Sunday, October 27, 2013

பேஸ்புக் - பொழுதுபோக்கு குட்டிக் கதை


காட்சி - 1

அம்மு :- 'யாருடா கார்த்தி அந்தப் பொண்ணு, அடிக்கடி உன் போஸ்ட் களுக்கு லைக் கமெண்ட் எல்லாம் போடுறா ?" 

கார்த்தி :- 'எந்த பொண்ணுடா அம்மாடி, நிறைய பொண்ணுங்க என் பக்கம் வருவாங்களே ' 

அம்மு :- "அதுதான் அபிராமி-அபிராமி அப்படின்னு ஒருத்தி வந்து கமெண்ட் போடுவாளே , அவள் யாரு? "

கார்த்தி :- "அதுவா , அந்தப் பொண்ணு என்னோட ரசிகை , எழுத்துக்கு மட்டும், நீ கண்டுக்காதே "


காட்சி - 2

அம்மு :- "ஏன்டா கார்த்தி, என்னை பிலாக் பண்ணிட்ட ... "

கார்த்தி :- "சும்மா நொய் நொய் நு கேள்வி கேட்டுட்டு இருந்தீன்னா அப்படித்தான் "

அம்மு :- "அப்போ சரி, நீ உன் உன் கடலை கேர்ல்ஸ் கூட happy ya இரு, நான் பேஸ்புகில் இருந்தால் தானே கேள்வி எல்லாம் வருது, நானே டி - ஆக்டிவேட் செஞ்சுட்டு பேஸ் புக்கு விட்டுட்டு போய்டுறேன் "
காட்சி - 3

கார்த்தி :- "தங்கம்முலு , நான் பேஸ்புக்கில ஒரு ஆர்டிக்கிள் போட்டு இருக்கேன் பாரு ... செம கைத்தட்டு கிடைச்சிட்டு இருக்கு நான் உன்னை அன்-பிலாக் பண்றேன் .. நீ பாரேன் "

அம்மு:- ",போடா நாயே ... என்னை நீ பிலாக் பண்ண பிறகு டி ஆக்டிவேட் பண்ணிட்டேன்"

கார்த்தி :- " சரி, நான் என்னோட வேற ஒரு ஐடி தரேன்.. அதுல பாரு "

அம்மு :- "சரி சொல்லித் தொலை ..."

கார்த்தி :- " abhirami-abhirami@*****.com பாஸ்வேர்ட் உன்னோட பேரு தான் "