Wednesday, March 21, 2007

கனவே கலையாதே - சிறுகதை

"காதல் சொன்ன கணமே!அது கடவுளைக் கண்ட கணமே" மூன்றாவது முறையாக மொபைல் பாட ஆரம்பித்தது. கனவா நினைவா என்று சொல்ல முடியாத ஒரு கனவுக் கலைந்து மொபைலை தேடி எடுத்தேன். . ஜெனிக்கான ஸ்பெஷல் ரிங் டோன் இது,

"ஹலோ ஜெனி, போஞ்ஜூர்"


"கார்த்தி, போன் ஜூர் இல்லை, பேட் ஜூர்.. நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல, மற்றவர்களைக்காட்டிலும் உன்னை அதிகம் பிடித்தது, உன்னோட இயல்பா இருக்கிற குணம்தான், ஆனால் நீயும் எல்லாப் பசங்க மாதிரிதான்னு நிருபிச்சுட்ட! உனக்கு எப்படி இவ்வளவு சந்தேக குணம் வந்தது, என்னோட சுதந்திரத்தில் தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை. நல்ல வேளை உன்னைப் பத்தி எனக்கு இப்போவே தெரிஞ்சது, தாங்க் காட், உனக்கும் எனக்கு இனி எந்தவொரு சம்பந்தமுமில்லல என சொல்லதான் போன் பண்ணேன், குட் பை" எனச் சொல்லி மொபைலை கட் பண்ணினாள்.

மணி பார்த்தேன், 11.20 காட்டியது. ரொம்ப நேரம் தூங்கிட்ட மாதிரி இருந்தாலும், இன்னும் தூக்கம் கண்ணை சொக்குது, ஜெனி இப்படி சொன்னதைக் காட்டிலும் தூங்குறப்ப வந்த கனவுதான் நெருடலா இருக்கு.

நேத்து நான் தான் ஜெனியை பெங்களூருக்கு மதிய டிரெயினில் ஏற்றி விட்டு வந்தேன். நல்லாதான் பேசினோம். வழக்கமான சண்டை எதுவும் இல்லை. பிறகு எதுக்கு இப்போ கூப்பிட்டு திட்டுறாள். ஒன்னுமே புரியலையே. செண்டரல் இருந்து நேரா ஆபிஸ் போய்ட்டு, கொஞ்சம் வேலை பார்த்துட்டு, பின் வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன்.

ஒன்னுமே புரியலியே, ஒரு வேளை இந்தக் கனவுக்கும் ஜெனி இப்படி சொன்னதுக்கும் சம்பந்தம் இருக்குமோ? ஏன்னா கனவிலேயும் ஜெனி அவளோட கசின் முன்ன கிட்டத்தட்ட இப்படித்தான் திட்டினாள்.

அப்படியே கண் திரும்ப சொக்க ஆரம்பித்தது, வெள்ளையா ஒரு உருவம் , புகை மூட்டமா பேச ஆரம்பித்தது.

"கார்த்தி, நேற்றிரவு என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரிஞ்சுக்க ஆசையா!!"

"யெஸ்"

"இப்போ நேற்றைய இரவுக்கு போகப் போற"

தலை சுற்ற ஆரம்பித்தது, ஜெயண்ட் வீல் போனால் ஏற்படுற உணர்வு.

ரயில் நிலைய அறிவிப்பு கன்னடத்தில், கடவுளே, நான் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருக்கிறேன். சில்லென குளிர் அடித்தது. ஆம் நான் ரத்தமும் சதையுமாய் முழுமையாக ஒரு இரவு பின்னோக்கி வந்துள்ளேன்.

சென்னையிலிருந்து வரும் ரயில் பிளாட்பாரத்தை அடைகிறது, ஜெனி ஏ/சி கோச்சிலிருந்து இறங்குகிறாள். அவள் கண்கள் யாரையோ தேடுகிறது. தூரத்தில் ரெமொ ஸ்டைலில் ஒருவன் ஓடி வருகிறான். இவளும் அவனைப் பார்த்து சந்தோசத்துடன் கையாட்டுகிறாள்.

அவன் இவளின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொள்கிறான். நான் அவர்களை நோக்கி வேகமாக நடக்க, ஒரு போர்ட்டர் என் மேல் இடித்துவிட்டு என்னைக் கன்னடத்தில் திட்டுவிட்டுப் போனான். அதைக் கவனித்த ஜெனி என்னருகில் வந்தாள்.

"கார்த்தி, நீ எப்படி இங்க, நான் தான் சொன்னேனே, நீ வராதேன்னு, நான் இங்க என்ன பண்ணப்போறேன்னு ஃபாலோ பண்றியா!!!" பிரென்சு, இங்கிலிஷ் எல்லா பாஷையிலேயும் திட்டிவிட்டு அந்த ரெமோவுடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள். கண்கள் சொருக பிளாட்பார சேரில் அப்படியே சரிந்தேன்.

"காதல் சொன்ன கணமே!அது கடவுளைக் கண்ட கணமே" மூன்றாவது முறையாக மொபைல் பாட ஆரம்பித்தது. கனவா நினைவா என்று சொல்ல முடியாத ஒரு கனவுக் கலைந்து மொபைலை தேடி எடுத்தேன். . ஜெனிக்கான ஸ்பெஷல் ரிங் டோன் இது,

"ஹலோ ஜெனி, போஞ்ஜூர்"

8 பின்னூட்டங்கள்/Comments:

Anonymous said...

one more recursive loop?

வினையூக்கி said...

Yes, you are correct RMP

siva gnanamji(#18100882083107547329) said...

போஞ்ஜுர்

வினையூக்கி said...

நன்றி சிவஞானம்ஜி ஐயா

சீனு said...

பார்றா...

வினையூக்கி said...

ஹிஹிஹி நன்றி சீனு

none said...

Bounjour எல்லாம் okay தான்.

Où est la réponse pour ma question dans votre histoire précédente ?

வினையூக்கி said...

தங்க்யூ பூர்னிமா