நண்பர்களின் பதிவுகள் - ஓர் அறிமுகம்
நமக்கு கைப்படாத விசயங்கள் மற்றவர்களின் திறமையாக வெளிப்படும்போது ஏனோ சற்று பொறாமையாகத்தான் இருக்கும். பல மணி நேரம் அமர்ந்து , மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் கவிதை மட்டும் கை வசம் ஆக மாட்டேன் என்கிறது. பொறாமையைத் தூரத்தள்ளிவிட்டு புதிதாக ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுத வந்திருக்கும் திரு.அன்பரசன் அவர்களின் கவிதைப் பதிவை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அவர் எழுதி இருந்த கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது
என் பார்வையின்
காமத்தை உதறிவிட்டு
காதலை மாத்திரம் எடுத்து கொள்ளும்
அதிசய அன்னம் நீ..!!!
http://themajusculetornado.blogspot.com/2009/07/1.html
மேற்கு ஐரோப்பாவில் புதிதாக வீடு தேடும் நபர்கள் எப்படி ஏமாற்றப்படலாம் என்பதைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய பதிவு ஐரோப்பாவிற்கு படிக்க/வேலை பார்க்க வரும் நண்பர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
http://themajusculetornado.blogspot.com/2009/07/my-recent-experience-with-scammer-not.html
-----
நண்பர் திரு.நிஹேவி அவர்கள் தனது கல்லூரி அனுபவங்களையும், சில திகில் கதைகளையும் எழுத ஆரம்பித்துள்ளார். அவரின் கடைசிப்பக்கம் என்ற சிறுகதையில், மெல்லிய ‘சஸ்பென்ஸ்' , மூட நம்பிக்கை, அமானுஷ்ய விசயங்களின் மேல் மனிதனுக்கு இருக்கும் விருப்பம், ஆன்மீகத்தை வியாபாரமாக்கும் போலிச்சாமியார் ஆகியோர்களை கோடிட்டு அழகாக எழுதி இருக்கின்றார்.
http://nihevi.blogspot.com/2009/07/blog-post.html
கார்ல்ஷாம் ஸ்டேசன் என்றக் கதையில் சுவீடனில் பகுதி நேர வேலைத் தேடுவதைப் பற்றி கூறியிருப்பது மெல்லிய புன்னகையை வரவழைக்கின்றது.
http://nihevi.blogspot.com/2009/07/blog-post_13.html
சுவீடனில் மேற்படிப்புப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவும் இவரைத் தொடர்பு கொள்ளலாம். இவரின் மின்னஞ்சல் முகவரி grashok4u@gmail.com
4 பின்னூட்டங்கள்/Comments:
நண்பர்களின் தளங்கள் பற்றிய பகிர்விற்கு நன்றி வினையூக்கி!
நன்றி உங்கள் பதிவிற்கு.....
நன்றி வினையூக்கியாரே...
தேவதைகளின் தேவதை தொகுப்பில் இடம் பெற்றது....
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகின்ற
அதிசய அன்னம் நீ
அட இது தபூ சங்கர் எழுதுனதுங்க.....
இருவருக்கும் ஒரே எண்ணச்சிந்தனை இருந்திருக்குமோ!!??
Post a Comment