"Mankad'ed" ரன் அவுட்டும் கபில்தேவின் ஆவேசமும்
கிரிக்கெட்டில் ஒரு ஆட்டக்காரரை ஆட்டமிழக்க செய்யும் முறைகளில் ஒன்று “Mankad'ed run out". அதாவது பந்து வீசப்படும் முனையில் இருக்கும் ஆட்டக்காரர் பந்துவீச்சாளர் பந்தை வீசும் வரை மட்டை கோட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி வெளியேறினால் நடுவர் நிற்கும் பக்கத்தில் இருக்கும் விக்கெட்டுகளை தட்டிவிட்டு அந்த மறுமுனை ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இந்தியாவின் வினு மன்காட் 1947- 48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஆல்பிரட் வில்லியம் பிரவுனை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதில் இருந்து இந்தவகையான ஆட்டமிழக்க செய்யும் முறைக்கு "Mankad'ed " ரன் அவுட் என்ற பெயர் தரப்படுகிறது.
பெரும்பாலும் இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சாளர்கள் தயங்குவார்கள். எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவார்கள்.
87 உலகக் கோப்பையின்போது லாகூரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி, கைவசம் ஒரு விக்கெட் இருக்க , கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சலீம் ஜபார் கோட்டை விட்டு வெகுதூரம் ஓடிவிட , அவரை வால்ஷ் ஆட்டமிழக்க செய்யாமல் எச்சரித்துவிட்டு கடைசி பந்தை வீசினார். அந்த பந்தில் அப்துல் காதிர் இரண்டு ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்தார். வால்ஷின் பெருந்தன்மை இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.
ஆனால் பலமுறை எச்சரித்தும் கேட்காத மட்டையாளர்களை இவ்வகையில் ஆட்டமிழக்கச் செய்த சம்பவங்களும் கிரிக்கெட் வரலாற்றில் உண்டு. நியுசிலாந்து அணியின் தீபக் பட்டேல் ஒரு முறை ஜிம்பாப்வே அணியின் கிராண்ட் பிளவரை இந்த வகையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் பீட்டர் கிறிஸ்டன் கபில்தேவின் எச்சரிக்கைக்களைத்
தொடர்ந்து அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்ததால் கடுப்பாகிப் போன கபில்தேவ் மன்காடட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். பொதுவாக சாந்தமாக இருக்கும் கபில்தேவ்
ஆவேசப்படும் வீடியோ தான் கிழே இருப்பது.
கிரிகின்போ தளத்தில் மன்காடட் ரன் அவுட் முறைப் பற்றியக் கட்டுரை இங்கே
நன்றி : யூடியூப்.கோம்