Tuesday, October 03, 2006

ஜெனி - சிறுகதை - தேன்கூடு போட்டிக்காக

"அவன் கனவில் அவள் வருவாள் அவனைப் பார்த்த்து சிரிப்பாள்,
அவள் கனவில் யார் வருவாள் யாரப் பார்த்து அழைப்பாள்"

பழைய சந்திரபாபு பாட்டு அந்த பேக்கரி ரேடியோ வில் ஓடிக் கொண்டிருந்தது. கார்த்திக் வெஜிடபள் பப்ஸும், சாத்துக் கொடி ஜூசும் ஆர்டர் செய்து விட்டு, ஒரு மெந்தால் சிகரெட்டைப் பற்ற் வைத்தான்

கார்த்தி.... என்ற குரலைக் கேட்டு இடது புறம் திரும்பினான்..

அட அது ஜெனி ..அவளைப் பார்த்ததும் அனிச்சையாக சிகரெட்டை கீழே போட்டு அணைத்தான்.

ஹாய் குட்டிமா எப்படி இருக்க?? சாரி எப்படி இருக்கிங்க??

ம்ம் நல்லா இருக்கேன் கார்த்தி... நீ எப்படி இருக்க?

எனக்கென்ன? ம்ம் ரொம்ப நல்லா இருக்கேன் ..ஓ சாரி மறந்துட்டேன் ..ஹேப்பி மேரிட் லைப்.... ஜெனி ..எப்படி இவ்வளோ நாள் கழித்து என்னைப் பார்ர்க்க வந்து இருக்கீங்க...

கார்த்தி, எனக்கு பயமாயிருக்கு ... உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயமாயிருக்கிறது நீ எப்படி வேணாலும் எடுத்துகோ. குற்ற உணர்ச்சி என்று வேண்டுமனாலும் எடுத்துக்கோ ... நாம் காதலித்த காலத்தில் என்னைப் பற்றி , என் குடும்பத்தை பற்றி நிறைய விசயங்கள் சொல்லி உள்ளேன். ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும் I feel that I am exposed.
என்னோட பிரச்சினைகள் , என் குடும்ப பிரச்சினைகள் எல்லாம் உனக்கும் தெரியும் கிறதை நினைக்கிறப்ப பயமாயிருக்கு... என் ஹஸ்பெண்டு கிட்ட எல்லாம் சொல்லி என் வாழ்க்கையில் பிரச்சினை பண்ணிடிவியோன்னு பயமாயிருக்கு கார்த்திக் என்று அழ ஆரம்பித்தாள் ஜெனி.

ஜெனி...பிளீஸ்..குட்டிமா அழாதேடா. ..உனக்கே தெரியும் இந்த ஒரு வருஷத்தில , நீ எனக்கு 'குட்-பை' சொன்ன பிறகு உன்னை நான் எதாவது தொந்தரவு செய்தேனா??? வீடுகூட மாறி போய்ட்டேனே....

எக்ஸ்-க்யூஸ் மீ சார்.. உங்க ஆர்டர் என்று பேக்கரி பையன் பப்ஸையும் ஜூசையும் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.

ஜெனி என்ன சாப்பிடுற? அவள் பதில் எதிர் பாராமாலே அவளுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தான்

ஜெனி ..நீ என்னை விட்டு பிரிஞ்சப்ப எனக்கு உன்மேல் ஆத்திரம் தான் வந்தது... உன்னைக் கொல்லனும்னு கூட தோனுச்சு... ஆனால் நிதானமா கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்த்தேன்... உன் மேல் இருக்கும் பிரியம் நீ பிரிஞ்சதால போச்சுன்னா நான் உன் மேல் வைத்த விருப்பம் உண்மையில்ல.... உண்மையான காதல் உறவில் இல்லை ..பிரிவில் தான் உள்ளது. நான் "ஜென்டில்மேன்" ண்னு நிருபிக்கிற ஒரு சந்தர்ப்பம் நினைச்சு உன்னை விட்டு விலகி தானே இருந்தேன்..

கார்த்தி இல்ல... உன் வார்த்தையில சொல்லனும்னா "புனித பிம்பம்" நு நடிக்கிறே... அப்புறம் நீ ஏன்டா.. உன் ஆனந்த விகடன் கதையில என்ன பற்றி எழுதி இருக்க? அந்த கதையைப் படிச்ச பிறகுதான் உன் மேல் பயம் அதிகம் ஆகுதுடா... பிளீஸ் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து என் சம்பந்தப் பட்ட எதுவும் எழுதாதே...

தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஜெனி தொடர்ந்தாள்

கார்த்தி , நீ ஒருத்தியை காதலிச்சேன்னு எல்லோருக்கிட்டேயும் சொல்லிக்கிறது உனக்கு ஒரு பெருமையான விசயமா இருக்கலாம்... என்னை ஒரு கதாபாத்திரமா உலவ விட்டு நீ பேர் வாங்கிக்கலாம்..ஒரு நிமிஷம் என்னைப் பற்றி யோசிச்சுப் பார்.... நான் உன்னைவிட்டுப் போனது தப்பாகவே இருக்கலாம் அதுக்காக உன் எழுத்தில் என்னைக் கேலிப் பொருள் ஆக்காதே..

என் மேல் உள்ள வெறுப்பை என் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி உன் பழி வாங்கும் என்ணத்திற்கு வடிகால் தேடிக் கொள்கிறாய்

Dont assasinate my character in your writings!
பிளீஸ் எக்காரணம் கொண்டும் என்னைப் பற்றி எழுத மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு...

