ஓர் அனுபவமும் யுவன் சங்கர் ராஜாவும்
பிடிப்பு ஏதேனும் சிக்காதா , தத்தளித்துக் கொண்டிருக்கும் நடுக்கடலில் இருந்து தப்பிக்கமாட்டோமா , என ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு காலக்கட்டம் வரும். அப்படியான ஒரு காலக்கட்டம் எனக்கும் வந்தது. எதைத் தின்னால் பித்தம் தெளியும், சீக்கிரம் தெளியும் என்று மந்திரிச்சுவிட்டபடி இருந்த காலக்கட்டம். அந்த சமயத்தில்தான் என் கல்லூரி சீனியர் அரவிந்த்ராஜேஷ் தமிழ்மணி அவர்களை நீண்டகாலம் கழித்து சந்தித்தேன். பண்ணையாரும் பத்மினி படத்தில் வரும் சிறுவர்களைப்போல நானும் கார் பிரியன். அதுவும் முன் சீட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தபடி போகவேண்டும் என ஆசைப்படுபவன். காரில் வந்தார், முன் சீட்டில் அமரவைத்தார், சோறு வாங்கிக் கொடுத்தார். வயிற்றுக்கு ஈயப்பட்டப்பின், பவுலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist என்ற புத்தகத்தை வாங்கித்தந்தார். ஒரே இரவில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். பித்தம் தெளிந்தது. கரை சேர்ந்ததாக உணர்ந்தேன். அல்கெமிஸ்ட் புத்தகத்தைவிட சிறப்பான புத்தகங்களை எல்லாம் அதன் பின்னர் மற்ற நண்பர்கள் பரிந்துரைக்க படித்திருக்கின்றேன். ஆனால் எப்பொழுது எல்லாம் தத்தளிக்கும் தருணங்கள் வருகின்றனவோ அப்பொழுதெல்லாம் அல்கெமிஸ்ட் புத்தக்கத்தை மனம் தேடும். ஒருவேளை அல்கெமிஸ்ட் படித்தவர்களைக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டு, பவுலோ கோயல்ஹோ தூதராக அறிவிக்கப்பட்டு இருந்தால் ரசவாத மதத்தில் வினையூக்கியாக சேர்ந்து இருப்பேன். இன்றும் நண்பர்கள், வாசகர்கள், தோழிகள் தடுமாற்றத்தில் இருக்கும் சமயங்களில் நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் அல்கெமிஸ்ட்.
மனம் பிடிப்பற்ற சூழலில் இருக்கையில் பிடிப்பாய் ஒரு கருவி கிடைக்கையில் கருவியின் தாசனாய் மாறிப்போவது சமயங்களில் தவிர்க்கமுடியாது. ஒருவேளை கருவி இல்லாவிடின் கிடைக்காவிடின் அழிந்துபோய் விடக்கூட வாய்ப்பு அதிகம். யுவன் சங்கர் ராஜாவிற்கும் அத்தகைய சூழல் ஏற்பட்டு இருக்கக்கூடும். திருக்குரான் புத்தகம் வாழ்க்கையில் அவருக்கு மிகுதியான பிடிப்பையும், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொடுத்து இருக்கலாம். தன்னை இழக்க விரும்பாத யுவ-ராஜா தாசன் ஆகலாம். தவறில்லை.
யுவன் சங்கர் ராஜா வாக இருந்தாலும் சரி, அவர் யூனுஸ் அப்துல்லாவாக மாறினாலும் அவரின் இசை ஒன்றுதான். மீட்டப்படும் வீணைக்கு விரல்கள்தான் முக்கியம். விரல்களுக்கான உடல், என்ன ஆடை போட்டுஇருக்கின்றது பார்ப்பதில்லை. இசை என்னும் இயற்கை அவதாரத்தின் தூதுவன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் அவரின் புதுத்தத்துவ வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.
மனம் பிடிப்பற்ற சூழலில் இருக்கையில் பிடிப்பாய் ஒரு கருவி கிடைக்கையில் கருவியின் தாசனாய் மாறிப்போவது சமயங்களில் தவிர்க்கமுடியாது. ஒருவேளை கருவி இல்லாவிடின் கிடைக்காவிடின் அழிந்துபோய் விடக்கூட வாய்ப்பு அதிகம். யுவன் சங்கர் ராஜாவிற்கும் அத்தகைய சூழல் ஏற்பட்டு இருக்கக்கூடும். திருக்குரான் புத்தகம் வாழ்க்கையில் அவருக்கு மிகுதியான பிடிப்பையும், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொடுத்து இருக்கலாம். தன்னை இழக்க விரும்பாத யுவ-ராஜா தாசன் ஆகலாம். தவறில்லை.
யுவன் சங்கர் ராஜா வாக இருந்தாலும் சரி, அவர் யூனுஸ் அப்துல்லாவாக மாறினாலும் அவரின் இசை ஒன்றுதான். மீட்டப்படும் வீணைக்கு விரல்கள்தான் முக்கியம். விரல்களுக்கான உடல், என்ன ஆடை போட்டுஇருக்கின்றது பார்ப்பதில்லை. இசை என்னும் இயற்கை அவதாரத்தின் தூதுவன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் அவரின் புதுத்தத்துவ வாழ்க்கைக்கும் வாழ்த்துகள்.