Wednesday, February 27, 2013

கடவுள் - சில ஒரு வரித்தொடர்கதைகளும் ஒரு அறிவியல் புனைவும், கூடவே ஒரு கவிதையும்


தொடர்கதை , காலம் காலமாய் தொடர்ந்த, தொடர்கின்ற, தொடரும் வினைத்தொகையாய் இருக்கும் மற்றொரு வினைத்தொகையான கட + உள் கடவுள் பற்றிய சில ஒரு வரிக்கதைகள் 
----
1. மனிதனிடம் தஞ்சம் புகுந்த முதல் அகதி - கடவுள்

2. மனிதனின் முதல் வளர்ப்புப் பிராணி கடவுள், மனிதன் காலங்காலமாய் அதற்கு தரும் பிஸ்கட் - பக்தி

3. மனிதன் உருவாக்கிய முதல் நகைச்சுவை கதாபாத்திரம் - கடவுள்

4. மனிதனின் முதல் ஊழல் - கடவுள்

 5. மனிதன் தன் இயலாமைக்கு வைத்த பெயர் - கடவுள்

6. மனிதனின் சோதனை எலி வேற்றுமதக் கடவுள் (எழுதியவர் டான் அசோக் - www.donashok.blogspot.com )

7. காரணமில்லாமல் சண்டையிட மனிதன் உருவாக்கிய காரணம் - கடவுள் (பாலராமன் - https://twitter.com/BalaramanL)

---


கொஞ்சம் அறிவியல் புனைவாய் ஒரு குட்டிக்கதை -  (நிஜமாகக் கூட இருக்கலாம்)

டைனோசரின் சிதிலமடைந்த சிலைக் கண்டுபிடிக்கப்பட்டது... உயிரியல் படிமங்கள் ஏதும் இல்லாததால் குழம்பிப்போயினர் ஆராய்ச்சியாளர்கள்...
பாவம் அவர்களுக்குத் தெரியாது , அது டைனோசர் காலத்துக் கடவுளின் சிலை என்று.

---

ஒரு கலகக்கவிதை 

காகங்கள் வெள்ளையாக இருக்காது என்றவன்அடித்து துவம்சம் செய்யப்பட்டான்
காலம் அவனை புறா சின்னத்துடன் கடவுள் ஆக்கியது ... 
இன்று அவன் சந்ததி, நாய் என நினைத்து ஓநாயைக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறது
நாய்கள் குழந்தை ரத்தம் குடிக்காது என்று ஓரத்தில் நின்று கத்திக் கொண்டிருக்கின்றேன்... அடிக்க நெருங்குகிறார்கள்... 
கவலை இல்லை , நாளை நானும் கடவுள் ஆகிவிடுவேன்.