Thursday, December 13, 2012

ஒமேகா கவிதைகள் - (கவிதை முயற்சி)

அம்முவும் இணையமும் அற்றத் தருணங்களில் உதித்த கண நேரக் கவிதைகளின் தொகுப்பு இங்கே !!!
---
சுக்கிரச்சாரியர்கள் அழிவதில்லை 
இந்திரர்களும் அழிவதில்லை 
தீர்வு இதற்குள் தான் 
ஒளிந்திருக்கிறது !!
---

நிறம் கருப்பு; ஊர் மன்னார்குடி;
தேவரா ! எனக்கேட்டான் ஒருவன் ...
கம்யூனிஸ்ட் பெரியார் பார்த்த மற்றவன் 
தேவேந்திரரா ! என்றான் 
குருக்கள் என்றேன் 
கேட்டவனெல்லாம் அடிமையானான் !!

---
தினமும் சுவாசிக்கின்றேன் !!
ஒரு நாளும் சலித்ததில்லை ...
உன்னைப் பார்ப்பதைப் போலவே !!
---
இலக்கியம் - 
கதைக்கும் கவிதைக்கும் இடையில் வரும் காதல் !!
---

உன் சிதறிய வார்த்தைகளை
எடுக்கிறேன்,
கோர்க்கிறேன்,
தானாகவே எழுதிக் கொள்கிறது
கவிதையாக !! 
(எங்கேயோப் படித்ததை செதுக்கியது )

---

யுகங்களுக்கு ஆண்டுகளில் கணக்கு சொன்னவர்கள் பொய்யர்கள் !! 
அவர்கள் காதலித்து இருந்தால்
நொடிகளில் சொல்லி இருப்பார்கள் !!

--- 

பிசாசுகளுக்கு தேவதைகள்
பிறப்பதைப் போல !!.
மனைவிகளுக்கு குழந்தைகள் 
பிறக்கின்றன!! 
தேவதைகளுக்காக பிசாசுகளை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!! - ஆதர்ச அப்பாக்களின் பார்வையில் இருந்து (கருத்து நான் - எழுத்து ஜென்Ashok)

---
சேர்ப்பதில் மட்டும் அல்ல கவிதையின் ஆழம் ... 
வார்த்தைகளை நீக்குவதிலும் தான் !! 
வாழ்க்கையைப் போலவே !!

---

குழூஉக்குறிகள் சுவாரசியத்தை இரட்டிப்பாக்கும்
ஒரு விரல் வைத்து ஓராயிரம் முத்தங்கள் கொடுப்பது 
உனது “லைக்குகள்” மட்டும் !! - முத்தங்களை வாங்க மட்டுமே தெரியும் !! 
பெறுவதிலேயே கொடுக்கப்பட்டும் விடுவதால்
தனியாக வழங்கவேண்டும் என்பதில்லை. 
அவள் கொடுப்பதை நிறுத்தினாள், நான் ஆரம்பித்துவிட்டேன்!!! 
குழூஉக்குறிக்களாக !!!