Saturday, November 14, 2009

நன்றி மனுஷ்யபுத்திரன் மற்றும் சாரு , சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தை சிலநாட்களாகப் படிக்கவில்லையே என இன்று திறந்தால் ஆச்சரியம் அதில் யோகன்பாரிஸ் அவர்களின் கடிதம், அதன் பின் தொடர்ச்சி மனுஷ்யபுத்திரனின் சக்கர நாற்காலி கவிதையில் வந்து நின்றது. கவிதையும் சாருவின் அந்தக் கவிதை தொடர்பான விளக்கமும் அருமை. சாரு சொன்னது போல அது சுயவிரக்க கவிதை கிடையாது. கலக அரசியல் கவிதை.

மனுஷ்யபுத்திரனின் கவிதை இங்கே

ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.

நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை

எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை

எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை

நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை

புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை

நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை

கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை

இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை

யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை

எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை

முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை





இது தொடர்பான சாருவின் கட்டுரை இங்கே

7 பின்னூட்டங்கள்/Comments:

said...

அருமையான பதிவு...பகிர்வும் கூட!பூங்கொத்து!

said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சார்

said...

:)))

said...

தம்பி!
அக் கவிதை, சாருவின் விமர்சனம்
யாவுக்கும் பதில் கூறும் தகமை உங்களுக்கே உண்டென நான் நினைக்கிறேன்.

said...

hugs


:)

said...

:-)

said...

பிரமாதம்