ஒமேகா கவிதைகள் - (கவிதை முயற்சி)
அம்முவும் இணையமும் அற்றத் தருணங்களில் உதித்த கண நேரக் கவிதைகளின் தொகுப்பு இங்கே !!!
---
சுக்கிரச்சாரியர்கள் அழிவதில்லை
இந்திரர்களும் அழிவதில்லை
தீர்வு இதற்குள் தான்
ஒளிந்திருக்கிறது !!
இந்திரர்களும் அழிவதில்லை
தீர்வு இதற்குள் தான்
ஒளிந்திருக்கிறது !!
---
நிறம் கருப்பு; ஊர் மன்னார்குடி;
தேவரா ! எனக்கேட்டான் ஒருவன் ...
கம்யூனிஸ்ட் பெரியார் பார்த்த மற்றவன்
தேவேந்திரரா ! என்றான்
குருக்கள் என்றேன்
கேட்டவனெல்லாம் அடிமையானான் !!
தேவரா ! எனக்கேட்டான் ஒருவன் ...
கம்யூனிஸ்ட் பெரியார் பார்த்த மற்றவன்
தேவேந்திரரா ! என்றான்
குருக்கள் என்றேன்
கேட்டவனெல்லாம் அடிமையானான் !!
---
தினமும் சுவாசிக்கின்றேன் !!
ஒரு நாளும் சலித்ததில்லை ...
உன்னைப் பார்ப்பதைப் போலவே !!
ஒரு நாளும் சலித்ததில்லை ...
உன்னைப் பார்ப்பதைப் போலவே !!
---
இலக்கியம் -
கதைக்கும் கவிதைக்கும் இடையில் வரும் காதல் !!
---
உன் சிதறிய வார்த்தைகளை
எடுக்கிறேன்,
கோர்க்கிறேன்,
தானாகவே எழுதிக் கொள்கிறது
கவிதையாக !!
எடுக்கிறேன்,
கோர்க்கிறேன்,
தானாகவே எழுதிக் கொள்கிறது
கவிதையாக !!
(எங்கேயோப் படித்ததை செதுக்கியது )
---
யுகங்களுக்கு ஆண்டுகளில் கணக்கு சொன்னவர்கள் பொய்யர்கள் !!
அவர்கள் காதலித்து இருந்தால்
நொடிகளில் சொல்லி இருப்பார்கள் !!
---
பிசாசுகளுக்கு தேவதைகள்
பிறப்பதைப் போல !!.
மனைவிகளுக்கு குழந்தைகள்
பிறக்கின்றன!!
தேவதைகளுக்காக பிசாசுகளை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!! - ஆதர்ச அப்பாக்களின் பார்வையில் இருந்து (கருத்து நான் - எழுத்து ஜென்Ashok)
பிறப்பதைப் போல !!.
மனைவிகளுக்கு குழந்தைகள்
பிறக்கின்றன!!
தேவதைகளுக்காக பிசாசுகளை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!! - ஆதர்ச அப்பாக்களின் பார்வையில் இருந்து (கருத்து நான் - எழுத்து ஜென்Ashok)
---
சேர்ப்பதில் மட்டும் அல்ல கவிதையின் ஆழம் ...
வார்த்தைகளை நீக்குவதிலும் தான் !!
வாழ்க்கையைப் போலவே !!
வார்த்தைகளை நீக்குவதிலும் தான் !!
வாழ்க்கையைப் போலவே !!
---
குழூஉக்குறிகள் சுவாரசியத்தை இரட்டிப்பாக்கும்
ஒரு விரல் வைத்து ஓராயிரம் முத்தங்கள் கொடுப்பது
உனது “லைக்குகள்” மட்டும் !! - முத்தங்களை வாங்க மட்டுமே தெரியும் !!
பெறுவதிலேயே கொடுக்கப்பட்டும் விடுவதால்
தனியாக வழங்கவேண்டும் என்பதில்லை.
அவள் கொடுப்பதை நிறுத்தினாள், நான் ஆரம்பித்துவிட்டேன்!!!
குழூஉக்குறிக்களாக !!!