Saturday, August 14, 2010

நாக்ருதனா திரன்னனா நா


இளையராஜா, தனது கர்நாடக சங்கீத குருவான டி.வி.கோபாலகிருஷ்ணனை டிக் டிக் டிக் திரைப்படத்தில் கதையின் மூன்று நாயகிகளையும் ஒரே காட்சியில் நீச்சலுடைகளில் மிதக்கவிட்ட இது ஒரு நிலாக்காலம் பாடலின் இடையில் வரும் மாதவியின் நாட்டியத்திற்கு நாக்ருதனா திரன்னன வரிகளைப் பாடச் சொல்லி இருக்கும்பொழுது , அது பிற்காலத்தில் ஜொள்ளுக்கான இசையாக மாறி விடும் என நினைத்தே பார்த்து இருக்க மாட்டார். டி.வி.கோபாலகிருஷ்ணனின் குரலை பிற்பாடு அந்தி மழை பொழிகிறது இடையினில் பயன்படுத்தி இருப்பார்

அமெரிக்க ஜனாதிபதியின் நெஞ்சினில் பாய்ந்த குண்டை எடுக்க கண்டுபிடிக்கப்பட்ட மெட்டல் டிடெக்டர் பிற்பாடு பாதுகாப்பு கருவிகளில் முக்கியமான ஒன்றாக மாறியதைப்போல நாக்ருதனா மெட்டும் எதிர்பாராத விதத்தில் பிரபல்யம் அடைந்தது.




80 களின் மத்தியில் பக்யராஜின் (டிக்டிக்டிக் படத்திற்கு திரைக்கதை பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது) இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் , நாயகன் வேறு பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம், இளையராஜா இந்த மெட்டை பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருந்ததோடு மட்டுமல்லாமல் மச்சமுள்ள ஆளுட பாடலின் இடையிலும் சேர்த்து இருப்பார்.





கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்தில் கதையின் நாயகர்களில் ஒருவரான வைபவ் பெண்களைப் பார்த்து சலனப்படும் பொழுதெல்லாம் வரும் இசைக்கோர்வையாக மீள்பதிவு செய்யப்பட்டு இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைபேசி அழைப்பு மணியாக ஆகிவிட்டது.




கடைசியாக ஆன்மீகக் கதவுகளைத் திறந்து கடலைக் காற்றாய் இந்த 30 வினாடிகள் ஓடும் நாக்ருதனா திரன்னனா நா வரிகள் நான்காவது முறை நக்கீரனின் பார்வையால் ஜென்ம சாபலயம் அடைந்தது.

15 பின்னூட்டங்கள்/Comments:

said...

indha episode il neenga yenna kuraninakurirgal ????

said...

நாக்ருதனாவில் ஒரு நல்ல ஆராய்ச்சி

said...

:))))

ரிங் டோன் கிடைச்சா அனுப்பி வையும்.

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி. சின்ன வீடு படத்தை விட கோவா படம் வந்த பிறகே மேலும் பிரபலம் அடைந்துள்ளது என எண்ணுகிறேன்.

said...

அப்பாடா!அபாரமான உழைப்பு!

said...

unga PG course final project thesis work la busy a iruppeengannu nenachen Anna. But intha research il busy a irukkeenga pola!!!

said...

good , innum unga kia intha tamil samuthayaa nirraiya ethirpaakuthu

said...

Nice investigation

Anonymous said...

:)இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பசங்க மட்டுமே பண்ணமுடியும் :)

said...

இதுக்கு இவ்வளோ பெரிய flash back உண்டா...

said...

இப்போது இந்த இசை உங்கள் காதுகளில் எப்போது எல்லாம் ஒலிக்கும் என எனக்கு தெரியும். :P
உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும்..............

said...

சுவீடனில் ஆராய்ச்சிப் படிப்பு என்று சொல்றது இதை தானோ... :)

said...

நிறைய விஷயங்ளை தேடி பதிவிட்டிருக்கிறீர்கள்.. நல்லாயிருக்கு

said...

நாக்ருதனா திரன்னனா திரன்னன திரன்னன திரன்னன....

Anonymous said...

Anna analum periyyyyyyyya kandupidippu tan....
he he