தது. குறைந்த பட்சம், ஒரு நாள் போட்டிகளில் ஆவது டெண்டுல்கர், சேவாக், கங்குலி, கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர்களுக்கு கல்தா கொடுத்து விட்டு புதியவர்களை சேர்க்கலாம். தோனி, பதான் , உத்தப்பா ஆகியோர்களுக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுத்துவிட்டு சரியாக ஆடவில்லையெனில் நிரந்தரமாக நீக்கிவிடலாம்.

முதற் ஒரு சில வருடங்களுக்கு தோல்விகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் 2011ல் நல்ல அணியை உலகக் கோப்பைக்கு அனுப்பலாம். அதே சமயத்தில் அனுபவ வீரகளினால் டெஸ்ட் போட்டிக்கான அணியையும் மேம்படுத்தலாம்.

ரசிகர்களும்/மீடியாவும் "தனி மனித வழிபாடு" செய்வதை விட்டுவிட வேண்டும். இந்தியா ஜெயிக்கவில்லையா !!! பரவாயில்லை , தோனி 50 ஆ, சந்தோசம், கங்குலி 80ஆ சந்தோசம் என்று ஆனந்தப்படுவதை நிறுத்திவிட்டு வெற்றிக்காக 15 ரன் அடித்திருந்தாலும் அதைப் பாராட்ட வேண்டும்.

எல்லாவற்றுக்கு மேலாக , கிரிக்கெட்டும் ஒரு பொழுது போக்கு அம்சம் மட்டும் எனக் கருதி, ஒரு சினிமா/டிராமா போல் பார்க்க ஆரம்பித்தால் தானாகவே எல்லாம் ஒழுங்காகிவிடும். தேசபக்தியைக் காட்ட/வேளிப்படுத்த ஏகப்பட்ட விசய்ங்கள் இருக்கிறது.

1 பின்னூட்டங்கள்/Comments:

siva gnanamji(#18100882083107547329) said...

படிக்கவே படிக்கலீங்க.........