1992 ஆம் ஆண்டு செய்யத் தவறியதை 2008ல் செய்து முடித்த டெண்டுல்கர்
கிரிக்கெட் எப்போதும் ஏற்றத்தாழ்வுகளைத் தானே சரி செய்துவிடும் சமனி என்பதை மீண்டும் ஒருமுறை டெண்டுல்கர் ரூபத்தில் நிறுபித்துவிட்டது. 16 வருடங்களுக்கு முன்னர் இதே சிட்னி மைதானத்தில் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் செய்யத்தவறியதை , இன்று மார்ச் 2, 2008 அன்று டெண்டுல்கர் சதமடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் வெற்றியை உறுதிச்செய்தார்.
தற்போது காமன்வெல்த் பேங்க் தொடராக நடைபெறும் இப்போட்டித்தொடர் 1992 ஆம் ஆண்டு, பென்சன் & ஹெட்ஜஸ் உலகத்தொடராக நடந்தது. இந்தத் தொடரின் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவிச்சால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 208 ரன்னுக்கு மட்டுப்படுத்தியது. இலக்கைத் துரத்தி ஆடிய இந்தியா, ரவிசாஸ்திரி, டெண்டுல்கரின் நிதானமான ஆட்டத்தால் 190/5 என்ற நிலையில் வெற்றிக்கு 16 பந்துகளில் 19 ரன்கள் அடித்தால் வெற்றி இருந்தது. மறுமுனையில் பிரவீன் ஆம்ரே இருக்க, டெண்டுல்கர் ஸ்டீவன் வாக் இன் பந்தைத் தூக்கி அடிக்க பந்து நேராக மைக்கெல் விட்னி கையில் தஞ்சம் புக , முடிவில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.அந்த ஆட்டத்தின் காணொளி இங்கே
1992 ஆட்டத்தின் ஆட்டவிபரம் இங்கே
அன்றில் இருந்து இலக்கைத் துரத்தும் ஆட்டங்களில் டெண்டுல்கர் சோபிப்பதில்லை. சோபித்தாலும் ஆசை காட்டி மோசம் செய்து விடுவார் என்ற விமர்சனம் அவ்வப்போது எழும். உடனே டெண்டுல்கரின் பரமவிசிறிகள் ஷார்ஜாவில் காட்டடி அடித்து ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்ததை உதாரணம் காட்டுவார்கள்.எதிர்விவாதங்களில் சென்னை டெஸ்ட் போட்டியை டெண்டுல்கரின் விமர்சகர்கள் இன்னமும் விடுவதில்லை. உண்மை என்னவெனில் டெண்டுல்கர் ஆடும்போது முன்பெல்லாம் டெண்டுல்கர் மட்டுமே ஆடுவார். அப்படியே பெரும்பாலும் அமைந்துவிடுவதால் டெண்டுல்கர் ஆட்டமிழந்தவுடன் , இந்தியாவும் மூட்டை கட்டும். கடந்த சிலவருடங்களாக இலக்கை வெற்றிகரமாக துரத்திய ஆட்டங்களில் ஏனைய ஆட்டக்காரர்களும் பொறுப்பை உணர்ந்து ஆடுவதால் சுவாரசியமான வெற்றிகளை அவ்வப்போது இந்தியா அணி ருசிக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டெண்டுல்கருடன் மறுமுனையில் ஆடிய ரோகித்சர்மா நேர்த்தியான ஆட்டத்தை ஆடியதால், mission accomplished successfully. டெண்டுல்கரின் ஆஸ்திரேலியாவில் ஒரு நாள்போட்டிகளில் முதற்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசிவரை இருந்து வெற்றியைப்பெற்று தந்த சதம் டெண்டுல்கருக்கு மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் என்றும் இருக்கும்.
வரலாறு திரும்பும் ,,ஆனால் திரும்பும்போது இரண்டாவது முந்தையதைப்போல அல்லாமல் சாதகமாகவும் அமையும் என்பதற்கு இன்றை வெற்றி ஒரு உதாரணம்.
ஆட்டவிபரம் இங்கே
6 பின்னூட்டங்கள்/Comments:
நல்ல பதிவு வினையூக்கு!
ஆஸி மண்ணில் முதல் சதமடித்ததோடு மட்டுமின்றி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கும் இட்டுச் சென்ற தெண்டுல்கருக்கு நம் வாழ்த்துக்களைச் சொல்வதில் தவறில்லை!
இந்திய கிரிக்கெட் கடவுள் வாழ்க!!!!!!!!
நல்ல அலசல்.
ரோஹித் சர்மாவின் ஆட்டம் அசத்தல். வருங்காலத்தில் இவர் சிறந்த ஆட்டக்காரராக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை
நடசத்திரமானதற்கு வாழ்த்துக்கள் வினையூக்கி !!!
சொல்லவே இல்லை :)
நட்சத்திர வாழ்த்துக்கள் வினை,
ஜொலிக்கட்டும் நட்சத்திரம்!!!
திவ்யா.
நேற்றைய நட்சத்திரம் டெண்டுல்கர்!!
இன்றைய நட்சத்திரம் வினையூக்கி!!
நட்சத்திர வாழ்த்துகள்!!!!
Post a Comment