Wednesday, January 22, 2014

எழுத்தாளர் ஆன பதிவர் செங்கோவி

'தாள்' எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்தை 'தாளில்' பதிப்பிப்பவர்களுக்கும் இடையில் அமெரிக்க கண்காட்சி மல்யுத்த(WWF) பாணியில் தக்காளிச்சாறு சண்டைகள் நடந்து வரும் வேளையில் சத்தமிலாமல்  www.freetamilebooks.com தொடர்ந்து 'யாவருக்கும்' எனகுழுவினர் முறைப்படி அனுமதி பெற்று மின்னூல்களை வெளியிட்டு வருகின்றனர்.  எழுதப்படுபவை எல்லாம் வாசிப்பவருக்கே சொந்தம் என்பதனால் , என்னுடைய எழுத்து முயற்சிகளை நாட்டுடைமை அல்ல அல்ல, உலகவுடைமையாக ஏற்கனவே ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  என்னுடைய சிறுகதைகள் தொகுப்பு இந்த முறையில் மின்னூலாக கிட்டத்தட்ட 1000 முறை தரவிறக்கப்பட்டுள்ளது.

''நான் சொன்னா கேட்பியா மாட்டியா'  என்றால் உடனே கேட்கும் ஆட்களில் மிகமுக்கியமானவர் செங்கோவி. இவரை எனக்கு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக அறைத்தோழனாக, நண்பனாக , சக எழுத்தாளராக தெரியும்.  விட்ட இடத்தில் இருந்து தொடரக்கூடிய நட்பு இவருடையது.  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என , இந்த முன்னெடுப்பைப் பற்றி செங்கோவியிடம் விளக்குகையில் , அவரின் 'மன்மதன் லீலைகள் ( என் கிழிந்த டைரியில் இருந்து)' நாவலை மின்னூலாக தர,  உடனே சம்மதம் தெரிவித்தார். இரண்டே நாட்களில் சீனிவாசன் உதவியுடன் மின்னூல் தயாரானது.

நாவலாசிரியருடன் நானும் ஒரு கதாபாத்திரமாக நாவலில் வருவதால் , நாவலை விமர்சிப்பதோ பாராட்டுவதோ முறையாக இருக்காது.  சலிப்பைத் தராத ஆட்டோபிக்சன். படித்துப் பாருங்கள். பாராட்டோ திட்டோ செங்கோவியிடம் தெரிவித்து விடுங்கள்.


மின்னூலைத் தரவிறக்க http://freetamilebooks.com/ebooks/manmathan-leelaigal/