Friday, April 14, 2006

அண்ணவரு

நீண்ட நாளாகி விட்டது ஒரு பதிவு போட்டு, தேர்தல் சமயம் ஏதேனும் ஏடாகூடமாப் போட்டு வம்பை விலைக்கு வாங்கிவிடக்கூடாது. இருந்தாலும் தேர்தல் சம்பந்தப் படாத ஆனாலும் "வம்புக்கிழுக்கின்ற" ஒரு பதிவைப் பதிய முனைகின்றேன். நேற்றைய "அண்ணவரு" ரசிகர்களின் "உணர்ச்சி வசப்பட்ட" நிகழ்ச்சிகளுக்குப்பின், ஒரு எண்ணம் மனதை குடைகிறது. தங்களுடைய அன்புக்குரியவர் போய்விட்டார் என்பது மட்டும் இல்லாமல் எம்.ஜி.ஆர் என்.டி.ஆர் போல ஒரு உயரிய மரியாதை கர்னாடகத்துக்கு அப்பால் பெறாமல் போய் விட்டாரே என்று கன்னட ரசிகர்களுக்கு தோன்றியிருக்குமோ.(ஆந்திர, தமிழ்நாடு வண்டிகள் குறி வைத்து தாக்கப்பட்டனவே)

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல் ஏன் ராஜ்குமார் மொழிக்கு அப்பாற்பட்டு புகழ் அடையவில்லை. அவரின் "மொழி" காக்கும் போராட்டங்கள் காரணமாக இருக்குமோ.

திப்பு சுல்தான் டப்பிங் தொடருக்காக அவர் செய்த போராட்டம் தான் நினைவுக்கு வருகிறது.

பொதுவாகவே கன்னடர்கள் தமிழர்கள் போல் மொழி உணர்வு உள்ளவர்கள் என்பது பாராட்டத்தக்கது ஆனாலும் நம்மவர்களுக்குரிய "பெருந்தன்மை" அவர்களிடம் குறைவோ !!!

0 பின்னூட்டங்கள்/Comments: