Friday, March 23, 2007

மார்க் ஷீல்ட்ஸ், ஒரு போலிஸ் ஹீரோ !!

மார்க் ஷீல்ட்ஸ், கடந்த ஐந்தாறு நாட்களில் இந்தப் பெயரை உச்சரிக்காத/எழுதாத தொலைக்காட்சியோ/பத்திரிக்கையோ கிடையாது. ஹாலிவுட் ஹீரோ போல் தோற்றமளிக்கும் இவர் ஜமைக்கன் காவல் துறையில் துணை ஆணையாளர்.

ஷீல்ட்ஸ், பாப்வுல்மரின் கொலைக்கான புலன் விசாரனையில் ஈடுபட்டு வருகிறார். கறுப்பின மக்கள் அதிகம் உள்ள ஜமைக்காவில் ஒரு வெள்ளையதிகாரி இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கும். உயர்நடுத்தர இங்கிலாந்து குடும்பத்தை சேர்ந்த இவர் 17 வயதில் தந்தையுடன் கோபித்துக் கொண்டு, குடும்பத்தை விட்டு வெளியே வந்து காவல்துறையில் சேர்ந்தாராம்.




28 வயதில் இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு உயர்ந்த மார்க் ஷீல்ட்ஸ், லண்டனுக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புகளையும் வகித்து உள்ளார்.

லண்டனில் நவீன கேமராக்களை கொண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியில் திட்ட மேலாளராக இருந்த போது, தனி மனித சுதந்திர தலையீடு என்று அதை விமர்சனம் செய்தவர்கள் , பின்பு தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை சுலபமாக பிடித்தபோது பாராட்டினராம்.

ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் என பலத்தரப்பட்ட குற்றங்களை முறியடித்த மார்க் ஷீல்ட்ஸ் ஸ்காட்லாண்டு யார்டிலும் திறம்பட பணிபுரிந்தவர்.

48 வயதாகும் இவர், ஜமைக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதைமருந்து கடத்தல், சிறுகுற்றங்களை ஒழிக்க ஜமைக்கா அரசினால் 2005 ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டார்.

ஆரம்பத்தில் வெள்ளையதிகாரி என்ற எதிர்ப்பு இருந்தாலும், இன்று ஜமைக்காவில் ஒரு எல்லோராலும் விரும்பப்படும் ஒரு முக்கியஸ்தர்.

தனது ஆறாவது அறிவு அதிகப்ட்சமாகவே வேலை செய்கிறது எனக்கருதும் இவர், நிச்சயம் பாப்வுல்மரைக் கொன்றவர்களை சீக்கிரமாகவே கண்டுபிடிப்பார்கள் என நம்பலாம்.
இவரைப்பற்றி மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

0 பின்னூட்டங்கள்/Comments: