ஸ்டீவ் பக்னரின் சரியான முடிவு
கடந்த சிலவாரங்களாக பிரச்சினைக்குரிய அல்லது விவாதத்திற்குரிய முடிவுகளைக் கொடுத்தமைக்காக அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் ஆட்ட நடுவர் ஸ்டீவ்பக்னர் ஒரு சரியான முடிவைக் கொடுத்துள்ளார். வங்காளதேசம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஆன தாகா டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிகா வீரர் ஏபி டி வில்லியர்ஸுக்கு எதிராக ஒரு ஆட்டவிதிகளுக்கு உட்பட்ட முடிவொன்றைக் கொடுத்துள்ளார்.
AB De villiers c & b Mohammad Ashraful 46
என்ற ஸ்கோர் கார்டு விபரத்தைப்பார்த்தோமானால் ஒரு விசயமும் புரியாமல் இருக்கலாம். எந்தவிதத்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார் என்று தெரிந்தது என்றால் சுவாரசியமாக இருக்கும்.
சுழற்பந்துவீச்சாளரான அஷ்ரபுல் வீசிய பந்து டிவில்லியர்ஸை அடையும் முன் இரு முறை தரையில் பட்டு அவரின் மட்டைக்கு வந்து சேர்ந்தது. அல்வா மாதிரி கிடைத்த பந்தை தூக்கி சிக்சருக்கு அடிக்க நினைத்த டிவில்லியர்ஸினால் அது முடியாமல் போக, பந்து மட்டையில் பட்டு நேராக அஷ்ரபுல் கையில் தஞ்சம் புகுந்தது.
வங்காள வீரர்கள் கொண்டாட ஆரம்பிக்க, டிவில்லியர்ஸ் ஆடுகளத்திலேயே நின்றார். ”நோ பால்” என அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து அவர் அங்கேயே இருக்க, வழக்கம்போல சிறிது நேரம் எடுத்துக்கொண்ட ஸ்டீவ் பக்னர் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார் என அறிவித்தார்.
”Law 24, section 6 states that the umpire shall call a no-ball only if it bounce more than twice before reaching the popping crease”
அஷ்ரபுல் இரண்டு முறை மட்டுமே பந்தை தரையில் பட வைத்ததால் விதிகளுக்கு உட்பட்டு அதை “நோ பால்” என அழைக்க முடியாது என முடிவு தெரிவித்தார்.
கடந்த தவறான முடிவுகளாலும் அதைத் தொடர்ந்து வந்த சம்பவங்களும் பக்னரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தாலும் , இந்த நுட்பமான , விதிகளுக்கு உட்பட்ட, விதிகளை ரசிகர்களுக்கும், ஆடுபவர்களுக்கும் நினைவுப்படுத்தும் வகையிலா முடிவு அவருக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்து இருக்கும்.
இந்த வீடியோவில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த முறையை 19வது நொடியில் இருந்து பார்க்கலாம்.
கிரிகின்போ தளசெய்தியையும் படிக்க இங்கு சொடுக்கவும்
3 பின்னூட்டங்கள்/Comments:
இது வித்தியாசமான பந்துவீச்ச்சா அல்லது கைதவறி விழுந்ததா?? :)
பக்னர் இந்திய அணிக்கு எதிராக மட்டும் தான் தவறான முடிவெடுப்பார். :)
@பொன்வண்டு
கைத்தவறி தான் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
@சஞ்சய்
:))))
Post a Comment