Monday, March 24, 2014

ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம்

'டாக்டர், என் பேர் கீர்த்தனா, ஐடி ல வொர்க் பண்றேன்'
'சொல்லுங்க கீர்த்தனா , என்ன பிராப்ளம்'
'இப்பொவெல்லாம் நடுராத்திரில காதுக்குள்ள டைப்படிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலையுது டாக்டர்'
'காலையிலேந்து , கம்ப்யூட்டர், லேப்டாப் என டைப்பிங் என்விரான்மென்ட்ல இருப்பதுனால அந்த பிரமையிருக்கலாம்'
'பர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன் டாக்டர், பட் இது நிறைய கம்ப்யூட்டர்ஸ் ல அடிக்கிற டைப்பிங் சவுன்ட் கிடையாது, ஒரு கம்ப்யூட்டர்ல பொறுமையா பத்து கீஸ்ட்ரோக்ஸ் அடிச்சா இருக்குமே அப்படி கேட்குது, அப்புறமா நின்னுடுது'
'பகல்ல இதுமாதிரி கேட்டிருக்கா'
'வீக்டேஸ்ல தெரியல டாக்டர், வீக் என்ட்ஸ்ல , காதுக்குள்ள டைப்படிக்கிறமாதிரி கேட்டிருக்கு, இதோ இப்பக்கூட கேட்குது டாக்டர்'
பல மைல்கள் தொலைவில், அமெரிக்காவின் ஒரு மூலையில் , விடிந்ததும் விடியாததுமாய் கார்த்தி, தனது மின்னஞ்சலுக்கான பாஸ்வேர்டை அடிக்க ஆரம்பித்தான்.  Keerthanaa