ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் - சிறுகதை
மண்டப எழுத்தாளர் "சிக்ஸ்த் சென்ஸ் " எழுதி அனுப்பிய ஒரு சிறுகதை
---
ஸ்மார்ட்போன் அப்ளிகெஷன்ஸ் உருவாக்குகின்ற நிறுவனங்கள் எல்லாம் ஒன்று கூடி "இந்தியாவில் , குறிப்பாக தமிழர்கள் , ஏன் அதிக அளவில் காசு கொடுத்து கையடக்க கணினிகளில் மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதில்லை ... அதனால் அவர்களை கவரும் வகையில் ஓர் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும், அதன் மூலம் மிகுந்த லாபம் வர வேண்டும் " என பலத்த விவாதம் செய்தார்களாம்.
நல்ல ஐடியா வைத் தருபவர்களுக்கு மிகுந்த சன்மானம் உண்டு என அவரவர் நிறுவன ஊழியர்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது
கிரிக்கெட், மதம், அரசியல், தமிழ்த் தேசியம் , சினிமா என பலத் தளங்களில் ஐடியா வந்தன. ஆனால் வந்த ஐடியாக்களில் ஒன்று மட்டும் கேலி பேசப்பட்டது . அது அடுத்தவரின் ஜாதி அறியும் அப்ப்ளிகேஷன்.
அடுத்தவரின் பெயர், ஊர், தாத்த பெயர், தாய் மொழி, இட ஒதுக்கீடு பிடிக்குமா பிடிக்காதா, கீழ் கண்டவர்களின் பிடித்த தலைவர் யார் கீழ் கண்டவர்களில் பிடிக்காத தலைவர் யார், அறிய வேண்டியவர் அடிக்கடி பேசும் வழக்கு சொற்கள் , கடைசியாக ஜாதி அறிய வேண்டுபவரின் சமூக வலைத் தள முகவரி, என இவற்றை எல்லாம் கொண்டு உள்ளீட செய்யப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து ஜாதி அறியும் அல்காரிதம் எழுதப்பட்டு, அப்ளிகேஷன் உருவாக்கப்படும் என்பதாக இருந்தது.
பெரியாரின் திராவிட பூமியில் இது சாத்தியமே இல்லை, இதை தமிழ்நாட்டில் குப்பைக் கூடைக்குள் வீசி விடுவார்கள் என்றனர் சிலர்
இருந்தாலும் போனால் போகிறது எனறு ஜாதி அப்ளிகெஷனும் ஏற்றுக் கொள்ளப் பட்டது
கலைஞர் சார்ந்த அரசியல் அப்ளிகேஷன் , சீமான் சார்ந்த தமிழ்த் தேசிய அப்ளிகேஷன் , சூப்பர் கிங்ஸ் சம்பந்தப் பட்ட அப்ளிகேஷன் எல்லாவற்றையும் காட்டிலும் ஜாதி அப்ளிகேஷன் செம சக்சஸ் .அவற்றை வாங்கியவர்களில் நிறைய பேர் , ஜாதி அப்ளிகேஷனையும் சேர்த்தே வாங்கினர்
புதிதாக காதலிப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள், அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் கூட்டுபவர்கள் , கம்பெனிகளுக்கு வேலைக்கு நியமனம் செய்பவர்கள் என கோடிக்கணக்கில் அந்த ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் டவுன் லோட் செய்தனர் . அப்ளிகேஷன் எழுதியவர் பணக்காரர் ஆனார். நிறுவனம் மகிழ்ந்தது. இதை ஆரம்பித்தில் நிராகரித்தவர்கள் துறவறம் போனார்கள். எல்லவாற்றையும் பெரியார் பார்த்துக் கொண்டு கோவிலில் சிலையாக சிரித்துக் கொண்டு இருந்தார்.
---
ஸ்மார்ட்போன் அப்ளிகெஷன்ஸ் உருவாக்குகின்ற நிறுவனங்கள் எல்லாம் ஒன்று கூடி "இந்தியாவில் , குறிப்பாக தமிழர்கள் , ஏன் அதிக அளவில் காசு கொடுத்து கையடக்க கணினிகளில் மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதில்லை ... அதனால் அவர்களை கவரும் வகையில் ஓர் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும், அதன் மூலம் மிகுந்த லாபம் வர வேண்டும் " என பலத்த விவாதம் செய்தார்களாம்.
நல்ல ஐடியா வைத் தருபவர்களுக்கு மிகுந்த சன்மானம் உண்டு என அவரவர் நிறுவன ஊழியர்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது
கிரிக்கெட், மதம், அரசியல், தமிழ்த் தேசியம் , சினிமா என பலத் தளங்களில் ஐடியா வந்தன. ஆனால் வந்த ஐடியாக்களில் ஒன்று மட்டும் கேலி பேசப்பட்டது . அது அடுத்தவரின் ஜாதி அறியும் அப்ப்ளிகேஷன்.
அடுத்தவரின் பெயர், ஊர், தாத்த பெயர், தாய் மொழி, இட ஒதுக்கீடு பிடிக்குமா பிடிக்காதா, கீழ் கண்டவர்களின் பிடித்த தலைவர் யார் கீழ் கண்டவர்களில் பிடிக்காத தலைவர் யார், அறிய வேண்டியவர் அடிக்கடி பேசும் வழக்கு சொற்கள் , கடைசியாக ஜாதி அறிய வேண்டுபவரின் சமூக வலைத் தள முகவரி, என இவற்றை எல்லாம் கொண்டு உள்ளீட செய்யப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து ஜாதி அறியும் அல்காரிதம் எழுதப்பட்டு, அப்ளிகேஷன் உருவாக்கப்படும் என்பதாக இருந்தது.
பெரியாரின் திராவிட பூமியில் இது சாத்தியமே இல்லை, இதை தமிழ்நாட்டில் குப்பைக் கூடைக்குள் வீசி விடுவார்கள் என்றனர் சிலர்
இருந்தாலும் போனால் போகிறது எனறு ஜாதி அப்ளிகெஷனும் ஏற்றுக் கொள்ளப் பட்டது
கலைஞர் சார்ந்த அரசியல் அப்ளிகேஷன் , சீமான் சார்ந்த தமிழ்த் தேசிய அப்ளிகேஷன் , சூப்பர் கிங்ஸ் சம்பந்தப் பட்ட அப்ளிகேஷன் எல்லாவற்றையும் காட்டிலும் ஜாதி அப்ளிகேஷன் செம சக்சஸ் .அவற்றை வாங்கியவர்களில் நிறைய பேர் , ஜாதி அப்ளிகேஷனையும் சேர்த்தே வாங்கினர்
புதிதாக காதலிப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள், அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் கூட்டுபவர்கள் , கம்பெனிகளுக்கு வேலைக்கு நியமனம் செய்பவர்கள் என கோடிக்கணக்கில் அந்த ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் டவுன் லோட் செய்தனர் . அப்ளிகேஷன் எழுதியவர் பணக்காரர் ஆனார். நிறுவனம் மகிழ்ந்தது. இதை ஆரம்பித்தில் நிராகரித்தவர்கள் துறவறம் போனார்கள். எல்லவாற்றையும் பெரியார் பார்த்துக் கொண்டு கோவிலில் சிலையாக சிரித்துக் கொண்டு இருந்தார்.