உன் எழுத்துலகிலிருந்து எனக்கு விடுதலை கொடு ... நான் நிம்மதியா என் வாழ்க்கையை ஆர்ம்பிக்க விரும்புகிறேன்

சரி ஜெனி, இனி உன்னைப் ப்ற்றி எழுதவில்லை.. முடிந்தால் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்

Thanks, நான் அடுத்த வாரம் கனடா கிளம்புறேன்.... உன் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள் கார்த்தி என்று எழுந்தாள் ஜெனி.
-----------------------------------------------------

ஏன் சமுதாய கதைகளெழுதுவதில்லை என்ற டீவி நிருபரின் கேள்விக்கு பிரபல விஞ்ஞான எழுத்தாளாரான கார்த்தியின் கண் முன் 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் நிழலாடிச் சென்றது.. எழுத்து சுதந்திரத்தில் ஜெனியால் தனக்கு தானே விதித்துக்கொண்ட கட்டுப் பாடுகள் தாம் என்னவோ சிறந்த விஞ்ஞான எழுத்தாளரை உருவாக்கியுள்ளது என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்.

14 பின்னூட்டங்கள்/Comments:

Gnanes said...

dai...that was a nice anticlimax at the end....(p.s. pl. dont assasinate 'the' charecter in ur stories..hha ha)

கப்பி | Kappi said...

gud one senior!

வினையூக்கி said...

திரு. ஞானேஷ் அவர்களே, வருகைக்கும் "நச்சுன்னு" அஷாசினேஷென் கமென்டுக்கும் நன்றி

வினையூக்கி said...

டியர் ஜூனியர் தாங்க்ஸ் பா

none said...

Good one Anna.

சிறில் அலெக்ஸ் said...

விடுதலை?

Karthik said...

super anna...i like this short story... ama tamil fonts enga eduteenga

Anonymous said...

supera irukku anna..eppadi tamil font pudicheenga.. enakku konjam sollunga..

வினையூக்கி said...

நன்றி சிறில் அலெக்ஸ்
அவளின் உணர்வு பூர்வமான பயத்திலிருந்து விடுதலை... அவனைப் பொருத்துவரை எழுத்து சுதந்திரத்தில் அவனுக்கு அவனே வைத்துக் கொண்ட கட்டுப்பாடு குறுகிய வாட்டத்தில் கூட வெற்றி பெற வைத்து விட்டது

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வினையூக்கி said...

.

வினையூக்கி said...

Comments from Thenkoodu - Yatha

கலை இலக்கியத் துறைகளில் பெரும்பாலான படைப்புகளின் வெற்றிக்கு பல நேரங்களில் காரணமாக இருப்பவை, தாக்கங்கள். இந்த தாக்கங்களில் மிக முக்கிய தாக்கம் 'காதல்' அல்லது 'காதல் தோல்வி'. தன்னில் இருந்த காதலை எழுத்தாளன் மிகத் திறமையாக வெளிப்படுத்தத் தெரிந்தவன். அதனால்தான் இன்றும் காதல் குறித்து ஏராளமான படைப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

எழுத்தாள காதலனிடம், காதலி என்னைப் பற்றி எழுதக்கூடாதென்று சொல்லிவிட, இன்று எழுத்தாளன் ஒரு விஞ்ஞானக்கதாசிரியனாகி வெற்றியும் பெற்றிருக்கிறான் என்கிறார் ஆசிரியர். காதலி, கதாநாயகிடம், 'உன்னுடைய எழுத்துலகிலிருந்து விடுதலை கொடு' என்று சொல்வதுதான் ஹைலைட்.

நிறை: காதலி, காதலனிடம் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் நிஜவாழ்க்கையின் நிதர்சனங்கள்.
இந்த பகுதியினை இவ்வளவு சரளமாக எழுதியதற்கு ஆசியருக்கு ஒரு ஷொட்டு கொடுக்க வேண்டும்.

குறை: பழைய சந்திரபாபு(?) என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் பழைய சந்திரபாபுவாக கருதப்பட்டிருந்தால், இதுசரியாக இருக்கலாம்.
நிறுத்தற்குறிகள் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு பேச்சின் முன்னும் பின்னும் "" போன்ற குறியீடுகளை இட்டு தனித்துக் காண்பிக்கச் செய்வது வழக்கமான எழுதும் முறை. இதனை ஆசிரியர் மிக நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக கீழ்கண்ட விதத்தில் எழுதுவது படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்:

"எக்ஸ்-க்யூஸ் மீ சார்.. உங்க ஆர்டர்" - என்று பேக்கரி பையன் பப்ஸையும் ஜூசையும் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.
"ஜெனி என்ன சாப்பிடுற?" - அவள் பதில் எதிர் பாராமாலே அவளுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தான். 1

காதல் மட்டுமே கொண்டு சமூதாயக் கதைகள் எழுதப்படுவதில்லை.. என்று மறுக்கும் எண்ணமும் வருகிறது! இருப்பினும், இதில் தவறில்லையென்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள் வினையூக்கி.

Anonymous said...

jenny - nice title.
do you there is a poem by name "jenny kissed me" - it is a very good poem.
-----
hahaha, this full story has quite a few references to outside work - are they intended?
first thing is the title.
second thing is the science writer - sujatha has written a similar story - hope you have read it. someone from him hometown asks him not to narrate her story and he puts everything including her asking not to write about it in the story.
in a way, you've also done the same thing :-)
i find this concept quite funny, in a tongue-in-cheek way - first came across this here:
http://www.jwz.org/gruntle/toooonight.html and then in sujatha - i guess it is in his srirangathu kadaigal collection.
====

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வித்தியாசமான சிந்தனை